search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    விராட் கோலி
    X
    விராட் கோலி

    மூன்றாவது டி20 போட்டி - விராட் கோலிக்கு ஓய்வு கொடுத்தது பி.சி.சி.ஐ.

    காயத்தில் இருந்து ரவீந்திர ஜடேஜா மீண்டுள்ளதால் அவர் 3வது டி20 போட்டியில் களம் இறங்குவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
    புது டெல்லி:

    வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

    இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட்கோலிக்கு மூன்றாவது டி20 போட்டியில் இருந்து பிசிசிஐ ஓய்வு கொடுத்துள்ளது. இதையடுத்து அவர் தமது சொந்த ஊர் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    டி20 தொடருக்கு பின்,இந்தியா- இலங்கை இடையே டெஸ்ட் கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. முதல் போட்டி மொஹாலியில் அடுத்த மாதம் 4 முதல் 8ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டி கோலிக்கு 100 வது டெஸ்ட் போட்டியாகும். 

    மேலும் டெஸ்ட் தொடரை தொடர்ந்து ஐ.பி.எல்.போட்டிகள் நடைபெறுகின்றன. இந்த போட்டிகளிலும்  புத்துணர்ச்சியுடன் பங்கேற்பதற்காக  வசதியாக 3வது டி20 போட்டியில் கோலிக்கு ஓய்வு  கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

    இந்நிலையில் முழங்கால் காயத்தில் இருந்து ரவீந்திர ஜடேஜா குணமடைந்து விட்டதால் 3வது டி20 போட்டியில் அவர் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    Next Story
    ×