என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: 2-வது சுற்றில் சிபுல்கோவா அதிர்ச்சி தோல்வி
Byமாலை மலர்11 May 2017 8:42 AM IST (Updated: 11 May 2017 8:42 AM IST)
ஸ்பெயின் நாட்டில் நடந்து வரும் மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் சுலோவக்கியா வீராங்கனை சிபுல்கோவா ஓசியன் டோடினிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.
மாட்ரிட் :
மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தர வரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் சுலோவக்கியா வீராங்கனை சிபுல்கோவா, 63-ம் நிலை வீராங்கனையான ஓசியன் டோடினை (பிரான்ஸ்) எதிர்கொண்டார்.
இதில் சிபுல்கோவா 2-6, 4-6 என்ற நேர்செட்டில் ஓசியன் டோடினிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். மற்ற ஆட்டங்களில் ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி), குஸ்னெட்சோவா (ரஷியா) ஆகியோர் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தர வரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ஜோகோவிச் (செர்பியா) 6-1, 4-6, 7-5 என்ற செட் கணக்கில் நிகோலஸ் அல்மாக்ரோவை (ஸ்பெயின்) தோற்கடித்து 3-வது சுற்றுக்குள் நுழைந்தார்.
மற்ற ஆட்டங்களில் ஆன்டி முர்ரே (இங்கிலாந்து), தாமஸ் பெர்டிச் (செக் குடியரசு), நிஷிகோரி (ஜப்பான்), மிலோஸ் ராவ்னிச் (கனடா) ஆகியோர் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தர வரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் சுலோவக்கியா வீராங்கனை சிபுல்கோவா, 63-ம் நிலை வீராங்கனையான ஓசியன் டோடினை (பிரான்ஸ்) எதிர்கொண்டார்.
இதில் சிபுல்கோவா 2-6, 4-6 என்ற நேர்செட்டில் ஓசியன் டோடினிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். மற்ற ஆட்டங்களில் ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி), குஸ்னெட்சோவா (ரஷியா) ஆகியோர் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தர வரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ஜோகோவிச் (செர்பியா) 6-1, 4-6, 7-5 என்ற செட் கணக்கில் நிகோலஸ் அல்மாக்ரோவை (ஸ்பெயின்) தோற்கடித்து 3-வது சுற்றுக்குள் நுழைந்தார்.
மற்ற ஆட்டங்களில் ஆன்டி முர்ரே (இங்கிலாந்து), தாமஸ் பெர்டிச் (செக் குடியரசு), நிஷிகோரி (ஜப்பான்), மிலோஸ் ராவ்னிச் (கனடா) ஆகியோர் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X