என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
- டி20 உலகக் கோப்பை தொடரில் நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.
- முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கம்ரான் அக்மலை வன்மையாக கண்டித்து அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
டி20 உலகக் கோப்பை தொடரில் நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.
இது குறித்து பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரான கம்ரன் அக்மல் டி20 போட்டி நடக்கும் போது நேரலை நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் வீரரான அர்ஷ்தீப் சிங்கை ஒரு சீக்கியர் என்பதால் அவரை அவதூராக பேசினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கம்ரான் அக்மலை வன்மையாக கண்டித்து அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். அதில் "நீங்கள் சீக்கியர்களை பற்றி விமர்சிக்கும் பொழுது அவர்களை பற்றியும் அவர்களது வரலாற்றை பற்றியும் தெரிந்துக் கொண்டு பேசுங்கள். உங்களின் தாய்மார்கள் மற்றும் சகோதிரிகள் கடத்தப்பட்ட போது நேரம் காலம் பார்க்காமல் சீக்கியர்கள் காப்பாற்றினார்கள். அதனால் பேசும் பொழுது வார்த்தையை பார்த்து பேசுங்கள். உங்களை நினைக்கும் போது வெட்க கேடாக இருக்கிறது," என்று பதிவு செய்துள்ளார்.
Lakh di laanat tere Kamraan Akhmal.. You should know the history of sikhs before u open ur filthy mouth. We Sikhs saved ur mothers and sisters when they were abducted by invaders, the time invariably was 12 o'clock . Shame on you guys.. Have some Gratitude @KamiAkmal23 ??? https://t.co/5gim7hOb6f
— Harbhajan Turbanator (@harbhajan_singh) June 10, 2024
I deeply regret my recent comments and sincerely apologize to @harbhajan_singh and the Sikh community. My words were inappropriate and disrespectful. I have the utmost respect for Sikhs all over the world and never intended to hurt anyone. I am truly sorry. #Respect #Apology
— Kamran Akmal (@KamiAkmal23) June 10, 2024
இதற்கு பகிரங்க மன்னிப்பு கேட்டு கம்ரன் அக்மல் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் "நான் சமீபத்தில் சொன்ன கருத்தை நினைத்து வேதனை அடைகிறேன். என்னை மன்னித்து விடுங்கள். என்னுடைய வார்த்தை மரியாதை தக்கதல்ல. எனக்கும் உலகம் முழுவதும் உள்ள சீக்கியர்கள் மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது. நான் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் அவ்வாறு பேசவில்லை," என கூறியிருக்கிறார்.
- டேவிட் மில்லர் 38 பந்துகளில் 29 ரன்களில் ஆட்டமிழந்தார்.
- கேசவ் மகாராஜ் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 21 ஆவது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக ஹென்ட்ரிக்ஸ்- டி காக் களமிறங்கினர். ஹென்ட்ரிக்ஸ் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். அடுத்த சிறிது நேரத்தில் டிகாக் 18 ரன்னிலும் மார்க்ரம் 4, ஸ்டப்ஸ் 0 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
கிளாசன் மற்றும் டேவிட் மில்லர் பொறுப்புடன் ஆடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். 44 பந்துகளில் 46 ரன்கள் எடுத்த நிலையில் கிளாசன் விக்கெட்டை பறிகொடுத்தார். டேவிட் மில்லர் 38 பந்துகளில் 29 ரன்களில் ஆட்டமிழந்தார்.
20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 6 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. வங்காளதேசம் தரப்பில் தன்சிம் ஹசன் சாகிப் 3 விக்கெட்டும் தம்சிம் அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினார்.
எளிய இலக்கை துரத்திய வங்காளதேசம் அணிக்கு துவக்க வீரர்களான தன்சித் ஹாசன் மற்றும் கேப்டன் நஜ்முல் ஹூசைன் சுமாரான துவக்கம் கொடுத்தனர். இருவரும் முறையே 9 மற்றும் 14 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த லிட்டன் தாஸ், ஷகிப் அல் ஹாசன் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
இவர்களை தொடர்ந்து களமிறங்கிய தவ்ஹித் மற்றும் மஹ்மதுல்லா பொறுமையாக ஆடி ரன்களை சேர்த்தனர். இருவரும் முறையே 37 மற்றும் 20 ரன்களில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து வந்த வீரர்களும் ரன் குவிக்க முடியாமல் திணறினர்.
