search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொடக்க ஜோடியில் அதிக ரன்கள்- தெண்டுல்கர் - சேவாக் சாதனையை முந்தியது ரோகித் - தவான் ஜோடி
    X

    தொடக்க ஜோடியில் அதிக ரன்கள்- தெண்டுல்கர் - சேவாக் சாதனையை முந்தியது ரோகித் - தவான் ஜோடி

    ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தொடக்க ஜோடி அதிக ரன்கள் குவித்ததில் சச்சின் தெண்டுல்கர் - சேவாக் ஜோடியை முந்தியது தவான் - ரோகித் சர்மா ஜோடி.
    இந்திய ஒருநாள் கிரிக்கெட்டில் தொடக்க ஜோடி என்றாலே நமக்கு ஞாபகம் வருவது சச்சின் தெண்டுல்கர் - சவுரவ் கங்குலிதான். இந்த ஜோடி நீண்ட காலமாக தொடக்கத்தில் களம் இறங்கியது. இருவரும் தொடக்க ஜோடியாக களம் இறங்கி 6609 ரன்கள் குவித்துள்ளனர். இதுதான் இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோராகும். அதன்பின் சச்சின் தெண்டுல்கர் - விரேந்தர் சேவாக் ஜோடி 3916 ரன்கள் குவித்து 2-வது இடத்தில் இருந்தது.



    சமீப காலமாக ரோகித் சர்மா - தவான் தொடக்க வீரர்களாக களம் இறங்கி விளையாடி வருகிறார்கள். இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பையில் நடைபெற்று வருகிறது.



    ரோகித் சர்மா - தவான் ஜோடி இந்த போட்டிக்கு முன் 3916 ரன்கள் அடித்திருந்தது. முதல் ஓவரை ரோச் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை ரோகித் சர்மா பவுண்டரிக்கு விரட்டினார். இதன்மூலம் தவான் - ரோகித் சர்மா ஜோடி 3920 ரன்களை எட்டு சச்சின் - சேவாக் ஜோடி அடித்த ரன்களை முந்தி 2-வது இடத்தை பிடித்துள்ளது.

    கவுதம் காம்பீர் - சேவாக் ஜோடி 1870 ரன்களுடன் 4-வது இடத்திலும், கவாஸ்கர் ஸ்ரீகாந்த் ஜோடி1680 ரன்களுடன் 5-வது இடத்திலும் உள்ளது.
    Next Story
    ×