search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெல்போர்ன் ஆடுகளத்தை ‘சராசரி’ என மதிப்பீடு செய்துள்ளது ஐசிசி
    X

    மெல்போர்ன் ஆடுகளத்தை ‘சராசரி’ என மதிப்பீடு செய்துள்ளது ஐசிசி

    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் நடைபெற்ற மெல்போர்ன் ஆடுகளத்தை ‘சராசரி’ என மதிப்பீடு செய்துள்ளது ஐசிசி. #AUSvIND #ICC
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. பொதுவாக ஒரு டெஸ்ட் போட்டி முடிந்த பிறகு, போட்டி நடைபெற்ற மைதானத்தின் ஆடுகளம் எப்படி செயல்பட்டது என்பதை ஐசிசி மதிப்பீடு செய்யும்.

    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற்றது. இந்த போட்டி மிகவும் சவாலான போட்டியாக இருந்து. ஆடுகளத்தில் அதிக அளவு புற்கள் காணப்பட்டது. பவுன்சர் பந்திற்கு அதிக அளவில் ஆடுகளம் ஒத்துழைத்தது. பெர்த் ஆடுகளத்தை ஐசிசி ‘சராசரி’ ஆடுகளம் என மதிப்பீடு செய்தது. இதற்கு ஆஸ்திரேலியா உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.



    இந்நிலையில் 3-வது போட்டி நடைபெற்ற மெல்போர்ன் ஆடுகளத்தையும் ‘சராசரி’ என மதிப்பீடு செய்துள்ளது. மெல்போர்ன் மைதான ஆடுகளம் முதல் இரண்டு நாட்களில் பேட்டிங் செய்ய சாதகமாக இருந்தது. மூன்றாவது நாள் மதிய உணவு இடைவேளைக்குப்பிறகு பவுன்ஸ் பந்திற்கு சாதகமாக இருந்தது. இதனால் பும்ரா, கம்மின்ஸ் பந்து வீச்சில் அசத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×