என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நான்கு நாட்கள் வீரர்களுக்கு ஓய்வு கொடுத்துள்ளது மும்பை இந்தியன்ஸ்
Byமாலை மலர்22 April 2019 2:31 PM GMT (Updated: 22 April 2019 2:31 PM GMT)
மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடும் வீரர்களுக்கு உலகக்கோப்பையை கருத்தில் கொண்டு நான்கு நாட்கள் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. #IPL2019 #MI
உலகின் மிகப்பெரிய டி20 கிரிக்கெட் லீக்கான ஐபிஎல் தொடரின் 12-சீசன் கடந்த மார்ச் மாதம் 23-ந்தேதி தொடங்கி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் 12-ந்தேதி வரை ஐபிஎல் போட்டி நடைபெறுகிறது. அதன்பின் மே 30-ந்தேதி 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் தொடங்குகிறது. அதற்கு முன் 24-ந்தேதி பயிற்சி ஆட்டங்கள் தொடங்குகிறது.
ஐபிஎல் தொடருக்கும் உலகக்கோப்பைக்கும் இடையில் 12 நாட்களே இடைவெளி இருப்பதால் வீரர்கள் ‘ஒர்க் லோடு’ குறித்த விவாதம் எழும்பியது. அப்போது ஒவ்வொரு ஐபிஎல் அணிகளும் எங்களது வீரர்களுக்கு நாங்கள் போதுமான ஓய்வு அளிப்போம் என்று தெரிவித்தது.
மும்பை அணி நேற்று முன்தினம் சனிக்கிழமை (20-ந்தேதி) ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக விளையாடியது. அடுத்த போட்டியில் 26-ந்தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இரு போட்டிக்குமிடையில் ஐந்து நாட்கள் இடைவெளி உள்ளது.
இந்த குறுகிய இடைவெளியை வீரர்களுக்கு ஓய்வாக அளித்துள்ளது மும்பை இந்தியன்ஸ். இந்த நாட்களில் உலகக்கோப்பையில் விளையாடும் வீரர்களான ரோகித் சர்மா, பும்ரா, டி காக், மலிங்கா போன்ற வீரர்களை அணியில் இருந்து ரிலீஸ் செய்துள்ளது. அவர்கள் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு போன்ற எந்த செயல்களிலும் ஈடுபடாமல் புத்துணர்ச்சி பெற வேண்டும் என்று அணி நிர்வாகம் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்பின் சென்னை அணிக்கெதிராக விளையாட ஒன்றிணைவார்கள். இதனால் ஐபிஎல் தொடர் முழுவதும் முன்னணி வீரர்கள் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் தொடருக்கும் உலகக்கோப்பைக்கும் இடையில் 12 நாட்களே இடைவெளி இருப்பதால் வீரர்கள் ‘ஒர்க் லோடு’ குறித்த விவாதம் எழும்பியது. அப்போது ஒவ்வொரு ஐபிஎல் அணிகளும் எங்களது வீரர்களுக்கு நாங்கள் போதுமான ஓய்வு அளிப்போம் என்று தெரிவித்தது.
மும்பை அணி நேற்று முன்தினம் சனிக்கிழமை (20-ந்தேதி) ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக விளையாடியது. அடுத்த போட்டியில் 26-ந்தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இரு போட்டிக்குமிடையில் ஐந்து நாட்கள் இடைவெளி உள்ளது.
இந்த குறுகிய இடைவெளியை வீரர்களுக்கு ஓய்வாக அளித்துள்ளது மும்பை இந்தியன்ஸ். இந்த நாட்களில் உலகக்கோப்பையில் விளையாடும் வீரர்களான ரோகித் சர்மா, பும்ரா, டி காக், மலிங்கா போன்ற வீரர்களை அணியில் இருந்து ரிலீஸ் செய்துள்ளது. அவர்கள் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு போன்ற எந்த செயல்களிலும் ஈடுபடாமல் புத்துணர்ச்சி பெற வேண்டும் என்று அணி நிர்வாகம் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்பின் சென்னை அணிக்கெதிராக விளையாட ஒன்றிணைவார்கள். இதனால் ஐபிஎல் தொடர் முழுவதும் முன்னணி வீரர்கள் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X