search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    இன்னும் சில வருடங்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுவேன்- ஏபி டி வில்லியர்ஸ்
    X

    இன்னும் சில வருடங்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுவேன்- ஏபி டி வில்லியர்ஸ்

    இன்னும் சில வருடங்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுவேன் என்று அதிரடி வீரர் டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். #IPL #ABD
    தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். விரைவாக சதம், விரைவாக 150 ரன்கள் என்ற சாதனைகளைப் படைத்துள்ள ஏபி டி மைதானத்தில் எந்த திசைக்கும் பந்தை அடிக்கும் திறமை படைத்தவர். இதனால் அவர் 360 டிகிரி என்று செல்லமாக அழைக்கப்பட்டார்.



    இவர் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக டெஸ்ட் தொடர் முடிந்ததும் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்தார். இதனால் ஐபிஎல் தொடரில் பங்கேற்பாரா? என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் இன்னும் சில வருடங்கள் ஐபிஎல் தொடரில் விளையாடுவேன். மேலும், உள்ளூர் தொடரிலும் விளையாடுவேன் என்று ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். இதனால் ஐபிஎல் தொடரில் ரசிகர்கள் ஏபி டி வில்லியர்ஸின் அதிரடி வாணவேடிக்கையை தொடர்ந்து காணலாம்.
    Next Story
    ×