போட்டி முடிவில் வங்காளதேசம் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 109 ரன்களை சேர்த்தது. இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்கா சார்பில் கேசவ் மகாராஜ் மூன்று விக்கெட்டுகளையும், ரபாடா, நார்ட்ஜே தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
- கிளாசன் 44 பந்துகளில் 46 ரன்களுடன், டேவிட் மில்லர் 38 பந்துகளில் 29 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
- வங்காளதேசம் தரப்பில் தன்சிம் ஹசன் சாகிப் 3 விக்கெட்டும் தம்சிம் அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினார்.
வாஷிங்டன்:
டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா, வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெறும் 21-வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - வங்காளதேசம் மோதுகிறது. இதில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக ஹென்ட்ரிக்ஸ்- டி காக் களமிறங்கினர். ஹென்ட்ரிக்ஸ் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். அடுத்த சிறிது நேரத்தில் டிகாக் 18 ரன்னிலும் மார்க்ரம் 4, ஸ்டெப்ஸ் 0 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 23 ரன்னில் 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. கிளாசன் மற்றும் டேவிட் மில்லர் பொறுப்புடன் ஆடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். 44 பந்துகளில் 46 ரன்கள் எடுத்த நிலையில் கிளாசன் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்த சிறிது நேரத்தில் டேவிட் மில்லர் 38 பந்துகளில் 29 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனால் இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. வங்காளதேசம் தரப்பில் தன்சிம் ஹசன் சாகிப் 3 விக்கெட்டும் தம்சிம் அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினார்.
- இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியை நேரில் சென்று பார்த்துள்ளார்.
- இவரது பதவிக்காலத்தில் மும்பை வான்கடே மைதானத்தில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 போட்டிகளை வெற்றிகரமாக நடத்தினார்.
அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியை நேற்று நேரில் சென்று பார்த்துள்ளார்.
இந்த நிலையில் தான் இன்று திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இவரது பதவிக்காலத்தில் மும்பை வான்கடே மைதானத்தில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 போட்டிகளை வெற்றிகரமாக நடத்தினார். இதில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியும் அடங்கும்.
அண்மையில் நடந்து முடிந்த 2023 - 24 -ம் ஆண்டுக்கான ரஞ்சி டிராபி சீசனில் மும்பை டிராபியை கைப்பற்றியதில் உள்நாட்டு கிரிக்கெட்டில் அமோல் கலேயின் பங்கு முக்கியத்துவம் பெருகிறது. அமோல் கலே ஸ்டிரீட் பிரீமியர் லீக்கின் கோர் கமிட்டியிலும் இருந்தார்.
அவர், மும்பை டி20 லீக் தொடரை புதுப்பிக்க திட்டமிட்டிருந்தார். சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கு பிசிசிஐ ஊதியம் வழங்குவதைப் போன்று மும்பை வீரர்களும் போட்டி கட்டணத்தை பெறுவார்கள் என்ற முடிவை மும்பை கிரிக்கெட் சங்கம் எடுத்த போது அமோல் கலே பொறுப்பில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தான் அமெரிக்காவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போட்டியை பார்த்த நிலையில் இன்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். தற்போது சங்கய் நாயக் துணை தலைவராக இருக்கும் நிலையில், மும்பை கிரிக்கெட் சங்கத்தின் இடைக்கால பொறுப்பை ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- ஹென்ட்ரிக்ஸ் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்.
- டிகாக் 18 ரன்னில் வெளியேறினார்.
வாஷிங்டன்:
டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா, வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெறும் 21-வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - வங்காளதேசம் மோதுகிறது. இதில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக ஹென்ட்ரிக்ஸ்- டி காக் களமிறங்கினர். ஹென்ட்ரிக்ஸ் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். அடுத்த சிறிது நேரத்தில் டிகாக் 18 ரன்னிலும் மார்க்ரம் 4, ஸ்டெப்ஸ் 0 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 23 ரன்னில் 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. கிளாசன் மற்றும் டேவிட் மில்லர் பொறுப்புடன் ஆடி வருகின்றனர். வங்காளதேசம் தரப்பில் தன்சிம் ஹசன் சாகிப் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இரு அணி வீரர்கள் விவரம்:
தென் ஆப்பிரிக்கா:
ரிசா ஹெண்ட்ரிக்ஸ், குயின்டன் டிகாக், மார்க்ரம் (கேப்டன்), ஸ்டப்ஸ், ஹெண்ட்ரிச் கிளாசன், டேவிட் மில்லர், மெக்ரோ ஜென்சன், கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, அண்ட்ரிச் நோர்ட்ச், பார்ட்மென்
வங்காளதேசம்:
தச்டித் ஹசன், லிண்டன் தாஸ், நஜிமுல் ஹசன் (கேப்டன்), தவுகித் ஹிரிடே, ஷகிப் அல் ஹசன், ஜகர் அலி, முகமதுல்லா, ரஷித் ஹசன், தஷ்கின் அகமது, தம்சிம் அகமது ஷேக், முஸ்தபிசூர் ரகுமான்
- பவுலர்களை ரோகித் புத்திசாலித்தனமாக பயன்படுத்தி ஆட்டத்தை மாற்றினார்.
