என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
- இதில் இருந்து மீண்டுவர சில காலம் ஆகும்.
- மொத்த அணியினருக்கும் முழு பாராட்டை கொடுக்க வேண்டும்.
2024 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி திரில் வெற்றி பெற்று அசத்தியது. பரபரப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டி கடைசி ஓவரின், கடைசி பந்துவரை திரில் அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கியது.
ஐ.சி.சி. நடத்திய உலகக் கோப்பை தொடர்களில் முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி தென் ஆப்பிரிக்கா அணி அசத்தியது. இறுதிப் போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென் ஆப்பிரிக்கா வெற்றி வாய்ப்பை இந்தியாவிடம் பறிக் கொடுத்தது.
உலகக் கோப்பை தோல்வியை தொடர்ந்து போட்டிக்கு பிறகு பேசிய தென் ஆப்பிரிக்கா அணி கேப்டன் ஏய்டன் மார்க்ரம் கூறும் போது, "மிகவும் வருத்தமாகத் தான் இருக்கிறது. இதில் இருந்து மீண்டுவர சில காலம் ஆகும். வலிக்கிறது. ஆனால் பந்துவீச்சாளர்கள் மற்றும் மொத்த அணியினருக்கும் முழு பாராட்டை கொடுக்க வேண்டும்."
"நாங்கள் சிறப்பாக பந்துவீசினோம். அவர்களை எங்களால் அடிக்க முடிந்த ஸ்கோரில் கட்டுப்படுத்தினோம். நாங்கள் சிறப்பாக பேட் செய்தோம். எனினும், கிரிக்கெட் எனும் தலைசிறந்த போட்டியின் சூழல் இன்று எங்களுக்கானதாக அமையவில்லை."
"நாங்கள் ஏராளமான போட்டிகளை கடந்து வந்திருக்கிறோம். கடைசி பந்தை வீசி முடிக்கும் வரை அது முடியாமல் தான் இருந்தது. போட்டியின் போது நாங்கள் சவுகரியமான நிலைக்கு வரவேயில்லை. எங்கள் மீது ஸ்கோர் போர்டு அழுத்தம் இருந்தது. அந்த வகையில், இந்த இறுதிப் போட்டிக்கு தகுதியான அணி நாங்கள் என்பதை உணர முடியும்."
"இந்த முடிவு நல்ல முறையில் அமையும் என்று நம்புகிறேன். கடுமையான போட்டி அளித்ததில் நாங்கள் பெருமை கொள்கிறோம், எங்களது திறமையை நல்ல முறையில் வெளிக்கொண்டு வருவோம் என்று நம்புகிறேன், என்று தெரிவித்தார்.
- மும்பை விமான நிலையத்தில் மேள தாளங்களுடன் கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றன.
- இந்தியா கேட்டின் முன் திரண்ட ரசிகர்கள் உற்சாகத்தில் ஒருவருக்கொருவர் வெற்றிகளிப்பை பரிமாறிக்கொண்டனர்.
இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அறிமுகமான 2007-ல் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் இந்தியா டி20 உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் இருந்தது. இந்த நிலையில் 17 வருடத்திற்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. நீண்ட இடைவெளிக்குப் பின் இந்தியா பெற்றுள்ள இந்த வெற்றியை நாடே கொண்டாடி வருகிறது.
#WATCH पश्चिम बंगाल: भारत के दूसरी बार टी20 विश्व कप जीतने पर कोलकाता में लोगों ने जश्न मनाया। pic.twitter.com/v7JGQC3tYE
— ANI_HindiNews (@AHindinews) June 29, 2024
#WATCH बिहार: भारत के दूसरी बार टी20 विश्व कप जीतने पर पटना में लोगों ने जश्न मनाया। pic.twitter.com/l7QZygwWL5
— ANI_HindiNews (@AHindinews) June 29, 2024
#WATCH | Telangana: Team India fans celebrate the win of India in the T20 World Cup final(Visuals from Hyderabad) pic.twitter.com/WhswVs9APs
— ANI (@ANI) June 29, 2024
#WATCH | Madhya Pradesh: Fans celebrate after India wins T20 World Cup final by beating South Africa in the finals(Visuals from Indore) pic.twitter.com/n8SXRxGh0Q
— ANI (@ANI) June 29, 2024
நள்ளிரவில் பிரதான நகரங்களில் தெருக்களை ஆக்கிரமித்த ரசிகர்கள் இனிப்புகளை வழங்கியும், பட்டாசுகளை வெடித்தும் இந்தியாவின் வெற்றியை கொண்டாடித் தீர்த்து வருகின்றனர். மும்பை விமான நிலையத்தில் மேள தாளங்களுடன் கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றன. நிலையத்தில் உள்ளவர்களுக்கு இனிப்புகள் பரிமாறப்பட்டன.
