search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடைசி மூன்று ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் புவி, பும்ரா சேர்ப்பு- ஷமி அவுட்
    X

    கடைசி மூன்று ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் புவி, பும்ரா சேர்ப்பு- ஷமி அவுட்

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான கடைசி மூன்று போட்டிக்கான இந்திய அணியில் புவனேஸ்வர் குமார், பும்ரா சேர்க்கப்பட்டுள்ளனர். #INDvWI #Bhuvi
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டம் வெற்றித் தோல்வியின்றி ‘டை’யில் முடிந்தது.

    முதல் இரண்டு போட்டிக்கான இந்திய அணிதான் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடைசி மூன்று போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது.



    முதல் இரண்டு போட்டியில் இடம்பெறாத புவனேஸ்வர் குமார் மற்றும் பும்ரா ஆகியோருக்கு அணியில் இடம்கிடைத்துள்ளது. இரண்டு போட்டிகளிலும் சேர்த்து மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்திய ஷமி அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

    3-வது ஒருநாள் போட்டி புனேயில் 27-ந்தேதியும், 4-வது போட்டி மும்பையில் 29-ந்தேதியும், 5-வது போட்டி நவம்பர் 1-ந்தேதி திருவனந்தபுரத்திலும் நடக்கிறது.
    Next Story
    ×