என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
புரோ கபடி 2017: லீக் போட்டிகளில் பாட்னா பைரேட்ஸ், குஜராத் பார்ச்சூன் ஜெயண்ட்ஸ் அணிகள் வெற்றி
Byமாலை மலர்15 Sept 2017 10:59 PM IST (Updated: 15 Sept 2017 10:59 PM IST)
புரோ கபடி தொடரில், இன்றைய லீக் போட்டிகளில் பாட்னா பைரேட்ஸ், குஜராத் பார்ச்சூன் ஜெயண்ட்ஸ் அணிகள் வெற்றி பெற்றன.
சண்டிகர்:
ஐந்தாவது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் 12 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் விளையாடி வருகின்றன. தற்போது அரியானா மாநிலம் சோனிபட்டில் போட்டிகள் நடைபெறுகின்றன. இன்றைய போட்டிகளை பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா நேரில் கண்டுகளித்தார்.
இன்று நடைபெற்ற 'பீ' பிரிவு லீக் போட்டியில் பாட்னா பைரேட்ஸ் - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை செய்தன. இப்போட்டியில் பாட்னா பைரேட்ஸ் அணி 46-30 என்ற புள்ளிக்கணக்கில் அபாரமாக வெற்றி பெற்றது. அதிகபட்சமாக பாட்னாவின் பிரதீப் நர்வால் 14 தொடுபுள்ளிகள் எடுத்தார்.
இப்போட்டியில் வென்ற பாட்னா 'பீ' பிரிவில் 41 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. தெலுங்கு டைட்டன்ஸ் அணி 30 புள்ளிகளுடன் நான்காம் இடத்தில் நீடிக்கிறது.
அதன்பின்னர் நடந்த மற்றொரு 'ஏ' பிரிவு லீக் போட்டியில் குஜராத் பார்ச்சூன் ஜெயண்ட்ஸ் - யூ மும்பா அணிகள் மோதின. இப்போட்டியில் குஜராத் அணி 39-28 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. குஜராத் அணியின் சச்சின் அதிகபட்சமாக 13 புள்ளிகள் எடுத்தார்.
இப்போட்டியில் வென்ற குஜராத் அணி 'ஏ' பிரிவில் 51 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. யூ மும்பா அணி 39 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது.
நாளை நடைபெறும் லீக் போட்டிகளில் பெங்களூரு புல்ஸ் - தெலுங்கு டைட்டன்ஸ், பாட்னா பைரேட்ஸ் - உ.பி. யோத்தா அணிகள் மோத உள்ளன.
ஐந்தாவது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் 12 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் விளையாடி வருகின்றன. தற்போது அரியானா மாநிலம் சோனிபட்டில் போட்டிகள் நடைபெறுகின்றன. இன்றைய போட்டிகளை பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா நேரில் கண்டுகளித்தார்.
இன்று நடைபெற்ற 'பீ' பிரிவு லீக் போட்டியில் பாட்னா பைரேட்ஸ் - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை செய்தன. இப்போட்டியில் பாட்னா பைரேட்ஸ் அணி 46-30 என்ற புள்ளிக்கணக்கில் அபாரமாக வெற்றி பெற்றது. அதிகபட்சமாக பாட்னாவின் பிரதீப் நர்வால் 14 தொடுபுள்ளிகள் எடுத்தார்.
இப்போட்டியில் வென்ற பாட்னா 'பீ' பிரிவில் 41 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. தெலுங்கு டைட்டன்ஸ் அணி 30 புள்ளிகளுடன் நான்காம் இடத்தில் நீடிக்கிறது.
அதன்பின்னர் நடந்த மற்றொரு 'ஏ' பிரிவு லீக் போட்டியில் குஜராத் பார்ச்சூன் ஜெயண்ட்ஸ் - யூ மும்பா அணிகள் மோதின. இப்போட்டியில் குஜராத் அணி 39-28 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. குஜராத் அணியின் சச்சின் அதிகபட்சமாக 13 புள்ளிகள் எடுத்தார்.
இப்போட்டியில் வென்ற குஜராத் அணி 'ஏ' பிரிவில் 51 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. யூ மும்பா அணி 39 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது.
நாளை நடைபெறும் லீக் போட்டிகளில் பெங்களூரு புல்ஸ் - தெலுங்கு டைட்டன்ஸ், பாட்னா பைரேட்ஸ் - உ.பி. யோத்தா அணிகள் மோத உள்ளன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X