- மறுபுறம் இந்தியாவின் அந்த துல்லியமான பந்து வீச்சை எதிர்கொள்ள பாகிஸ்தானின் பேட்டிங் திணறியது.
டி20 உலகக் கோப்பையின் நேற்றைய லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் விளையாடிய இந்தியா 119 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனை தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் 20 ஓவரில் 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்நிலையில் பும்ரா போன்ற பவுலர்களை சரியான நேரத்தில் அறிவுப்பூர்வமாக பயன்படுத்திய கேப்டன் ரோகித் சர்மா வெற்றியை தலைகீழாக மாற்றியதாக யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
பாகிஸ்தானுக்கு எதிராக குறைந்த ஸ்கோரை கொண்ட போட்டியில் இந்தியா த்ரில் வெற்றி பெற்றுள்ளது. ரோகித் சர்மாவின் வியூகம் நிறைந்த மாஸ்டர் கிளாஸ் சிறப்பாக உள்ளது. பவுலர்களை அவர் புத்திசாலித்தனமாக பயன்படுத்தி ஆட்டத்தை மாற்றினார். மறுபுறம் இந்தியாவின் அந்த துல்லியமான பந்து வீச்சை எதிர்கொள்ள பாகிஸ்தானின் பேட்டிங் திணறியது.
இந்த வெற்றிக்கு இந்திய அணி மிகவும் தகுதியானது. ரிஷப் பண்ட் நன்றாக விளையாடினார். ஜஸ்ப்ரித் பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, அர்ஷ்தீப் சிங், அக்சர் படேல் நன்றாக பந்து வீசினர்.
இவ்வாறு யுவராஜ் கூறினார்.
- பாகிஸ்தானுக்கு எதிராக விராட் கோலியின் சாதனையை ரிஷப் பண்ட் முறியடித்துள்ளார்.
- 2014-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
9-வது டி20 உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய ஆட்டத்தில் பாகிஸ்தானை 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.
கடந்த 2007-ம் ஆண்டு முதல் டி20 உலகக் கோப்பை தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதில் முதல் சீசனில் டோனி தலைமையிலான இந்திய அணியானது டிராபியை கைப்பற்றியது. இந்த தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ராபின் உத்தப்பா அதிக ரன்கள் குவித்தார். அவர் 39 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்தப் போட்டி டிராவில் முடிந்த நிலையில் பவுல் அவுட் முறையில் இந்தியா வெற்றி பெற்றது. இறுதிப் போட்டியில் கௌதம் காம்பீர் 54 பந்துகளில் 8 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 75 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 2012-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி 61 பந்துகளில் 8 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 78 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதே போன்று 2014-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 2016-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 2021 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடந்த 2022 -ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி 53 பந்துகளில் 6 பவுண்டரி, 4 சிக்ஸர் உள்பட 82 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்த நிலையில் தான் 2024-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விராட் கோலி 4 ரன்களில் ஆட்டமிழக்கவே, ரிஷப் பண்ட் அதிகபட்சமாக 31 பந்துகளில் 6 பவுண்டரி உள்பட 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலமாக பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ந்து 5 ஆண்டுகளாக விராட் கோலி படைத்து வந்த சாதனையை ரிஷப் பண்ட் முறியடித்துள்ளார்.
- ரிஷப் பண்ட் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தினார்.
- அறுவை சிகிச்சை முடிந்ததும் கடினமான விக்கெட் கீப்பிங்கை இவ்வளவு வேகமாக செய்வது உங்களுடைய கடின உழைப்புக்கான பரிசாகும்.
டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 119 ரன்களை மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 43, அக்சர் படேல் 20 ரன்கள் எடுத்தனர். அதைத் தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் 20 ஓவரில் 113 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.
ஐ.சி.சி. தொடர்களில் ஒவ்வொரு போட்டியிலும் சிறந்து விளங்கும் இந்திய பீல்டருக்கு பி.சி.சி.ஐ. விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அதன்படி நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியாவின் சிறந்த பீல்டர் விருதை விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தட்டிச்சென்றார். அந்த ஸ்பெஷல் விருதை முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அவருக்கு வழங்கினார்.
