என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
விளையாட்டு (Sports)
X
150 விக்கெட்டுகள்... ஐபிஎல் போட்டியில் சாதனை படைத்த புவனேஸ்வர் குமார்
Byமாலை மலர்17 April 2022 9:44 PM IST (Updated: 17 April 2022 9:44 PM IST)
வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் பிராவோ (174), இலங்கை வீரர் மலிங்கா (170) ஆகியோரைத் தொடர்ந்து ஐபிஎல் போட்டியில் 150 விக்கெட் வீழ்த்திய மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை புவனேஸ்வர் குமார் பெற்றுள்ளார்.
மும்பை:
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் நடந்த ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. இப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் வேகப்பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமார் 3 விக்கெட் கைப்பற்றினார். இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் 150 விக்கெட் வீழ்த்திய முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை எட்டினார்.
அத்துடன், ஒட்டுமொத்த வேகப்பந்துவீச்சாளர்களில் வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் பிராவோ (174), இலங்கை வீரர் மலிங்கா (170) ஆகியோரைத் தொடர்ந்து ஐபிஎல் போட்டியில் 150 விக்கெட் வீழ்த்திய மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையையும் புவனேஸ்வர் குமார் பெற்றுள்ளார்.
இதேபோல் அமித் மிஷ்ரா (166), பியூஷ் சாவ்லா (157), யுஸ்வேந்திர சாகல் (151), ஹர்பஜன் சிங் (150) ஆகியோரும் 150 விக்கெட் என்ற மைல்கல்லை கடந்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X