search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • இந்தியா- வங்கதேசம் டெஸ்ட் தொடர் செப்டம்பர் 18-ந்தேதி தொடங்குகிறது.
    • இதற்கு பயிற்சியாக இருக்கும் என்பதால் சின்னசாமி மைதானத்தில் போட்டியை நடத்த பிசிசிஐ கேட்டுள்ளது.

    இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடரின் முக்கியமானதில் ஒன்று துலீப் டிராபி. இந்தத் தொடர் அடுத்த மாதம் 5-ந்தேதி தொடங்க இருக்கிறது.

    இந்த தொடரின் முதல் போட்டியில் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் நடத்துகிறது. இந்த போட்டியை சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடத்த பிசிசிஐ கேட்டுக்கொண்டது. அதன்படி கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் சின்னசாமி மைதானத்தில் நடத்துகிறது.

    வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப் பணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்தத் தொடர் செப்டம்பர் 18-ந்தேதி நடைபெறுகிறது.

    இந்த போட்டிக்கு சிறந்த பயிற்சி ஆட்டமாக துலீப் டிராபி இருக்கும் என பிசிசிஐ நினைக்கிறது. இதனால் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் இடம் பிடிக்கும் சர்வதேச வீரர்கள் இடம் பிடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா ஆகியோருக்கு உள்நாட்டு போட்டியில் விளையாட விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கேஎல் ராகுல், சுப்மன் கில், ஆர் அஸ்வின், ஜடேஜா, அக்சர் பட்டேல், ஷ்ரேயாஸ் அய்யர், ஜெய்ஸ்வால் உள்ளிட்டோர் இந்த போட்டியில் விளையாடுவாரக்ள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ரோகித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு விளையாட விருப்பம் இருந்தால் பங்கேற்கலாம் என ஆப்சன் வழங்கப்பட்டுள்ளது.

    ஹர்திக் பாண்ட் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடாமல் உள்ளார். இதனால் அவர் விளையாட வாய்ப்பில்லை. இஷான் கிஷன் நீண்ட நாட்களாக அணியில் இடம் பெறாமல் உள்ளார். இவரும் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது.

    • வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்கா இடையே 1வது டெஸ்ட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்றது.
    • இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    வெஸ்ட் இண்டீஸ் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்றது.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. பேட்டிங்கை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்சில் 357 ரன்களை சேர்த்தது. பிறகு களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சில் 233 ரன்களையே எடுத்தது.

    124 ரன்கள் முன்னிலை பெற்று இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 30 ரன்கள் எடுத்து 154 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் டோனி டி ஜோர்ஜி 14 ரன்னுடனும், எய்டன் மார்க்ரம் 9 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    ஐந்தாம் நாளில் தொடர்ந்து பேட்டிங் ஆடிய தென் ஆப்பிரிக்கா 29 ஓவர்களில் 3 விக்கெட்டை இழந்து 173 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 298 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    வெஸ்ட் இண்டீசின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிரேக் பிராத்வைட் மற்றும் மிகைல் லூயிஸ் ஆகியோர் களம் இறங்கினர். இதில் பிராத்வைட் ரன் எடுக்காமலும், மிகைல் லூயிஸ் 9 ரன்னும் எடுத்த நிலையில் அவுட் ஆகினர்.

    அடுத்து களமிறங்கிய கீசி கார்டி 31 ரன்களையும், அலிக் அத்தானாஸ் 92 ரன்களையும், கவேம் ஹாட்ஜ் 29 ரன்களிலும் அவுட் ஆகினர். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 56.2 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 201 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டம் சமனில் முடிக்கப்பட்டது.

    இரு அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி வருகிற 15 ஆம் தேதி கயானாவில் தொடங்க இருக்கிறது.