#WATCH | Sweets were distributed to passengers at the Mumbai airport after India's victory in the T20 World Cup 2024.(Video source - MIAL PRO) pic.twitter.com/nGjEfn2NgD
— ANI (@ANI) June 30, 2024
#WATCH | Visuals of celebrations from inside the Mumbai airportIndia wins second T20 World Cup trophy, beat South Africa by 7 runs.(Video source - MIAL PRO) pic.twitter.com/xLBwKU0VFT
— ANI (@ANI) June 29, 2024
#WATCH | Maharashtra: A large number of team India fans celebrate in Nagpur after India win T20 World Cup 2024 pic.twitter.com/wAfPLA967s
— ANI (@ANI) June 29, 2024
#WATCH | Uttar Pradesh: Fans celebrate and dance after India wins T20 World Cup 2024(Visuals from Prayagraj) pic.twitter.com/AOA122jQkl
— ANI (@ANI) June 29, 2024
இந்தியா கேட்டின் முன் திரண்ட ரசிகர்கள் உற்சாகத்தில் ஒருவருக்கொருவர் வெற்றிகளிப்பை பரிமாறிக்கொண்டனர். குறிப்பாக மத்திய பிரதேச மாநில பாஜக அமைச்சர் கைலாஷ் விஜயவர்கியா தெருவில் இறங்கி தேசியக்கொடியை அசைத்து ரசிகர்களுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். மேலும் உத்தரப் பிரதேசம் கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலத் தலைநகரங்களிலும் கொண்டாட்டங்கள் கலைக்கட்டியுள்ளன.
#WATCH | Madhya Pradesh Minister Kailash Vijayvargiya joins the celebrations in Indore after India's victory in the T20 World Cup final pic.twitter.com/Il77PWfRNt
— ANI (@ANI) June 29, 2024
- இந்திய அணி 17 வருடங்களுக்கு பிறகு ஐசிசி உலகக் கோப்பையை வென்றுள்ளது.
- என் வாழ்க்கையில் இதற்காக நான் மிகவும் ஆசைப்பட்டேன்.
இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 17 வருடங்களுக்கு பிறகு ஐசிசி உலகக் கோப்பையை வென்றுள்ளது.
இந்நிலையில் இந்த போட்டியுடம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் சர்மா அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இதுவே எனது கடைசி ஆட்டம். விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை. டி20 கிரிக்கெட் விளையாட தொடங்கியதில் இருந்தே இதனை ரசித்து விளையாடி வருகிறேன். இந்த பயணத்தின் எல்லா தருணங்களையும் நான் ரசித்தேன். நான் இந்த (கோப்பையை) மோசமாக விரும்பினேன். வார்த்தைகளில் கூறுவது மிகவும் கடினம். இது நான் விரும்பியது மற்றும் நடந்தது. என் வாழ்க்கையில் இதற்காக நான் மிகவும் ஆசைப்பட்டேன். இந்த முறை கோட்டை கடந்ததில் மகிழ்ச்சி. இத்தனை வருடங்களாக நான் எடுத்த ரன்கள் எதுவும் பெரிதில்லை. இந்தியாவிற்காக போட்டிகளையும், கோப்பைகளையும் வெல்வதே என் விருப்பம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அவர் டி20-யில் 159 போட்டிகளில் விளையாடி 4231 ரன்களை குவித்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்தவர் பட்டியலில் ரோகித் முதலிடத்தில் உள்ளார். சர்வதேச டி20 போட்டிகளில் ஐந்து சதங்கள் அடித்தவர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். அவரது டி20 பயணம் 2007-ல் அறிமுகமான டி20 உலகக் கோப்பையுடன் தொடங்கியது. அங்கு அவர் இந்தியாவின் முதல் பட்டத்தை வென்றதில் முக்கிய வீரராக இருந்தார். இப்போது, கேப்டனாக இந்தியாவை இரண்டாவது உலக கோப்பை வெல்ல அழைத்துச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 2007-ல் இந்தியா டோனி தலைமையில் சாம்பியன் பட்டம் வென்றது.
- 17 வருடத்திற்குப் பிறகு தற்போது சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அறிமுகமான 2007-ல் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் இந்தியா டி20 உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் இருந்தது. இந்த நிலையில் 17 வருடத்திற்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
வெஸ்ட் இண்டீஸ் அணி இதற்கு முன்னதாக இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் இந்தியா இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
பும்ரா தொடர் நாயகன் விருதை வென்றார்.
- விராட் கோலி 59 பந்தில் 76 ரன்கள் அடித்தார்.
- ஆறு போட்டிகளில் அரைசதம் கூட அடிக்காமல் இருந்தார்.
இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்திய அணி 176 ரன்கள் அடிக்க விராட் கோலி முக்கிய காரணமாக இருந்தார். அவர் 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், ஒரு பக்கம் நிலையாக நின்று விளையாடினார். இதற்கு முன்னதாக இந்த தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அப்போது இந்திய அணி நிர்வாகம் அவருக்கு ஆதரவாக இருந்தது. விராட் கோலி ஒட்டுமொத்த திறமையையும் இறுதிப் போட்டியில் வெளிப்படுத்துவார என நம்பிக்கை தெரிவித்தார். அதேபோல் நிரூபித்து ஆட்டநாயகன் விருது பெற்றார்.
அத்துடன் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இது என்னுடைய கடைசி டி20 உலகக் கோப்பை. நாங்கள் விரும்பியதை எட்டினோம் என்றார்.
- பும்ரா 2 விக்கெட் வீழ்த்தினார்.
- பாண்ட்யா கடைசி ஓவரில் 2 விக்கெட் வீழ்த்தினார்.
டி20 உலகக் கோப்பை போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா விராட் கோலி (76), அக்சர் பட்டேல் (47) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்தது.
பின்னர் 177 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்காவின் டி காக், ஹென்ரிக்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் ஓவரில் தென்ஆப்பிரிக்கா ஒரு பவுண்டரியுடன் 6 ரன்கள் அடித்தது.
