என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
விளையாட்டு (Sports)
X
கடைசி 2 பந்தில் 2 சிக்சர் அடித்து குஜராத் வெற்றி: திவேதியா, கில்லுக்கு ஹர்திக் பாண்ட்யா பாராட்டு
Byமாலை மலர்9 April 2022 5:23 AM GMT (Updated: 9 April 2022 5:23 AM GMT)
பஞ்சாப் அணி மீது எனக்கு அனுதாபம் உண்டு என குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.
மும்பை:
பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் வீரர் ராகுல் திவேதியா கடைசி 2 பந்தில் 2 சிக்சர் அடித்து அணியை வெற்றிபெற வைத்தார்.
மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 189 ரன் குவித்தது.
லிவிங்ஸ்டோன் 27 பந்தில் 64 ரன்னும் (7 பவுண்டரி, 4 சிக்சர்) தவான் 30 பந்தில் 35 ரன்னும் (4 பவுண்டரி) எடுத்தனர். ரஷீத்கான் 3 விக்கெட்டும், நல்காண்டே 2 விக்கெட்டும் எடுத்தனர்.
பின்னர் ஆடிய குஜராத் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 190 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ராகுல் திவேதியா ஆட்டத்தின் கடைசி 2 பந்தில் 2 சிக்சர் அடித்து குஜராத்தை வெற்றி பெற வைத்தார். சுப்மன்கில் 59 பந்தில் 96 ரன்னும் (11 பவுண்டரி, 1சிக்சர்) தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்சன் 30 பந்தில் 35 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்), கேப்டன் ஹர்த்திக் பாண்ட்யா 18 பந்தில் 27 ரன்னும் (5 பவுண்டரி) எடுத்தனர்.
குஜராத் அணி ஹாட்ரிக் வெற்றி பெற்றது. அந்த அணி மட்டும் தான் இதுவரை தோல்வி அடையவில்லை. வெற்றி குறித்து குஜராத் டைடன்ஸ் கேப்டன் ஹர்த்திக் பாண்ட்யா கூறியதாவது:-
ஆட்டத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருந்ததால் நான் நடுநிலையாகி விட்டேன். ராகுல் திவேதியாவுக்கு எனது வாழ்த்துக்கள். நெருக்கடியில் அவர் கடைசி 2 பந்தில் 2 சிக்சர் அடித்தது பாராட்டத்தக்கது. சுப்மன்கில் ஆட்டம் மிகவும் சிறப்பாக இருந்தது. அவருக்கு சாய் சுதர்சன் நன்றாக ஒத்துழைப்பு கொடுத்தார். இருவரது பொறுப்பான பேட்டிங்கால் தான் எங்களால் கடைசி ஓவர் வரை போட்டியை எடுத்து வர முடிந்தது.
பஞ்சாப் அணி மீது எனக்கு அனுதாபம் உண்டு.
இவ்வாறு ஹர்த்திக் பாண்ட்யா கூறினார்.
இதையும் படியுங்கள்...2வது டெஸ்டில் எல்கர், பவுமா அரை சதம் - முதல் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா 278/5
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X