    • தனது புதிய ரேஞ்ச் ரோவர் காரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிராஜ் பகிர்ந்துள்ளார்
    • உங்களை நீங்கள் நம்பினால், விரும்பியதை அடைய முடியும் என தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்த கையோடு இந்திய அணி நாடு திரும்பியது. அதன் பிறகு முகமது சிராஜ் தனது குடும்பத்திற்காக ஒரு புதிய காரை வாங்கியுள்ளார்.

    தனது புதிய ரேஞ்ச் ரோவர் காரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். அந்த படத்தில் அவரது குடும்பத்தினரும் உடன் இருந்தனர்.

    அந்த பதிவில், "உங்கள் கனவுகளுக்கு எல்லைகள் இல்லை, ஏனெனில் அவை உங்களை கடினமாக உழைக்கவும் பாடுபடவும் தூண்டுகின்றன. தொடர்ச்சியாக நீங்கள் எடுக்கும் முயற்சிகளே உங்களை முன்னோக்கி அழைத்துச் செல்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.

    புதிய கார் வாங்கிய சிராஜ்க்கு இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் ஆர்சிபி அணி வீரர் கரண் ஷர்மா ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

    • வங்காளதேச அணி பாகிஸ்தானில் பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
    • பாகிஸ்தான், வங்காளதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 21-ம் தேதி நடைபெறுகிறது.

    டாக்கா:

    வங்காளதேச கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.

    அதன்படி, இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 21-ம் தேதி நடைபெற உள்ளது. இது ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. எனவே இந்தத் தொடர் இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

    இந்நிலையில், வங்காளதேச அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான தஸ்கின் அகமது உள்ளிட்ட வீரர்களை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.

    காயம் காரணமாக கடந்த 12 மாதத்துக்கு மேலாக டெஸ்ட் போட்டிகளில் களம் காணாத இவரது வருகை நிச்சயம் வங்காளதேச அணிக்கு வலு சேர்க்கும்.

    வங்காளதேச டெஸ்ட் அணியின் விவரம் வருமாறு:

    நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ (கேப்டன்), மஹமுதுல் ஹசன் ஜாய், ஜாகிர் ஹசன், ஷட்மான் இஸ்லாம், மொமினுல் ஹக், முஷ்பிகுர் ரஹீம், ஷாகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ், மெஹிதி ஹசன், தைஜுல் இஸ்லாம், நயீம் ஹசன், நஹித் ரானா, ஷொரிபுல் இஸ்லாம், ஹசன் மஹ்முத், தஸ்கின் அகமது, சையத் காலித் அகமது

    • தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 357 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • அடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 233 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    போர்ட் ஆப் ஸ்பெயின்:

    வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

    முதலாவது டெஸ்ட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் கடந்த 7-ம் தேதி தொடங்கியது.

    டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 357 ரன்கள் குவித்தது. டோனி டி ஜோர்ஜி 78 ரன்னும், கேப்டன் பவுமா 86 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். வியான் முல்டர் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜோமல் வாரிக்கன் 4 விக்கெட்டும், ஜெய்டன் சீல்ஸ் 3 விக்கெட்டும், கீமர் ரோச் விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. முதல் விக்கெட்டுக்கு 53 ரன்கள் சேர்த்தனர். அதன்பின் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன.

    கெய்சி கார்டி 42 ரன்னும், ஹோல்டர் 36 ரன்னும், பிராத்வெயிட், மிகைல் லூயிஸ் தலா 35 ரன்னும் எடுத்தனர். கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய வாரிக்கன் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் மகாராஜ் 4 விக்கெட்டும், ரபாடா விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, தென் ஆப்பிரிக்கா 2வது இன்னிங்சை விளையாடி வருகிறது. நான்காம் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா 30 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம் அந்த அணி 154 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    • நாட்டிலிருந்து எல்லாவிதமான வன்முறைகளையும் விலக்கி ஒன்றாக வாழுவோம் என நான் நம்புகிறேன்.
    • ஏனென்றால் இந்த நாடு நம் அனைவருக்கும் சொந்தமானது.

