என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மிதாலிராஜ் நீக்கப்பட்ட விவகாரம் குறித்து கிரிக்கெட் வாரியம் விசாரணை- சம்மன் அனுப்ப முடிவு
Byமாலை மலர்26 Nov 2018 7:34 AM GMT (Updated: 26 Nov 2018 7:34 AM GMT)
மிதாலி ராஜ் நீக்கப்பட்ட விவாகரம் குறித்து கேப்டன் பிரீத்கவூர், மிதாலிராஜ், பயிற்சியாளர் ரமேஷ்பவார், ஆகியோருக்கு சம்மன் அனுப்ப கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. #MithaliRaj #HarmanpreetKaur
புதுடெல்லி:
வெஸ்ட் இண்டீசில் நடந்த மகளிர் 20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் ஹர்மன்பிரீத் கவூர் தலைமையிலான இந்திய அணி அரை இறுதியில் இங்கிலாந்திடம் தோற்றது.
‘லீக்’ போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இந்திய மகளிர் அணி அரை இறுதியில் மோசமாக ஆடியதால் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
மிகவும் முக்கியமான ஆட்டத்தில் முன்னாள் கேப்டன் மிதாலிராஜ் நீக்கப்பட்டது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. 2 அரை சதம் அடித்த பிறகு அவர் காயத்தில் இருந்து குணமடைந்தார். அப்படி இருந்தும் அவர் அரைஇறுதியில் சேர்க்கப்படாதது பூதாகரமானது.
இதற்கு கேப்டன் ஹர்மித் கவூர் விளக்கம் அளித்து இருந்தார். அவர் கூறும்போது, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் சிறப்பாக ஆடி வெற்றி பெற்றோம். அந்த கூட்டணியை மாற்ற வேண்டாம் என்று முடிவு செய்ததால் மிதாலி ராஜூக்கு இடம் கிடைக்கவில்லை. எந்த முடிவும் அணியின் நலனுக்காகவே எடுக்கப்பட்டது என்றார்.
ஆனால் மிதாலிராஜ் பயிற்சியாளர், ஹர்மன்பிரித் கவூரை கடுமையாக சாடினார். கவூர் சூழ்ச்சியாக செயல்படுகிறார். அவர் பொய் சொல்கிறார். கேப்டன் பதவிக்கு தகுதியற்றவர் என்று கூறி இருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக குழு விசாரணை நடந்த முடிவு செய்து உள்ளது.
இதுபற்றி விளக்கம் அளிக்க கேப்டன் பிரீத்கவூர், மிதாலிராஜ், பயிற்சியாளர் ரமேஷ்பவார், மானேஜர் திருப்தி பட்டாச்சார்யா ஆகியோருக்கு சம்மன் அனுப்ப இருக்கிறது. அனைவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டி தலைவர் வினோத்ராய் கூறும்போது, “வீராங்கனைகளின் பயிற்சியாளர்கள் வெறுப்பூட்டும் கருத்துக்களை தேவையில்லாமல் தெரிவிக்கக்கூடாது. அணியில் உள்ள அனைவரும் கண்ணியத்தை காக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். #MithaliRaj #HarmanpreetKaur
வெஸ்ட் இண்டீசில் நடந்த மகளிர் 20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் ஹர்மன்பிரீத் கவூர் தலைமையிலான இந்திய அணி அரை இறுதியில் இங்கிலாந்திடம் தோற்றது.
‘லீக்’ போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இந்திய மகளிர் அணி அரை இறுதியில் மோசமாக ஆடியதால் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
மிகவும் முக்கியமான ஆட்டத்தில் முன்னாள் கேப்டன் மிதாலிராஜ் நீக்கப்பட்டது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. 2 அரை சதம் அடித்த பிறகு அவர் காயத்தில் இருந்து குணமடைந்தார். அப்படி இருந்தும் அவர் அரைஇறுதியில் சேர்க்கப்படாதது பூதாகரமானது.
இதற்கு கேப்டன் ஹர்மித் கவூர் விளக்கம் அளித்து இருந்தார். அவர் கூறும்போது, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் சிறப்பாக ஆடி வெற்றி பெற்றோம். அந்த கூட்டணியை மாற்ற வேண்டாம் என்று முடிவு செய்ததால் மிதாலி ராஜூக்கு இடம் கிடைக்கவில்லை. எந்த முடிவும் அணியின் நலனுக்காகவே எடுக்கப்பட்டது என்றார்.
ஆனால் மிதாலிராஜ் பயிற்சியாளர், ஹர்மன்பிரித் கவூரை கடுமையாக சாடினார். கவூர் சூழ்ச்சியாக செயல்படுகிறார். அவர் பொய் சொல்கிறார். கேப்டன் பதவிக்கு தகுதியற்றவர் என்று கூறி இருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக குழு விசாரணை நடந்த முடிவு செய்து உள்ளது.
இதுபற்றி விளக்கம் அளிக்க கேப்டன் பிரீத்கவூர், மிதாலிராஜ், பயிற்சியாளர் ரமேஷ்பவார், மானேஜர் திருப்தி பட்டாச்சார்யா ஆகியோருக்கு சம்மன் அனுப்ப இருக்கிறது. அனைவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டி தலைவர் வினோத்ராய் கூறும்போது, “வீராங்கனைகளின் பயிற்சியாளர்கள் வெறுப்பூட்டும் கருத்துக்களை தேவையில்லாமல் தெரிவிக்கக்கூடாது. அணியில் உள்ள அனைவரும் கண்ணியத்தை காக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். #MithaliRaj #HarmanpreetKaur
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X