2-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் ஹென்ரிக்ஸ் க்ளீன் போல்டானார். ஹென்ரிக்ஸ் 5 பந்தில் 4 ரன் எடுத்து வெளியேறினார். அடுத்து மார்கிராம் களம் இறங்கினார். இவர் அர்ஷ்தீப் சிங் வீசிய 3-வது ஓவரின் 3வது பந்தில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்-யிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மார்கிராம் 5 பந்தில் 4 ரன்கள் எடுத்தார். அடுத்து ஸ்டப்ஸ் களம் இறங்கினார். 3 ஓவர் முடிவில் தென்ஆப்பிரிக்கா 14 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது.
4-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரில் டி காக் ஒரு பவுண்டரி அடித்தார். பும்ரா இந்த ஓவரில் 8 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதனால் தென்ஆப்பிரிக்கா 4 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 22 ரன்கள் எடுத்திருந்தது.
5-வது ஓவரை அக்சர் பட்டேல் வீசினார். இந்த ஓவரில் அக்சர் பட்டேல் இரண்டு பவுண்டரியுடன் 10 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதனால் தென்ஆப்பிரிக்கா 5 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 32 ரன்கள் எடுத்தது.
6-வது ஓவரை குல்தீப் யாதவ் வீசினார். இந்த ஓவரில் ஒரு பவுண்டரியுடன் 10 ரன்கள் விட்டுக்கொடுக்க தென்ஆப்பிரிக்கா பவர்பிளேயான முதல் 6 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 42 ரன்கள் எடுத்துள்ளது. டி காக் 20 ரன்னும், ஸ்டப்ஸ் 12 ரன்னும் எடுத்திருந்தனர்.
7-வது ஓவரை அக்சார் பட்டேல் வீசினார். இந்த ஓவரில் ஒரு பவுண்டரியுடன் 7 ரன்கள் விட்டுக்கொடுத்தார். 8-வது ஓவரை குல்தீப் யாதவ் வீசினார். இந்த ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் உடன் 13 ரன்கள் விட்டுக்கொடுத்தார். தென்ஆப்பிரிக்கா 8 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 62 ரன்கள் எடுத்து.
9-வது ஓவரை அக்சர் பட்டேல் வீசினார். இந்த ஓவரில் ஒரு சிக்ஸ் அடித்த ஸ்டப்ஸ் 5-வது பந்தில் போல்டானார். அவர் 21 பந்தில் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 31 ரன்கள் எடுத்தார். அடுத்து கிளாசன் களம் இறங்கினார். தென்ஆப்பிரிக்கா 9 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 71 ரன்கள் எடுத்தது.
10-வது ஓவரை ஹர்திக் பாண்ட்யா வீசினார். இந்த ஓவரில் ஒரு சிக்ஸ் உடன் 10 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதனால் தென்ஆப்பிரிக்கா 10 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 81 ரன்கள் எடுத்தது.
தென்ஆப்பிரிக்காவுக்கு கடைசி 10 ஓவரில் அதாவது 60 பந்தில் 96 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் 7 விக்கெட் இருந்தது. 11-வது ஓவரை ஜடேஜா வீசினார். இந்த ஓவரில் கிளாசன் ஒரு சிக்ஸ் அடித்தார். இந்த ஓவரில் 12 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.
12-வது ஓவரை குல்தீப் யாதவ் வீசினார். இந்த ஓவரில் கிளாசன் ஒரு சிக்ஸ் அடித்தார். அத்துடன் 11.3 ஓவரில் தெனஆப்பிரிக்கா 100 ரன்னைத் தொட்டது. இந்த ஓவரில் தென்ஆப்பிரிக்கா 8 ரன்கள் அடித்தது.
13-வது ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய டி காக், அடுத்த பந்தில் கேட்ச் ஆனார். அவர் 31 பந்தில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது தென்ஆப்பிரிக்கா 12.3 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்திருந்தது. 5-வது விக்கெட்டுக்கு கிளாசன் உடன் மில்லர் ஜோடி சேர்ந்தார். அப்போது 41 பந்தில் 70 ரன்கள் தேவைப்பட்டது.
14-வது ஓவரை குல்தீப் யாதவ் வீசினார். அப்போது 42 பந்தில் 68 ரன்கள் தேவைப்பட்டது. இந்த ஓவரின் 5-வது பந்தில் பவுண்டரி அடித்த மில்லர், 6-வது பந்தை சிக்சருக்கு தூக்கினார். இந்த ஓவரில் 14 ரன்கள் விட்டுக்கொடுக்க தென்ஆப்பிரிக்கா 14 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் அடித்தது.
கடைசி 6 ஓவரில் அதாவது கடைசி 36 பந்தில் 54 ரன்கள் தேவைப்பட்டது. கிளாசன் மற்றும் மில்லர் இந்திய பந்து வீச்சை மிரட்டினர். 15-வது ஓவரை அக்சர் பட்டேல் வீசினார். இந்த ஓவரில் இரண்டு பவுண்டரி, இரண்டு சிக்சருடன் 24 ரன்கள் விட்டுக்கொடுக்க தென்ஆப்பிரிக்கா 15 ஓவரில் 147 ரன்கள் எடுத்தது.
கடைசி 5 ஓவரில் அதாவது 30 பந்தில் 30 ரன்கள் தேவைப்பட்டது. பும்ரா 16-வது ஓவரை வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் இரண்டு ரன் எடுத்து கிளாசன் 2 பவுண்டரி, 5 சிக்சருடன் 23 பந்தில் அரைசதம் அடித்தார். பும்ரா இந்த ஓவரில் 4 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்தார். இதனால் தென்ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு 24 பந்தில் 26 ரன்கள் தேவைப்பட்டது.