    வங்கதேசத்தில் நடந்து வரும் வன்முறைகள் காரணமாக அங்கு அசாதாரணமான சூழல் நிலவி வருகிறது. இக்கலவரத்தின் போது அந்நாட்டில் உள்ள பெரும்பாலான இடங்கள் தீக்கிரையாகின. அதிலும் குறிப்பாக அந்நாட்டு கிரிக்கெட் வீரர் லிட்டன் தாஸின் வீடும் எரிக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்தன.

    இந்நிலையில் போராட்டத்தில் தனது வீடு எரிக்கப்பட்டதாக வெளியான வதந்தி தவறானது என்று லிட்டன் தாஸ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    என் நாட்டு மக்களே, நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். சமீப நாள்களாக எனது வீடு எரிக்கப்படுவதாக செய்திகள் பரவி வருகின்றன. ஆனால் இந்த செய்தி முற்றிலும் தவறானது. இந்த வதந்திகளுக்கு கவனம் செலுத்த வேண்டாம். நானும் எனது குடும்பத்தினரும் முற்றிலும் பாதுகாப்பாக உள்ளோம். வங்கதேசம் ஒரு வகுப்புவாத நாடு என்று நான் உண்மையிலேயே நம்புகிறேன்.

    அதனால் நாம் அனைவரும் ஒன்றாக இருந்து இந்த நாட்டை எவ்வாறு முன்னோக்கி கொண்டு செல்வது என்பதில் கவனம் செலுத்த வேண்டும். முழு நாட்டுடனும் எனது தினாஜ்பூர் மக்களுடனும், மற்றவர்களைக் காப்பாற்ற நீங்கள் எழுந்து நின்ற விதம் உண்மையிலேயே பாராட்டுக்குரியது. நான் உங்களுக்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இந்த நாட்டிலிருந்து எல்லாவிதமான வன்முறைகளையும் விலக்கி ஒன்றாக வாழுவோம் என நான் நம்புகிறேன். ஏனென்றால் இந்த நாடு நம் அனைவருக்கும் சொந்தமானது.

    இவ்வாறு தாஸ் கூறினா.

    • பல முக்கிய கிரிக்கெட் வீரர்கள், ஜிதேஷுக்கும் ஷலகாவுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
    • இந்தியாவின் புதிய டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்தார்.

    இந்திய கிரிக்கெட்டின் அணியின் வீரரும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் பேட்டரான ஜிதேஷ் ஷர்மா மற்றும் ஷலகா மேகேஷ்வார் ஆகியோர் ஆகஸ்டு 8-ந் தேதி நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.

    30 வயதான ஜிதேஷ் ஷர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிச்சயதார்த்தம் ஆன புகைப்படங்களை பதிவிட்டு இதனை தெரிவித்தார். இருவரும் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள்.

    இந்த நிகழ்வுக்காக பல முக்கிய கிரிக்கெட் வீரர்கள், ஜிதேஷுக்கும் ஷலகாவுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்தியாவின் புதிய டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ், ருதுராஜ் காய்க்வாட், மற்றும் சிவம் துபே உள்ளிட்டோர் சமூக ஊடகங்களில் வாழ்த்துகளை பகிர்ந்தனர்.

    ஷலகா மேகேஷ்வார் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேஷன் என்ஜினீயரிங் படித்தவர் மற்றும் நாக்பூரில் Advent Software Pvt. Ltd-ல் Software Engineer-ஆக பணியாற்றுகிறார்.

    ஜிதேஷ் ஷர்மா இந்தியா சார்பாக 9 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். ஆனால் சமீபத்திய ஐபிஎல் சீசனில் பெரிதாக ரன் எடுக்கவில்லை. இதனால் டி20 உலகக்கோப்பை 2024 அணியில் இடம் பெற முடியவில்லை.

    • எனது கேரியரில் நான் இன்னும் முன்னேற வேண்டும்.
    • எனது பயிற்சி மற்றும் கடின உழைப்பில் அதிகபட்ச முயற்சியை மேற்கொண்டு வருகிறேன்.