இந்நிலையில் ரிஷப் பண்ட் விபத்து செய்தியை கேட்டு கண் கலங்கியதாக ரவி சாஸ்திரி உருக்கத்துடன் கூறினார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ரிஷப் பண்ட் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தினார். அவருடைய விபத்து செய்தியை கேட்ட போது கண் கலங்கினேன். அவரை மருத்துவமனையில் பார்த்த போது நிலைமையும் மேலும் மோசமானது. இருப்பினும் அங்கிருந்து கம்பேக் கொடுத்த அவர் இன்று இந்தியா -பாகிஸ்தான் என்ற மிகப்பெரிய போட்டியில் விளையாடியது இதயத்தை தொடுகிறது.
அவருடைய பேட்டிங் பற்றி அனைவருக்கும் தெரியும். அவரிடம் துருப்பச்சீட்டு இருக்கிறது. ஆனால் அறுவை சிகிச்சை முடிந்ததும் கடினமான விக்கெட் கீப்பிங்கை இவ்வளவு வேகமாக செய்வது உங்களுடைய கடின உழைப்புக்கான பரிசாகும். இது உங்களுக்கு மட்டுமல்லாமல் உலக அளவில் இருக்கும் லட்சக்கணக்கானவர்களுக்கு உத்வேகத்தை கொடுக்கக்கூடியது. இந்த வேலையை தொடருங்கள்.
என்று ரவி சாஸ்திரி கூறினார்.
- ஐ.சி.சி. தொடர்களில் ஒவ்வொரு போட்டியிலும் சிறந்து விளங்கும் இந்திய பீல்டருக்கு பி.சி.சி.ஐ. விருது வழங்கி கவுரவித்து வருகிறது.
- இந்தியாவின் சிறந்த பீல்டர் விருதை விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தட்டிச்சென்றார்.
நியூயார்க்:
20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நியூயார்க்கில் நடைபெற்ற நேற்றைய ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 119 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 6 ரன் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஜஸ்ப்ரீத் பும்ரா 3 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். பும்ராவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில் ஐ.சி.சி. தொடர்களில் ஒவ்வொரு போட்டியிலும் சிறந்து விளங்கும் இந்திய பீல்டருக்கு பி.சி.சி.ஐ. விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அதன்படி நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியாவின் சிறந்த பீல்டர் விருதை விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தட்டிச்சென்றார்.
இதையடுத்து அந்த விருதை இந்திய முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி ரிஷப் பண்டுக்கு அணிவித்தார். இது தொடர்பான வீடியோவை பி.சி.சி.ஐ தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
- ஸ்காட் லாந்து 5 புள்ளிகளுடன் ‘பி’ பிரிவில் முன்னிலையில் உள்ளது.
- ஸ்காட்லாந்து பெற்ற 2-வது வெற்றியாகும்.
ஆன்டிகுவா:
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடை பெற்று வருகிறது.
ஆன்டிகுவாவில் இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு தொடங்கிய 20-வது லீக் ஆட்டத்தில் 'பி' பிரிவில் உள்ள ஸ்காட்லாந்து-ஓமன் அணிகள் மோதின.
டாஸ் வென்ற ஓமன் கேப்டன் அக்யூப் இல்யாஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் விளையாடிய ஓமன் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 150 ரன் எடுத்தது. இதனால் ஸ்காட்லாந்துக்கு 151 ரன் இலக்காக இருந்தது.
தொடக்க வீரர் பிரதிக் அதாவாலே 40 பந்தில் 54 ரன்னும் (5 பவுண்டரி, 2 சிக்சர்), அயன்கான் 39 பந்தில் 41 ரன்னும் (4 பவுண்டரி) எடுத்தனர். ஷப்யான் ஷரீப் 2 விக்கெட்டும், மார்க் வாட், பிரட் வீல், கிறிஸ் சோலே, கிறிஸ் கிரீவ்ஸ் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றி னார்கள்.
பின்னர் ஆடிய ஸ்காட்லாந்து அணி 13.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 153 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
பிரண்டன் மெக்முல்லன் 31 பந்தில் 61 ரன்னும் (9 பவுண்டரி, 2 சிக்சர்), ஜார்ஜ் முன்சே 20 பந்தில் 41 ரன்னும் (2 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தனர். பிலால் கான், அக்யூப் இல்யாஸ், மெக்ரன் கான் ஆகியோருக்கு தலா 1 விக்கெட் கிடைத்தது.