17-வது ஓவரை ஹர்திக் பாண்ட்யா வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் கிளாசன் ஆட்டமிழந்தார். அவர் 27 பந்தில் 52 ரன்கள் எடுத்தார். அடுத்து மில்லர் உடன் யான்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஓவரில் ஹர்திக் பாண்ட்யா 4 ரன்கள் விட்டுக்கொடுக்க தென்ஆப்பிரிக்காவுக்கு கடைசி 18 பந்தில் 22 ரன்கள் தேவைப்பட்டது.
18-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தில் யான்சனை க்ளீன் போல்டாக்கினார். அடுத்து மகாராஜ் களம் இறங்கினார். இந்த ஓவரில் பும்ரா 2 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால் கடைசி 12 பந்தில் 20 ரன்கள் தேவைப்பட்டது.
19-வது ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். இந்த ஓவரில் 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.
இதனால் கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. ஹர்திக் பாண்ட்யா வீசினார். மில்லர் எதிர்கொண்டார். முதல் பந்தை சிக்சருக்கு அடிக்க முயன்றார். ஆனால் சூர்யகுமார் யாதவ் சூப்பராக சிக்ஸ் லைனில் பிடித்தார். இதனால் மில்லர் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரபடா 5-வது பந்தில் ஆட்டழிந்தார். இந்த ஓவரில் ஹர்திக் பாண்ட்யா 8 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுக்க இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 13 வருடங்களுக்குப் பின் ஐசிசி கோப்பையை வென்றுள்ளது.
- கிளாசன் 23 பந்தில் அரைசதம் அடித்தார்.
- மில்லர் 8 பந்தில் 15 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார்.
டி20 உலகக் கோப்பை போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா விராட் கோலி (76), அக்சர் பட்டேல் (47) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்தது.
பின்னர் 177 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்காவின் டி காக், ஹென்ரிக்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் ஓவரில் தென்ஆப்பிரிக்கா ஒரு பவுண்டரியுடன் 6 ரன்கள் அடித்தது.
2-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் ஹென்ரிக்ஸ் க்ளீன் போல்டானார். ஹென்ரிக்ஸ் 5 பந்தில் 4 ரன் எடுத்து வெளியேறினார். அடுத்து மார்கிராம் களம் இறங்கினார். இவர் அர்ஷ்தீப் சிங் வீசிய 3-வது ஓவரின் 3வது பந்தில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்-யிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மார்கிராம் 5 பந்தில் 4 ரன்கள் எடுத்தார். அடுத்து ஸ்டப்ஸ் களம் இறங்கினார். 3 ஓவர் முடிவில் தென்ஆப்பிரிக்கா 14 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது.
4-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரில் டி காக் ஒரு பவுண்டரி அடித்தார். பும்ரா இந்த ஓவரில் 8 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதனால் தென்ஆப்பிரிக்கா 4 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 22 ரன்கள் எடுத்திருந்தது.
5-வது ஓவரை அக்சர் பட்டேல் வீசினார். இந்த ஓவரில் அக்சர் பட்டேல் இரண்டு பவுண்டரியுடன் 10 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதனால் தென்ஆப்பிரிக்கா 5 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 32 ரன்கள் எடுத்தது.
6-வது ஓவரை குல்தீப் யாதவ் வீசினார். இந்த ஓவரில் ஒரு பவுண்டரியுடன் 10 ரன்கள் விட்டுக்கொடுக்க தென்ஆப்பிரிக்கா பவர்பிளேயான முதல் 6 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 42 ரன்கள் எடுத்துள்ளது. டி காக் 20 ரன்னும், ஸ்டப்ஸ் 12 ரன்னும் எடுத்திருந்தனர்.
7-வது ஓவரை அக்சார் பட்டேல் வீசினார். இந்த ஓவரில் ஒரு பவுண்டரியுடன் 7 ரன்கள் விட்டுக்கொடுத்தார். 8-வது ஓவரை குல்தீப் யாதவ் வீசினார். இந்த ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் உடன் 13 ரன்கள் விட்டுக்கொடுத்தார். தென்ஆப்பிரிக்கா 8 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 62 ரன்கள் எடுத்து.
9-வது ஓவரை அக்சர் பட்டேல் வீசினார். இந்த ஓவரில் ஒரு சிக்ஸ் அடித்த ஸ்டப்ஸ் 5-வது பந்தில் போல்டானார். அவர் 21 பந்தில் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 31 ரன்கள் எடுத்தார். அடுத்து கிளாசன் களம் இறங்கினார். தென்ஆப்பிரிக்கா 9 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 71 ரன்கள் எடுத்தது.
10-வது ஓவரை ஹர்திக் பாண்ட்யா வீசினார். இந்த ஓவரில் ஒரு சிக்ஸ் உடன் 10 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதனால் தென்ஆப்பிரிக்கா 10 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 81 ரன்கள் எடுத்தது.
தென்ஆப்பிரிக்காவுக்கு கடைசி 10 ஓவரில் அதாவது 60 பந்தில் 96 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் 7 விக்கெட் இருந்தது. 11-வது ஓவரை ஜடேஜா வீசினார். இந்த ஓவரில் கிளாசன் ஒரு சிக்ஸ் அடித்தார். இந்த ஓவரில் 12 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.
12-வது ஓவரை குல்தீப் யாதவ் வீசினார். இந்த ஓவரில் கிளாசன் ஒரு சிக்ஸ் அடித்தார். அத்துடன் 11.3 ஓவரில் தெனஆப்பிரிக்கா 100 ரன்னைத் தொட்டது. இந்த ஓவரில் தென்ஆப்பிரிக்கா 8 ரன்கள் அடித்தது.