    இந்திய அணி சமீபத்தில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி, ஒருநாள் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்தது.

    இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாகவே இந்திய அணியின் வீரர்கள் தேர்வு குறித்து பல்வேறு சர்ச்சைகளும் சலசலப்புகளும் எழுந்தன. அதிலும் குறிப்பாக இந்திய அணி கடைசியாக விளையாடிய ஒருநாள் போட்டியில் சதமடித்து அணியின் வெற்றிக்கு உதவிய சஞ்சு சாம்சன், இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார்.

    இதனால் இந்திய அணி தேர்வு குழுவினர் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகவும், சதமடித்த பிறகும் சஞ்சு சாம்சனை வேண்டுமென்றே அணியில் இருந்து ஓரங்கட்டுவதாகவும் ரசிகர்கள் குற்றச்சாட்டுகளை அடுக்கினர்.

    இந்நிலையில் சமீபத்தில் சஞ்சு சாம்சன் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவரிடம், நீங்கள் தென் ஆப்பிரிக்காவில் சதம் அடித்த பிறகும் ஒருநாள் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளீர்கள். ஒருநாள் உலகக்கோப்பை தொடர் நடைபெறும் சமயத்தில் டி20 அணியிலும், டி20 உலகக்கோப்பை சமயத்தில் ஒருநாள் அணியிலும் வாய்ப்பினை பெறுகிறீர்கள். இதனால் ஒவ்வொரு முறையும் இது விவாதமாக மாறிவரும் நிலையில், அணி தேர்வு குறித்து உங்கள் கருத்து என்ன? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.

    இதற்கு பதிலளித்துள்ள சஞ்சு சாம்சன், "அவர்கள் என்னை விளையாட அழைத்தால், நான் சென்று விளையாடுவேன். இல்லை என்றால் பரவாயில்லை என்று விட்டுவிடுவேன். மேற்கொண்டு அதுபற்றி நான் அதிகம் யோசிப்பதில்லை. இந்திய அணி தற்போது நன்றாக விளையாடி வருகிறது, அதனால் எந்த பிரச்சனையும் இல்லை. மேலும் நான் நேர்மறையாக இருக்க விரும்புகிறேன் மற்றும் என்னால் கட்டுப்படுத்தக்கூடியவற்றில் மட்டுமே கவனம் செலுத்த விரும்புகிறேன்.

    எனது பயிற்சி மற்றும் கடின உழைப்பில் அதிகபட்ச முயற்சியை மேற்கொண்டு வருகிறேன். அது எனது விளையாட்டை மேம்படுத்த உதவிவருகிறது. எனது கேரியரில் நான் இன்னும் முன்னேற வேண்டும். அதனால் நான் எனது விளையாட்டை மேம்படுத்துவதிலும், என் கட்டுப்பாட்டில் உள்ளவற்றில் மட்டுமே கவனம் செலுத்துவதிலும் தற்சமயம் ஆர்வம் காட்டிவருகிறேன்.

    என்று சாம்சன் கூறினார்,

    • இங்கிலாந்தில் 100 பந்துகளை கொண்ட ஹண்ட்ரட் தொடர் நடைபெற்று வருகிறது.
    • ரஷித் கான் வீசிய 5 பந்துகளை கொண்ட ஒரே ஓவரில் பொல்லார்ட் 5 சிக்சர்களைப் பறக்க விட்டார்.

    இங்கிலாந்தில் 100 பந்துகளை கொண்ட ஹண்ட்ரட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 24வது லீக் போட்டியில் ட்ரெண்ட் ராக்கெட்ஸ் மற்றும் சௌதர்ன் பிரேவ்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ட்ரெண்ட் ராக்கெட்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 100 பந்துகளில் 8 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டாம் பாட்டன் 30 ரன்கள் எடுத்தார். சௌதர்ன் பிரேவ்ஸ் தரப்பில் அதிகபட்சமாக கிரிஸ் ஜோர்டான் 3, ஜோப்ரா ஆர்ச்சர் 2, பிரிக்ஸ் 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

    அதைத் தொடர்ந்து விளையாடிய சௌதர்ன் பிரேவ்ஸ் அணிக்கு கடைசி 20 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டது. இந்நிலையில் அந்த ஓவரை உலகின் நம்பர் ஒன் டி20 சுழற்பந்து வீச்சாளராக கருதப்படும் ரஷித் கான் வீசினார்.