ஸ்காட்லாந்து பெற்ற 2-வது வெற்றியாகும். அந்த அணி நமீபியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது. இங்கிலாந்துடன் மோதிய ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. ஸ்காட்லாந்து 5 புள்ளிகளுடன் 'பி' பிரிவில் முன்னிலையில் உள்ளது. அந்த அணி கடைசி லீக் போட்டியில் ஆஸ்திரேலியாவை 16-ந்தேதி எதிர்கொள்கிறது.
ஓமனுக்கு 3-வது தோல்வி ஏற்பட்டது. அந்த அணி நமீபியாவிடம் சூப்பர் ஓவரிலும், ஆஸ்திரேலியா விடம் 39 ரன்னிலும் தோற்று இருந்தது. கடைசி ஆட்டத்தில் இங்கிலாந்துடன் 14-ந்தேதி மோதுகிறது.
- டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.
- 120 ரன்களை இலக்காக துரத்திய பாகிஸ்தான் அணி கடைசி ஓவர் வரை போராடி தோல்வியை தழுவியது.
டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 119 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
இதைத் தொடர்ந்து 120 ரன்களை இலக்காக துரத்திய பாகிஸ்தான் அணி கடைசி ஓவர் வரை போராடி தோல்வியை தழுவியது. இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் அணி போட்டியில் தோற்றது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரரான ஷோயப் அக்தர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி வீடியோ ஒன்றை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் "இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றிருக்க வேண்டும். இந்தியா 11 ஓவர்கள் முடிவில் 82 ரன்களில்தான் இருந்தார்கள். 160 ரன்கள் அடிக்க நினைத்த இந்திய அணியால் அதை செய்ய இயலவில்லை. ஆனால் பாகிஸ்தானிற்கு அப்படி கிடையாது அவர்கள் எளிதில் வெற்றி பெற்றிருக்கலாம், ரிஸ்வான் இன்னும் கூடுதலாக 20 ரன்கள் எடுத்து இருந்தால் போதுமானதாக இருந்திருக்கும்."
"இந்த போட்டியில் வெற்றி எளிமையாகவே இருந்தது, கொஞ்சம் மூளையை உபயோகப்படுத்தி இருந்தால் ஜெயித்திருக்கலாம், 47 பந்துகளில் 46 ரன்கள் தேவை. ஃபகர் இன்னும் ஆட்டமிழக்காமல் இருக்கிறான் அப்படி இருந்தும் நம்மால் ஜெயிக்க முடியவில்லை. இது மிகவும் வருத்தமாக இருக்கிறது" என்று அவரது வேதனையையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தி உள்ளார்.
இந்த வீடியோவுக்கு அவர், "ஏமாற்றப்பட்டேன், காயமுற்றேன்" போன்ற வார்த்தைகளை நான் பதிவிட தயாராக வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்," என தலைப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை பலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
- ரோகித் சர்மா, விராட் கோலி சுமாரான துவக்கத்தையே கொடுத்தனர்.
- நசீம் ஷா, ஹாரிஸ் ரௌஃப் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி பேட்டிங்கை துவங்கிய இந்திய அணிக்கு துவக்க வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி சுமாரான துவக்கத்தையே கொடுத்தனர்.
இந்த ஜோடி முறையே 13 மற்றும் 4 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறியது. அடுத்து களமிறங்கிய ரிஷப் பந்த் அதிரடியாக ஆடி 31 பந்துகளில் 42 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார். இவருடன் விளையாடிய அக்சர் படேல் 20 ரன்களை சேர்த்தார்.
இவர்களை தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதன் காரணமாக இந்திய அணி 19 ஓவர்களில் 119 ரன்களை மட்டுமே சேர்த்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பாகிஸ்தான் சார்பில் நசீம் ஷா மற்றும் ஹாரிஸ் ரௌஃப் தலா 3 விக்கெட்டுகளையும், முகமது ஆமிர் 2 விக்கெட்டுகளையும், ஷாஹீன் ஷா அப்ரிடி 1 விக்கெட் வீழ்த்தினர்.
120 ரன்களை வெற்றி இலக்காக துரத்திய பாகிஸ்தான் அணிக்கு முகமது ரிஸ்வான் 31 ரன்களையும், கேப்டன் பாபர் அசாம் 13 ரன்களையும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த உஸ்மான் கான் மற்றும் ஃபகர் சமான் 13 ரன்களை சேர்த்தனர். இவர்களை தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இதன் காரணமாக பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதனால் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்தியாசார்பில் சிறப்பாக பந்துவீசிய ஜஸ்பிரீத் பும்ரா 3 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங் மற்றும் அக்சர் படேல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்