search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    குல்தீப் யாதவ் பந்துவீச்சு அபாரம்- கேப்டன் விராட் கோலி பாராட்டு
    X

    குல்தீப் யாதவ் பந்துவீச்சு அபாரம்- கேப்டன் விராட் கோலி பாராட்டு

    இங்கிலாந்து எதிரான நேற்றைய ஆட்டத்தில் குல்தீப் யாதவின் பந்துவீச்சு அபாரமாக இருந்து என இந்திய கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார். #ENGvIND #INDvENG #ViratKohli
    நாட்டிங்காம்:

    இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர் போட்டி தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இரு அணிகள் மோதும் 3 ஆட்டம் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் முதல் ஆட்டம் நேற்று நாட்டிங்காமில் நடந்தது.

    முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 49.5 ஓவரில் 268 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. பென் ஸ்டோக்ஸ் (53) ஜோஸ் பட்லர் (50) அரை சதம் அடித்தனர். இந்திய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 25 ரன் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் விளையாடிய இந்திய அணியில் தொடக்க வீரர் ஷிகர் தவான் 40 ரன்னில் அவுட் ஆனார். அதன் பின் ரோகித்சர்மா-கேப்டன் விராட் கோலி ஜோடி சிறப்பாக விளையாடியது. ரோகித்சர்மா சதம் அடித்தார். விராட் கோலி 75 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இந்தியா 40.1 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 269 ரன் எடுக்க 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரோகித்சர்மா 137 ரன்னுடனும், லோகேஷ் ராகுல் 9 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். வெற்றி குறித்து விராட் கோலி கூறியதாவது:-

    இந்த ஆடுகளம் ரன் குவிக்க உகந்தது என்பதை அறிவோம். ஆனால் நடு ஓவர்களில் ரிஸ்ட் ஸ்பின்னர்கள் பந்துவீச்சு தாக்கம் திருப்புமுனையாக இருந்தது. முதல் 10 ஓவருக்கு (வேகப்பந்து வீச்சு) பிறகு அவர்கள் சுழற்பந்து வீச்சில் திணறுவார்கள் என்பதை அறிவோம். குல்தீப்யாதவ் பந்துவீச்சு அபாரமாக இருந்தது. இதுவரை நான் ஒரு நாள் போட்டியில் இதுபோன்ற சிறந்த பந்து வீச்சை பார்த்ததில்லை என நினைக்கிறேன். அவர் தன்னம்பிகையுடன் இருக்க விரும்புகிறோம். ஏனென்றால் அவர் ஒரு நாள் போட்டியில் மேட்ச் வின்னராக இருக்கிறார். நீங்கள் விக்கெட் எடுக்க வில்லை என்றால் (குல்தீப் யாதவின் டெஸ்ட் வாய்ப்பு) அது மிகவும் கடினமாக இருக்கும். சில நாட்களில் டெஸ்ட் அணி தேர்வு செய்ய இருக்கிறோம்.அதில் சில ஆச்சரியங்கள் இருக்கலாம். இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் திணறுவதை பார்த்தால் குல்தீப் யாதவை டெஸ்ட் அணியில் சேர்க்க வேண்டும் என்று எண்ண தோன்றுகிறது.

    அங்குள்ள வானிலை அற்புதமாக இருக்கிறது. வெளிநாட்டில் இருப்பது போன்ற உணர்வு இல்லை. ஆனால் எங்கள் முன்பு கடினமாக கிரிக்கெட் இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #ENGvIND #INDvENG #ViratKohli
    Next Story
    ×