13-வது ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய டி காக், அடுத்த பந்தில் கேட்ச் ஆனார். அவர் 31 பந்தில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது தென்ஆப்பிரிக்கா 12.3 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்திருந்தது. 5-வது விக்கெட்டுக்கு கிளாசன் உடன் மில்லர் ஜோடி சேர்ந்தார். அப்போது 41 பந்தில் 70 ரன்கள் தேவைப்பட்டது.
14-வது ஓவரை குல்தீப் யாதவ் வீசினார். அப்போது 42 பந்தில் 68 ரன்கள் தேவைப்பட்டது. இந்த ஓவரின் 5-வது பந்தில் பவுண்டரி அடித்த மில்லர், 6-வது பந்தை சிக்சருக்கு தூக்கினார். இந்த ஓவரில் 14 ரன்கள் விட்டுக்கொடுக்க தென்ஆப்பிரிக்கா 14 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் அடித்தது.
கடைசி 6 ஓவரில் அதாவது கடைசி 36 பந்தில் 54 ரன்கள் தேவைப்பட்டது. கிளாசன் மற்றும் மில்லர் இந்திய பந்து வீச்சை மிரட்டினர். 15-வது ஓவரை அக்சர் பட்டேல் வீசினார். இந்த ஓவரில் இரண்டு பவுண்டரி, இரண்டு சிக்சருடன் 24 ரன்கள் விட்டுக்கொடுக்க தென்ஆப்பிரிக்கா 15 ஓவரில் 147 ரன்கள் எடுத்தது.
கடைசி 5 ஓவரில் அதாவது 30 பந்தில் 30 ரன்கள் தேவைப்பட்டது. பும்ரா 16-வது ஓவரை வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் இரண்டு ரன் எடுத்து கிளாசன் 2 பவுண்டரி, 5 சிக்சருடன் 23 பந்தில் அரைசதம் அடித்தார். பும்ரா இந்த ஓவரில் 4 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்தார். இதனால் தென்ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு 24 பந்தில் 26 ரன்கள் தேவைப்பட்டது.
17-வது ஓவரை ஹர்திக் பாண்ட்யா வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் கிளாசன் ஆட்டமிழந்தார். அவர் 27 பந்தில் 52 ரன்கள் எடுத்தார். இந்த ஓவரில் ஹர்திக் பாண்ட்யா 4 ரன்கள் விட்டுக்கொடுக்க தென்ஆப்பிரிக்காவுக்கு கடைசி 18 பந்தில் 22 ரன்கள் தேவை.
- அக்சார் பட்டேல் 3 ஓவரில் 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார்.
- குல்தீப் யாதவ் 2 ஓவரில் 23 ரன்கள் விட்டுக் கொடுத்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா விராட் கோலி (76), அக்சர் பட்டேல் (47) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்தது.
பின்னர் 177 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்காவின் டி காக், ஹென்ரிக்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் ஓவரில் தென்ஆப்பிரிக்கா ஒரு பவுண்டரியுடன் 6 ரன்கள் அடித்தது.
2-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் ஹென்ரிக்ஸ் க்ளீன் போல்டானார். ஹென்ரிக்ஸ் 5 பந்தில் 4 ரன் எடுத்து வெளியேறினார். அடுத்து மார்கிராம் களம் இறங்கினார். இவர் அர்ஷ்தீப் சிங் வீசிய 3-வது ஓவரின் 3வது பந்தில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்-யிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மார்கிராம் 5 பந்தில் 4 ரன்கள் எடுத்தார். அடுத்து ஸ்டப்ஸ் களம் இறங்கினார். 3 ஓவர் முடிவில் தென்ஆப்பிரிக்கா 14 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது.
4-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரில் டி காக் ஒரு பவுண்டரி அடித்தார். பும்ரா இந்த ஓவரில் 8 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதனால் தென்ஆப்பிரிக்கா 4 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 22 ரன்கள் எடுத்திருந்தது.
5-வது ஓவரை அக்சர் பட்டேல் வீசினார். இந்த ஓவரில் அக்சர் பட்டேல் இரண்டு பவுண்டரியுடன் 10 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதனால் தென்ஆப்பிரிக்கா 5 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 32 ரன்கள் எடுத்தது.
6-வது ஓவரை குல்தீப் யாதவ் வீசினார். இந்த ஓவரில் ஒரு பவுண்டரியுடன் 10 ரன்கள் விட்டுக்கொடுக்க தென்ஆப்பிரிக்கா பவர்பிளேயான முதல் 6 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 42 ரன்கள் எடுத்துள்ளது. டி காக் 20 ரன்னும், ஸ்டப்ஸ் 12 ரன்னும் எடுத்திருந்தனர்.
7-வது ஓவரை அக்சார் பட்டேல் வீசினார். இந்த ஓவரில் ஒரு பவுண்டரியுடன் 7 ரன்கள் விட்டுக்கொடுத்தார். 8-வது ஓவரை குல்தீப் யாதவ் வீசினார். இந்த ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் உடன் 13 ரன்கள் விட்டுக்கொடுத்தார். தென்ஆப்பிரிக்கா 8 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 62 ரன்கள் எடுத்து.
