என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
முதல் இன்னிங்சில் அதிக ரன்கள் குவித்துவிட்டால் போதும்- அஸ்வின்
Byமாலை மலர்30 Nov 2018 1:18 PM GMT (Updated: 30 Nov 2018 1:18 PM GMT)
ஆஸ்திரேலியாவில் விளையாடும்போது முதல் இன்னிங்சில் அதிக அளவில் ரன்கள் குவித்துவிட்டால், அதன்பின் ஆட்டம் நம் பக்கம் திரும்பிவிடும் என்கிறார் அஸ்வின். #AUSvIND
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 6-ந்தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. இந்த முறை இந்தியா தொடரை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுழற்பந்து வீச்சில் அஸ்வின் முன்னணி வீரராக திகழ்வார். கடந்த முறை இந்திய அணி ஆஸ்திரேலியாவில் விளையாடும்போது அஸ்வின் சிறப்பாக பந்து வீசினார். ஆஸ்திரேலியா மண்ணில் பந்து வீச்சிலும் சிறப்பான வகையில் பார்ட்னர்ஷிப் அமைத்து பந்து வீச வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அஸ்வின் கூறுகையில் ‘‘பந்து வீசும்போது கூட இணைந்து சிறப்பான பார்ட்னர்ஷிப்பை உருவாக்க வேண்டும். பார்ட்னர்ஷிப் நாம் ஆட்டத்தில் உங்களுடைய பங்களிப்பை உறுதிய முக்கியமான விஷயமாகும். ஒரு பந்து வீச்சாளர் குறைவாகவே அல்லது அதிகமாகவே வைத்து விளையாடும்போது கேப்டனுக்கு உதவிகரமாக இருக்கும்.
ஆஸ்திரேலியாவில் உங்களின் மூக்கு மேல் நோக்கி இருக்க வேண்டியது அவசியமானது. ஒவ்வொரு மணி நேரத்திலும் ஆட்டம் உங்கள் கையை விட்டு விலகிச் செல்லலாம். நாம் சிறந்த பேட்ஸ்மேன்களை வைத்துள்ளோம். அவர்களால் ஆட்டத்தை முன்னோக்கி எடுத்துச் செல்ல முடியும்.
பந்து வீச்சாளர்கள் ஒன்றிணைந்து சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து அவர்களை ஆட்டமிழக்க முயற்சி செய்ய வேண்டும். அவர்கள் சில நேரங்கில் ஆட்டமிழக்கச் செய்யாமல் போகலாம். ஆனால், நீங்கள் அதனால் மனம் தளர்ந்து விடக்கூடாது.
ஆஸ்திரேலியாவில் உள்ள ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்குமா? சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்குமா? என்பது குறித்து கவலைப்பட தேவையில்லை. அவர்கள் எப்போதும் பிளாட் பிட்ச்-தான் தயார் செய்வார்கள். இது நமக்குத் தெரியும். இதுகுறித்து நாம் எப்போதும் குறை கூறியது கிடையாது. நாம் நம்முடைய திறமையை மீது நம்பிக்கை வைத்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்ய வேண்டும்.
பெரும்பாலும் முதல் இன்னிங்ஸ் ரன்கள் மிகப்பெரியதாக இருக்கும். ஆகவே, இந்த தொடர் முழுவதும் நாம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற புரியதலுடன் செல்ல வேண்டும். சுழற்பந்து வீச்சாளர் முதல் இன்னிங்சில் சிறப்பாக செயல்பட வேண்டும்.
பிட்ச் சற்று ஒத்துழைத்தால் 2-வது இன்னிங்சில என்னால் உதவிகள் செய்ய இயலும். நான் கடந்த முறை இங்கு வந்து சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தினே். அது எனக்கு திருப்புமுனையாக இருந்தது. அதேபோல் தற்போதும் இருக்கனும்’’ என்றார்.
சுழற்பந்து வீச்சில் அஸ்வின் முன்னணி வீரராக திகழ்வார். கடந்த முறை இந்திய அணி ஆஸ்திரேலியாவில் விளையாடும்போது அஸ்வின் சிறப்பாக பந்து வீசினார். ஆஸ்திரேலியா மண்ணில் பந்து வீச்சிலும் சிறப்பான வகையில் பார்ட்னர்ஷிப் அமைத்து பந்து வீச வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அஸ்வின் கூறுகையில் ‘‘பந்து வீசும்போது கூட இணைந்து சிறப்பான பார்ட்னர்ஷிப்பை உருவாக்க வேண்டும். பார்ட்னர்ஷிப் நாம் ஆட்டத்தில் உங்களுடைய பங்களிப்பை உறுதிய முக்கியமான விஷயமாகும். ஒரு பந்து வீச்சாளர் குறைவாகவே அல்லது அதிகமாகவே வைத்து விளையாடும்போது கேப்டனுக்கு உதவிகரமாக இருக்கும்.
ஆஸ்திரேலியாவில் உங்களின் மூக்கு மேல் நோக்கி இருக்க வேண்டியது அவசியமானது. ஒவ்வொரு மணி நேரத்திலும் ஆட்டம் உங்கள் கையை விட்டு விலகிச் செல்லலாம். நாம் சிறந்த பேட்ஸ்மேன்களை வைத்துள்ளோம். அவர்களால் ஆட்டத்தை முன்னோக்கி எடுத்துச் செல்ல முடியும்.
பந்து வீச்சாளர்கள் ஒன்றிணைந்து சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து அவர்களை ஆட்டமிழக்க முயற்சி செய்ய வேண்டும். அவர்கள் சில நேரங்கில் ஆட்டமிழக்கச் செய்யாமல் போகலாம். ஆனால், நீங்கள் அதனால் மனம் தளர்ந்து விடக்கூடாது.
ஆஸ்திரேலியாவில் உள்ள ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்குமா? சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்குமா? என்பது குறித்து கவலைப்பட தேவையில்லை. அவர்கள் எப்போதும் பிளாட் பிட்ச்-தான் தயார் செய்வார்கள். இது நமக்குத் தெரியும். இதுகுறித்து நாம் எப்போதும் குறை கூறியது கிடையாது. நாம் நம்முடைய திறமையை மீது நம்பிக்கை வைத்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்ய வேண்டும்.
பெரும்பாலும் முதல் இன்னிங்ஸ் ரன்கள் மிகப்பெரியதாக இருக்கும். ஆகவே, இந்த தொடர் முழுவதும் நாம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற புரியதலுடன் செல்ல வேண்டும். சுழற்பந்து வீச்சாளர் முதல் இன்னிங்சில் சிறப்பாக செயல்பட வேண்டும்.
பிட்ச் சற்று ஒத்துழைத்தால் 2-வது இன்னிங்சில என்னால் உதவிகள் செய்ய இயலும். நான் கடந்த முறை இங்கு வந்து சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தினே். அது எனக்கு திருப்புமுனையாக இருந்தது. அதேபோல் தற்போதும் இருக்கனும்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X