என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்: குஜராத்தில் இன்று அடிக்கல் நாட்டப்பட்டது
Byமாலை மலர்16 Jan 2017 4:37 PM GMT (Updated: 16 Jan 2017 4:37 PM GMT)
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ரூ.700 கோடி செலவில் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
அகமதாபாத்:
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரின் மோதிரா பகுதியில் இருந்த சர்தார் பட்டேல் ஸ்டேடியம் 54 ஆயிரம் பேர் அமர்ந்து போட்டியை பார்க்கும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது. இதில் பல்வேறு சர்வதேச போட்டிகள் நடைபெற்றுள்ளன. மிக பழமையான இந்த ஸ்டேடியத்தை இடித்துவிட்டு உலகின் மிகப்பெரிய ஸ்டேடியமாக உருவாக்குவதற்கு முடிவு செய்யப்பட்டது. அதன்படி சமீபத்தில் அந்த ஸ்டேடியம் இடிக்கப்பட்டது.
இந்நிலையில், புதிய ஸ்டேடியம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. விழாவில் குஜராத் கிரிக்கெட் சங்க துணைத்தலைவர் பரிமள் நத்வானி மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினர். சுமார் 700 கோடி ரூபாய் செலவில் இந்த ஸ்டேடியத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இரண்டு ஆண்டுகளில் கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டு ஸ்டேடியம் தயாராகிவிடும் என குஜராத் கிரிக்கெட் சங்க துணைத்தலைவர் பரிமள் நத்வானி அறிவித்தார்.
90 ஆயிரம் பேர் அமரும் வசதி கொண்ட உலகின் மிகப்பெரிய ஸ்டேடியமாக உள்ள மெல்போர்ன் ஸ்டேடியத்தைவிட (ஆஸ்திரேலியா) மோதிராவில் அமைய உள்ள ஸ்டேடியம் மிகப்பெரியது. இதில், 1.10 லட்சம் இருக்கைகள் அமைக்கப்படும். மெல்போர்ன் ஸ்டேடியத்தை வடிவமைத்த நிறுவனம்தான் இந்த ஸ்டேடியத்தையும் வடிவமைக்கிறது என்றும் பரிமள் நத்வானி கூறினார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரின் மோதிரா பகுதியில் இருந்த சர்தார் பட்டேல் ஸ்டேடியம் 54 ஆயிரம் பேர் அமர்ந்து போட்டியை பார்க்கும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது. இதில் பல்வேறு சர்வதேச போட்டிகள் நடைபெற்றுள்ளன. மிக பழமையான இந்த ஸ்டேடியத்தை இடித்துவிட்டு உலகின் மிகப்பெரிய ஸ்டேடியமாக உருவாக்குவதற்கு முடிவு செய்யப்பட்டது. அதன்படி சமீபத்தில் அந்த ஸ்டேடியம் இடிக்கப்பட்டது.
இந்நிலையில், புதிய ஸ்டேடியம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. விழாவில் குஜராத் கிரிக்கெட் சங்க துணைத்தலைவர் பரிமள் நத்வானி மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினர். சுமார் 700 கோடி ரூபாய் செலவில் இந்த ஸ்டேடியத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இரண்டு ஆண்டுகளில் கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டு ஸ்டேடியம் தயாராகிவிடும் என குஜராத் கிரிக்கெட் சங்க துணைத்தலைவர் பரிமள் நத்வானி அறிவித்தார்.
90 ஆயிரம் பேர் அமரும் வசதி கொண்ட உலகின் மிகப்பெரிய ஸ்டேடியமாக உள்ள மெல்போர்ன் ஸ்டேடியத்தைவிட (ஆஸ்திரேலியா) மோதிராவில் அமைய உள்ள ஸ்டேடியம் மிகப்பெரியது. இதில், 1.10 லட்சம் இருக்கைகள் அமைக்கப்படும். மெல்போர்ன் ஸ்டேடியத்தை வடிவமைத்த நிறுவனம்தான் இந்த ஸ்டேடியத்தையும் வடிவமைக்கிறது என்றும் பரிமள் நத்வானி கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X