9-வது ஓவரை அக்சர் பட்டேல் வீசினார். இந்த ஓவரில் ஒரு சிக்ஸ் அடித்த ஸ்டப்ஸ் 5-வது பந்தில் போல்டானார். அவர் 21 பந்தில் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 31 ரன்கள் எடுத்தார். அடுத்து கிளாசன் களம் இறங்கினார். தென்ஆப்பிரிக்கா 9 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 71 ரன்கள் எடுத்தது.
10-வது ஓவரை ஹர்திக் பாண்ட்யா வீசினார். இந்த ஓவரில் ஒரு சிக்ஸ் உடன் 10 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதனால் தென்ஆப்பிரிக்கா 10 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 81 ரன்கள் எடுத்துள்ளது. டி காக் 23 பந்தில் 30 ரன்னுடனும், கிளாசன் 7 பந்தில் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
- டி காக் 29 ரன்கள் அடித்து களத்தில் உள்ளார்.
- ஸ்டப்ஸ் 21 பந்தில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
டி20 உலகக் கோப்பை போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா விராட் கோலி (76), அக்சர் பட்டேல் (47) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்தது.
பின்னர் 177 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்காவின் டி காக், ஹென்ரிக்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் ஓவரில் தென்ஆப்பிரிக்கா ஒரு பவுண்டரியுடன் 6 ரன்கள் அடித்தது.
2-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் ஹென்ரிக்ஸ் க்ளீன் போல்டானார். ஹென்ரிக்ஸ் 5 பந்தில் 4 ரன் எடுத்து வெளியேறினார். அடுத்து மார்கிராம் களம் இறங்கினார். இவர் அர்ஷ்தீப் சிங் வீசிய 3-வது ஓவரின் 3வது பந்தில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்-யிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மார்கிராம் 5 பந்தில் 4 ரன்கள் எடுத்தார். அடுத்து ஸ்டப்ஸ் களம் இறங்கினார். 3 ஓவர் முடிவில் தென்ஆப்பிரிக்கா 14 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது.
4-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரில் டி காக் ஒரு பவுண்டரி அடித்தார். பும்ரா இந்த ஓவரில் 8 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதனால் தென்ஆப்பிரிக்கா 4 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 22 ரன்கள் எடுத்திருந்தது.
5-வது ஓவரை அக்சர் பட்டேல் வீசினார். இந்த ஓவரில் அக்சர் பட்டேல் இரண்டு பவுண்டரியுடன் 10 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதனால் தென்ஆப்பிரிக்கா 5 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 32 ரன்கள் எடுத்தது.
6-வது ஓவரை குல்தீப் யாதவ் வீசினார். இந்த ஓவரில் ஒரு பவுண்டரியுடன் 10 ரன்கள் விட்டுக்கொடுக்க தென்ஆப்பிரிக்கா பவர்பிளேயான முதல் 6 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 42 ரன்கள் எடுத்துள்ளது. டி காக் 20 ரன்னும், ஸ்டப்ஸ் 12 ரன்னும் எடுத்திருந்தனர்.
7-வது ஓவரை அக்சார் பட்டேல் வீசினார். இந்த ஓவரில் ஒரு பவுண்டரியுடன் 7 ரன்கள் விட்டுக்கொடுத்தார். 8-வது ஓவரை குல்தீப் யாதவ் வீசினார். இந்த ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் உடன் 13 ரன்கள் விட்டுக்கொடுத்தார். தென்ஆப்பிரிக்கா 8 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 62 ரன்கள் எடுத்து.
9-வது ஓவரை அக்சர் பட்டேல் வீசினார். இந்த ஓவரில் ஒரு சிக்ஸ் அடித்த ஸ்டப்ஸ் 5-வது பந்தில் போல்டானார். அவர் 21 பந்தில் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 31 ரன்கள் எடுத்தார். அடுத்து கிளாசன் களம் இறங்கினார்.
தென்ஆப்பிரிக்கா 9 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 71 ரன்கள் எடுத்துள்ளது. டி காக் 22 பந்தில் 29 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார்.
- பும்ரா பந்தில் ஹென்ரிக்ஸ் க்ளீன் போல்டானார்.
- மார்கிராம் அர்ஷ்தீப் சிங் பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
டி20 உலகக் கோப்பை போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா விராட் கோலி (76), அக்சர் பட்டேல் (47) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்தது.
பின்னர் 177 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்காவின் டி காக், ஹென்ரிக்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் ஓவரில் தென்ஆப்பிரிக்கா ஒரு பவுண்டரியுடன் 6 ரன்கள் அடித்தது.
2-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் ஹென்ரிக்ஸ் க்ளீன் போல்டானார். ஹென்ரிக்ஸ் 5 பந்தில் 4 ரன் எடுத்து வெளியேறினார். அடுத்து மார்கிராம் களம் இறங்கினார். இவர் அர்ஷ்தீப் சிங் வீசிய 3-வது ஓவரின் 3வது பந்தில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்-யிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மார்கிராம் 5 பந்தில் 4 ரன்கள் எடுத்தார். அடுத்து ஸ்டப்ஸ் களம் இறங்கினார். 3 ஓவர் முடிவில் தென்ஆப்பிரிக்கா 14 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது.
4-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரில் டி காக் ஒரு பவுண்டரி அடித்தார். பும்ரா இந்த ஓவரில் 8 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதனால் தென்ஆப்பிரிக்கா 4 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 22 ரன்கள் எடுத்திருந்தது.
5-வது ஓவரை அக்சர் பட்டேல் வீசினார். இந்த ஓவரில் அக்சர் பட்டேல் இரண்டு பவுண்டரியுடன் 10 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதனால் தென்ஆப்பிரிக்கா 5 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 32 ரன்கள் எடுத்தது.