    அவர் வீசிய 5 பந்துகளை கொண்ட ஒரே ஓவரில் பொல்லார்ட் அடுத்தடுத்து 5 சிக்சர்களைப் பறக்க விட்டார். அந்த வகையில் உலகின் நம்பர் ஒன் டி20 பவுலரையே பிரித்து மேய்ந்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார் பொல்லார்ட். பொல்லார்ட் 2 பவுண்டரி 5 சிக்ஸருடன் 45 (23) ரன்கள் விளாசி அவுட்டானார்.


    இறுதியில் 99-வது பந்திலேயே சௌதர்ன் பிரேவ்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பொல்லார்ட் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். 

    • பேட்மிண்டனை காட்டிலும் கிரிக்கெட் கடினமானது அல்ல என சாய்னா நேவால் தெரிவித்தார்.
    • சானியா நேவாலிடம் கொல்கத்தா வீரர் ரகுவன்ஷி மன்னிப்பு கோரினார்.

    பேட்மிண்டனில் இந்திய நட்சத்திர வீராங்கனையாக வலம் வந்த சாய்னா நேவால் 2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றி வரலாறு படைத்தார். மேலும் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் 2 பதக்கம் வென்றுள்ள அவர் தரவரிசையில் 'நம்பர் 1' இடத்தையும் அலங்கரித்தார். காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கத்தினையும் வென்றுள்ளார்.

    ஆனால் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஓரிரு ஆண்டுகளில் அவரது ஆட்டத்திறன் வெகுவாக பாதிக்கப்பட்டது. முழு உடல்தகுதியை எட்ட முடியாமல் போராடி வருகிறார்.

    இந்நிலையில் டென்னிஸ், பேட்மிண்டன், கூடைப்பந்து விளையாட்டை காட்டிலும் கிரிக்கெட் உடல் ரீதியாக கடினமானது அல்ல என கடந்த மாதம் சாய்னா நேவால் தெரிவித்தார்.

    இதற்கு கொல்கத்தா அணியின் இளம் வீரர் ரகுவன்ஷி பதலளிக்கும் வகையில், நீங்கள் பும்ராவின் 150 கி.மீ வேகத்தை தலையில் வாங்கி பாருங்கள் அப்போது தெரியும் என கூறினார். இந்த கருத்து ரசிகர்களிடையே எதிர்ப்பை தெரிவித்து வந்தது.

    இதனையடுத்து அந்த கருத்து தொடர்பாக சாய்னா நேவாலிடம் ரகுவன்ஷி மன்னிப்பு கேட்டார்.

    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சுபங்கர் மிஸ்ராவின் போட்காஸ்டில் சாய்னா நேவால் பேசியுள்ளார்.

    விராட் கோலி, ரோகித் போன்று ஆக வேண்டும் பலர் ஆசைப்படுவார்கள். ஆனால் சில வீரர்களால் மட்டும் தான் அதை அடைவார்கள். அதை நான் திறமை என்று நெனைக்கிறேன். நான் ஏன் பும்ராவின் பந்துவீச்சை எதிர்கொள்ள வேண்டும்.

    பும்ரா பேட்மிண்டன் விளையாடினால் அவர் என்னுடைய 300 கிமீ வேகத்திலான ஸ்மாஷ்-ஐ எதிர்கொள்ள முடியாது.

