என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னை ஏர்போட்டில் குட்டித்தூக்கம் போட்ட எம்எஸ் டோனி
Byமாலை மலர்10 April 2019 10:29 AM GMT (Updated: 10 April 2019 10:29 AM GMT)
கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் விளையாடிய கையோடு ஜெய்ப்பூர் செல்வதற்காக சென்னை விமான நிலையம் சென்ற டோனி, அங்கு குட்டித்தூக்கம் போட்டார். #IPL2019
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 23-ந்தேதி தொடங்கி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை நடைபெறும் ஆட்டங்கள் இரவு 8 மணிக்கு தொடங்கும். போட்டி முடிவடைய 11.30 மணிக்கு மேல் ஆகிவிடுகிறது. இதனால் ரசிகர்கள் வீடு திரும்ப மிகவும் சிரமப்படுகின்றன.
ரசிகர்கள் மட்டுமே சிரமப்படுவதில்லை. அணியின் வீரர்களும் சிரமப்படுகின்றனர். அவர்கள் போட்டியை முடித்துக் கொண்டு அடுத்த போட்டிக்காக உடனடியாக விமானம் மூலம் அடுத்த மாநிலத்திற்கு பறக்க வேண்டியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் 6-ந்தேதி கிங்ஸ் லெவன் பஞ்சாப்பையும், நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியையும் எதிர்கொண்டது. இந்த இரண்டு போட்டிகளும் சேப்பாக்கத்தில் நடைபெற்றது. நாளை ராஜஸ்தானை ஜெய்ப்பூரில் எதிர்கொள்கிறது.
நேற்றைய போட்டி நள்ளிரவு 12 மணியளில் முடிவடைந்தது. போட்டி முடிந்ததும் வீரர்கள் உடனடியாக ஜெய்ப்பூர் செல்வதற்காக சென்னை விமான நிலையம் சென்றனர். இதனால் தூங்குவதற்குக் கூட சரியாக நேரம் கிடைப்பதில்லை. விடியற்காலையில்தான் விமானம் என்பதால், விமான நிலையத்தில் சென்னை அணி கேப்டன் எம்எஸ் டோனி தரையிலேயே கிடைத்த நேரத்தில் ஒரு குட்டுத்தூக்கம் போட்டார்.
அவர் தூங்கும் படத்தை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்து ‘‘ஐபிஎல் கால நேரம் பழகினால் அதிகாலையில் விமானத்தை பிடிக்க வேண்டியிருந்தால் இப்படித்தான் நிகழும்’’ பதிவிட்டுள்ளார்.
ரசிகர்கள் மட்டுமே சிரமப்படுவதில்லை. அணியின் வீரர்களும் சிரமப்படுகின்றனர். அவர்கள் போட்டியை முடித்துக் கொண்டு அடுத்த போட்டிக்காக உடனடியாக விமானம் மூலம் அடுத்த மாநிலத்திற்கு பறக்க வேண்டியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் 6-ந்தேதி கிங்ஸ் லெவன் பஞ்சாப்பையும், நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியையும் எதிர்கொண்டது. இந்த இரண்டு போட்டிகளும் சேப்பாக்கத்தில் நடைபெற்றது. நாளை ராஜஸ்தானை ஜெய்ப்பூரில் எதிர்கொள்கிறது.
நேற்றைய போட்டி நள்ளிரவு 12 மணியளில் முடிவடைந்தது. போட்டி முடிந்ததும் வீரர்கள் உடனடியாக ஜெய்ப்பூர் செல்வதற்காக சென்னை விமான நிலையம் சென்றனர். இதனால் தூங்குவதற்குக் கூட சரியாக நேரம் கிடைப்பதில்லை. விடியற்காலையில்தான் விமானம் என்பதால், விமான நிலையத்தில் சென்னை அணி கேப்டன் எம்எஸ் டோனி தரையிலேயே கிடைத்த நேரத்தில் ஒரு குட்டுத்தூக்கம் போட்டார்.
அவர் தூங்கும் படத்தை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்து ‘‘ஐபிஎல் கால நேரம் பழகினால் அதிகாலையில் விமானத்தை பிடிக்க வேண்டியிருந்தால் இப்படித்தான் நிகழும்’’ பதிவிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X