என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
கடைசி ஒருநாள் போட்டி: 281 ரன்னை சேஸிங் செய்து தொடரை கைப்பற்றுமா வங்காள தேசம்?
Byமாலை மலர்1 April 2017 2:58 PM IST (Updated: 1 April 2017 2:58 PM IST)
கொழும்பில் நடைபெற்று வரும் கடைசி ஒருநாள் போட்டியில் இலங்கைக்கு எதிராக 281 ரன்களை சேஸிங் செய்து தொடரை வங்காள தேசம் கைப்பற்றுமா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இலங்கை- வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் இன்று பகல் ஆட்டமாக தொடங்கியது. ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியில் வங்காள தேசம் வெற்றி பெற்றது. 2-வது போட்டி மழையினால் ரத்து செய்யப்பட்டது.
இதனால் இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி விடவேண்டும் என்ற நோக்கத்தில் வங்காள தேசம் களம் இறங்கியது. கட்டாயம் வெற்றி பெற்று தொடரை சமன் செய்து விடவேண்டும் என்ற நோக்கத்தில் இலங்கை அணி களம் இறங்கியது.
டாஸ் வென்ற வங்காள தேச அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி இலங்கை அணியின் குணதிலகா, உபுல் தரங்கா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 10.5 ஓவரில் 76 ரன்கள் சேர்த்தனர். குணதிலகா 38 பந்தில் 34 ரன்களும், தரங்கா 35 பந்தில் 35 ரன்களும் எடுத்து வெளியேறினார்கள்.
அடுத்து வந்த குசால் மெண்டிஸ் 54 ரன்னும், ஆல் ரவுண்டர் திசாரா பெரேரா 40 பந்தில் 52 ரன்களும் எடுக்க இலங்கை அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 280 ரன்கள் சேர்த்தது. வங்காள தேச அணியில் மோர்தசா 3 விக்கெட்டும், முஷ்டாபிஜூர் ரஹ்மான் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
இதனால் வங்காள தேச அணிக்கு 281 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எப்படியாவது சேஸிங் செய்து தொடரை கைப்பற்றி விடவேண்டும் என்ற நோக்கத்தில் வங்காள தேசம் பேட்டிங் செய்து வருகிறது.
இதனால் இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி விடவேண்டும் என்ற நோக்கத்தில் வங்காள தேசம் களம் இறங்கியது. கட்டாயம் வெற்றி பெற்று தொடரை சமன் செய்து விடவேண்டும் என்ற நோக்கத்தில் இலங்கை அணி களம் இறங்கியது.
டாஸ் வென்ற வங்காள தேச அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி இலங்கை அணியின் குணதிலகா, உபுல் தரங்கா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 10.5 ஓவரில் 76 ரன்கள் சேர்த்தனர். குணதிலகா 38 பந்தில் 34 ரன்களும், தரங்கா 35 பந்தில் 35 ரன்களும் எடுத்து வெளியேறினார்கள்.
அடுத்து வந்த குசால் மெண்டிஸ் 54 ரன்னும், ஆல் ரவுண்டர் திசாரா பெரேரா 40 பந்தில் 52 ரன்களும் எடுக்க இலங்கை அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 280 ரன்கள் சேர்த்தது. வங்காள தேச அணியில் மோர்தசா 3 விக்கெட்டும், முஷ்டாபிஜூர் ரஹ்மான் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
இதனால் வங்காள தேச அணிக்கு 281 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எப்படியாவது சேஸிங் செய்து தொடரை கைப்பற்றி விடவேண்டும் என்ற நோக்கத்தில் வங்காள தேசம் பேட்டிங் செய்து வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X