    நாம் நமது நாட்டுக்குள்ளே இப்படி சண்டையிட்டுக் கொண்டிருக்கக் கூடாது. ஒவ்வொரு விளையாட்டுக்கும் இங்கே இடம் உள்ளது. ஆனால், நீங்கள் மற்ற விளையாட்டுக்கும் மதிப்பு கொடுங்கள். எப்போதும் நாம் கிரிக்கெட் மற்றும் பாலிவுட் மீதுதான் கவனம் செலுத்துகிறோம்.

    நம்மிடம் எத்தனை பேட்மிண்டன் அகாடமிகள் உள்ளன? கிரிக்கெட்டில் எத்தனை அகாடமிகள் உள்ளன. பேட்மிண்டன் விளையாட்டுக்கு போதுமான வசதிகள் இருந்தால் தரமான வீரர்கள் உருவாகுவார்கள்" என்று பேசியுள்ளார்.

    • காம்ப்ளியின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ வைரலானது.
    • நான் நன்றாக இருக்கிறேன், சமூக ஊடகங்களை நம்ப வேண்டாம் என காம்ப்ளி கூறினார்.

    சில நாள்களுக்கு முன்பு, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளியின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ வைரலானது. காம்ப்ளியின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததையும், அவரால் சரியாக நிற்கக் கூட முடியவில்லை என்பதையும் அந்த காணொளியில் காண முடிந்தது. முன்னாள் கிரிக்கெட் வீரரின் இத்தகைய நிலையைக் கண்டு, ரசிகர்கள் மிகவும் வருத்தமடைந்து, அவருக்கு உதவுமாறும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    இந்நிலையில் வினோத் காம்ப்ளி தனது வைரலான வீடியோ குறித்து அவர்களிடம் பேசுகையில். "நான் நன்றாக இருக்கிறேன், சமூக ஊடகங்களை நம்ப வேண்டாம்" என்று கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்கொண்டு காம்ப்ளியின் நண்பர் மார்கஸ் கூறுகையில், "நாங்கள் அவரை சந்தித்தபோது, அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார், அவர் குணமடைந்து வருகிறார், அவரது உடல்நிலை மிகவும் நன்றாக உள்ளது. வைரலாகி வரும் காணொளி பழையது" என்று தெரிவித்துள்ளார். 

    இதன்மூலம் வினோத் காம்ப்ளி தற்சமயம் நலமுடன் இருக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீரராக அறியபட்ட வினோத் காம்ப்ளி, இந்திய அணிக்காக 1991-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி 17 டெஸ்ட் மற்றும் 104 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6 சதங்கள், 17 அரைசதங்கள் என 3,500க்கும் மேற்பட்ட ரன்களையும் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் முகமது சமி அணிக்கு திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
    • காயத்தில் இருந்து மீண்ட சமி பேட்டிங்கில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

    காயத்தில் இருந்து மீண்டு இந்திய அணியில் இடம்பிடிக்க காத்திருக்கும் இந்திய வீரர் முகமது ஷமி தற்போது பேட்டிங் பயிற்சியை மேற்கொண்டு வரும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

    இந்திய அணி சமீபத்தில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடியது. இதில் டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில், ஒருநாள் தொடரை இலங்கை அணியிடம் இழந்துள்ளது.

    இதையடுத்து இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள வங்கதேச அணியானது இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது.

    இந்நிலையில் வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் முகமது சமி அணிக்கு திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகின. காயத்தால் எந்தவொரு சர்வதேச கிரிக்கெட் தொடர்களிலும் முகமது சமி பங்கேற்காமல் இருந்தார்.


    இந்நிலையில் காயத்தில் இருந்து மீண்டு வரும் முகமது சமி இந்திய அணிக்கு திரும்புவதற்கு முன்னதாக ஊள்ளூர் போட்டிகளில் விளையாடவுள்ளதாகவும் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தனது கம்பேக்கிற்காக கடினமாக உழைத்து வரும் அவர் தற்சமயம் பேட்டிங் பயிற்சியிலும் ஈடுபட்டு வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

    ×