6-வது ஓவரை குல்தீப் யாதவ் வீசினார். இந்த ஓவரில் ஒரு பவுண்டரியுடன் 10 ரன்கள் விட்டுக்கொடுக்க தென்ஆப்பிரிக்கா பவர்பிளேயான முதல் 6 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 42 ரன்கள் எடுத்துள்ளது. டி காக் 20 ரன்னுடனும், ஸ்டப்ஸ் 12 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
- அக்சர் பட்டேல் 47 ரன்கள் விளாசினார்.
- விராட் கோலி 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி பார்படாஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை யான்சன் வீசினார். முதல் பந்தில் ரோகித் சர்மா ஒரு ரன் எடுத்தார்.
அடுத்த பந்தை விராட் கோலி சந்தித்தார். பாயின்ட் திசையில் விராட் கோலி அருமையாக முதல் பந்தையே பவுண்டரிக்கு விரட்டினார். அதன்பின் 3-வது மற்றும் 6-வது பந்தையும் விராட் கோலி பவுண்டரிக்கு விரட்டினார். இதனால் முதல் ஓவரில் இந்தியாவுக்கு 15 ரன்கள் கிடைத்தது.
2-வது ஓவரை மகாராஜ் வீசினார். முதல் இரண்டு பந்துகளையும் ரோகித் சர்மா பவுண்டரிக்கு விரட்டினார். ஆனால் 4-வது பந்தை ஸ்விப் அடிக்க முயன்றார். ஆனால் கிளாசன் சிறப்பாக கேட்ச் பிடித்தார். இதனால் ரோகித் சர்மா 5 பந்தில் 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 1.4 ஓவரில் 23 ரன்கள் எடுத்திருந்தது.
அடுத்து வந்த ரிஷப் பண்ட் 2-வது ஓவரின் கடைசி பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து டக்அவுட் ஆனார். அப்போது இந்தியா 1.6 ஓவரில் 23 ரன்கள் எடுத்திருந்தது. மகாராஜ் 2-வது ஓவரில் இரண்டு பவுண்டர் கொடுத்து இரண்டு பெரிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
3-வது ஓவரை ரபாடா வீசினார். இந்த ஓவரில் இந்தியாவுக்கு 3 ரன்கள் மட்டுமே கிடைத்தது. அடுத்த ஓவரை மகாராஜ் வீசினார். இந்த ஓவரில் கோலி ஒரு பவுண்டரி அடிக்க இந்தியாவுக்கு 6 ரன்கள் கிடைத்தது. இந்தியா 4 ஓவர் முடிவில் 32 ரன்கள் எடுத்திருந்தது.
5-வது ஓவரை ரபடா வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தை சூர்யகுமார் யாதவ் லெக்சைடு தூக்கி அடித்தார். ஆனால் கிளாசின் அற்புதமாக கேட்ச் பிடிக்க சூர்யகுமார் யாதவ் 4 பந்தில் 3 ரன் எடுத்து வெளியேறினார். அப்புாது இந்தியா 4.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 34 ரன்கள் எடுத்திருந்தது.
அடுத்து அக்சட் பட்டேல் களம் இறங்கினார். 5-வது ஓவரில் ஒரு விக்கெட்டை இழந்த இந்தியா ஒரு பவுண்டரியுடன் ஏழு ரன்கள் அடித்தது.
பவர்பிளேயின் கடைசி ஓவரான 6-வது ஓவரை மார்கிராம் வீசினார். இந்த ஓவரில் இந்தியாவுக்கு 6 ரன்கள் கிடைத்தது. இதனால் பவர்பிளேயான முதல் 6 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் அடித்தது.
7-வது ஓவரை மார்கிராம் வீசினார். இந்த ஓவரில் அக்சர் பட்டேல் ஒரு சிக்ஸ் அடித்தார். அடுத்த ஓவரை மகாராஜ் வீசினார். இந்த ஓவரிலும் ஒரு சிக்ஸ் விளாசினார். இந்திய அணிக்கு இக்கட்டான நிலையில் இரண்டு சிக்ஸ் அடித்து கொடுத்தார். இதனால் இந்தியா 9 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 68 ரன்கள் எடுத்திருந்தது.
10-வது ஓவரை ஷம்சி வீசினார். இந்த ஓவரில் இந்தியாவுக்கு 7 ரன்கள் கிடைத்தது. ஆகையால் 10 ஓவர் முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 75 ரன்கள் எடுத்து நல்ல நிலையை எட்டியது.
11-வது ஓவரை யான்சன் வீசினார். இந்த ஓவரில் இந்தியாவுக்கு 7 ரன்கள் கிடைத்தது.
12-வது ஷம்சி வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தை சிக்சருக்கு தூக்கினார். இந்த ஓவரில் இந்தியாவுக்கு 11 ரன்கள் கிடைத்தது.
நோர்ஜே வீசிய 13-வது ஓவரில் இந்தியாவுக்கு 5 ரன் கிடைத்தது. 14-வது ஓவரை ரபாடா வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை பட்டேல் சிக்சருக்கு தூக்கினார். ஆனால் 4-வது பந்தில் எதிர்பாராத வகையில் ரன்அவுட் ஆனார்.
விராட் கோலி லெக்சைடில் அடிக்க முயன்றார். பந்து விக்கெட் கீப்பர் அருகில் சென்றது. அதற்குள் அக்சர் பட்டேல் நீண்ட தூரம் ஓடி வந்தார். டி காக் கரெக்டாக ஸ்டெம்பில் அடிக்க அக்சர் பட்டேல் ரன்அவுட் ஆனார். அவர் 31 பந்தில் 1 பவுண்டரி, 4 சிக்சருடன் 47 ரன்கள் அடித்தார். அப்போது இந்தியா 13.3 ஓவரில் 106 ரன்கள் அடித்திருந்தது. அக்சர் பட்டேல்- விராட் கோலி ஜோடி 72 ரன்கள் குவித்தது. 14-வது ஓவரில் இந்தியாவுக்கு 10 ரன்கள் கிடைத்தது. ஒரு விக்கெட்டை இழந்தது.
அடுத்து 5-வது விக்கெட்டுக்கு ஷிவம் துபே களம் இறங்கினார். யான்சன் 15-வது ஓவரை வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை துபே சிக்சருக்கு தூக்கினார். இந்த ஓவரில் 10 ரன்கள் கிடைத்தது. இந்தியா 15 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்தது.
16-வது ஓவரை ஷம்சி வீசினார். இந்த ஓவரில் ஷிவம் துபே ஒரு பவுண்டரி அடித்தார். இதனால் 8 ரன்கள் கிடைத்தது.
17-வது ஓவரை நோர்ஜே வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தை பவுண்டரிக்கு விரட்டினார் ஷிம் துபே. இதனால் இந்த ஓவரில் இந்தியாவுக்கு 8 ரன்கள் கிடைத்தது. 4 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்திருந்தது. இதற்கிடையே விராட் கோலி 5-வது பந்தில் ஒரு ரன் எடுத்து 48 பந்தில் 4 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார்.
18-வது ஓவரை ரபடா வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை சிக்சருக்கு தூக்கினார். 3-வது பந்தில் பவுண்டரி அடித்தார். இந்த ஓவரில் 16 ரன்கள் கிடைக்க இந்தியா 18 ஓவரில் 150 ரன்கள் அடித்தது.
19-வது ஓவரை யான்சன் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை நோ-பால் ஆக வீசினார். அதற்கு பதிலாக போடப்பட்ட பந்தில் கோல் ரன் அடிக்கவில்லை. 2-வது பந்தில் விராட் கோலி பவுண்டரி அடித்தார். 4-வது பந்தை விராட் கோலி சிக்சருக்கு தூக்கினார். 5-வது பந்தில் விராட் கோலி கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 59 பந்தில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து ஹர்திக் பாண்ட்யா களம் இறங்கினார். இவர் பந்தை தூக்கி அடிக்க முயன்றார். பந்து எட்ஜ் ஆகி கீப்பருக்கு பின் பக்கமாக பவுண்டரி சென்றது. இதனால் இந்திய அணிக்கு இந்த ஓவரில் 17 ரன்கள் கிடைத்தது. இதனால் இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது.
20-வது மற்றும் கடைசி ஓவரை நோர்ஜே வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தை துபே பவுண்டரிக்கு விரட்டினார். ஆனால் அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 16 பந்தில் 3 பவுண்டரி ஒரு சிக்சருடன் 27 ரன்கள் அடித்தார். அடுத்து ஜடேஜா களம் இறங்கினார். கடைசி பந்தில் ஜடேஜா ஆட்டமிழக்க இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் சேர்த்துள்ளது.
பாண்ட்யா 2 பந்தில் 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். நோர்ஜே கடைசி ஓவரில் 9 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.
தென்ஆப்பிரிக்கா அணியில் யான்சன் 4 ஓவரில் 49 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். மகாராஜ் 3 ஓவரில் 23 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் சாய்த்தார். ரபடா 4 ஓவரில் 36 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். நோர்ஜே 4 ஓவரில் 26 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் கைப்பற்றினார். ஷம்சி 3 ஓவரில் 26 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.
- 4வது விக்கெட்டுக்கு விராட் கோலி, அக்சர் பட்டேல் ஜோடி 72 ரன்கள் சேர்த்தது.
- சிறப்பாக ஆடிய விராட் கோலி அரை சதமடித்தார்.
பார்படாஸ்:
இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான டி20 உலகக் கோப்பையின் இறுதிப்போட்டி பார்படாசில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. ரோகித் சர்மா 5 பந்தில் 9 ரன் எடுத்து அவுட்டானார். அடுத்து வந்த ரிஷப் பண்ட் டக் அவுட் ஆனார். அப்போது இந்தியா 1.6 ஓவரில் 23 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து இறங்கிய சூர்யகுமார் யாதவ் 3 ரன் எடுத்து வெளியேறினார். அப்போது இந்தியா 4.3 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 34 ரன்கள் எடுத்திருந்தது.
தொடர்ந்து இறங்கிய அக்சர் பட்டேல் கோலியுடன் இணைந்தார். பவர் பிளேயின் முதல் 6 ஓவரில் இந்தியா 3 விக்கெட்டுக்கு 45 ரன்கள் எடுத்தது. இருவரும் இணைந்து 4வது விக்கெட்டுக்கு 72 ரன்கள் சேர்த்த நிலையில் அக்சர் பட்டேல் 47 ரன்னில் அவுட்டானார்.
இந்நிலையில், விராட் கோலி அரை சதம் கடந்தார். இது அவரது 39-வது அரை சதமாகும். இதன்மூலம் டி20 போட்டிகளில் அதிக அரை சதம் அடித்த பாபர் அசாம் சாதனையை சமன் செய்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்