search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    இலங்கையுடன் நாளை கடைசி ஒருநாள் போட்டி: வெற்றி நெருக்கடியில் இந்தியா
    X

    இலங்கையுடன் நாளை கடைசி ஒருநாள் போட்டி: வெற்றி நெருக்கடியில் இந்தியா

    • கடைசி ஒருநாள் போட்டி கொழும்பில் நாளை நடக்கிறது.
    • இரு அணிகளும் நாளை மோதுவது 171-வது ஒருநாள் போட்டியாகும்.

    கொழும்பு:

    இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரை சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்து இருந்தது.

    இந்தியா- இலங்கை இடையேயான 3 ஒருநாள் போட்டி தொடரில் முதல் ஆட்டம் 'டை'யில் முடிந்தது. 2-வது ஆட்டத்தில் இலங்கை அணி 32 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் இந்தியா 0-1 என்ற கணக்கில் பின் தங்கியுள்ளது.

    இந்தியா-இலங்கை அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கொழும்பில் நாளை (7-ந் தேதி) நடக்கிறது.

    ரோகித்சர்மா தலைமையிலான இந்திய அணிக்கு இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி இருக்கிறது. இதில் தோற்றால் ஒருநாள் தொடரை இழந்து விடும். இதனால் வெற்றிக்காக இந்திய வீரர்கள் முழு திறமையை வெளிப்படுத்துவார்கள்.

    இந்திய அணியின் பேட்டிங்கும், பந்து வீச்சும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. அதனால் அதில் இருந்து மீள்வது அவசியமாகும்.

    அசலன்கா தலைமையிலான இலங்கை அணி இந்த ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் வெல்லும் ஆர்வத்துடன் இருக்கிறது. 20 ஓவர் தொடரை இழந்த அந்த அணி ஒருநாள் தொடரை வென்று விட வேண்டும் என்ற வேட்கையில் உள்ளது.

    இரு அணிகளும் நாளை மோதுவது 171-வது ஒருநாள் போட்டியாகும். இதுவரை நடந்த 168 ஆட்டத்தில் இந்தியா 99-ல், இலங்கை 58-ல் வெற்றி பெற்றுள்ளன. 11 போட்டி முடிவு இல்லை. 2 ஆட்டம் டை ஆனது.

    நாளைய போட்டி பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது. சோனி டென் சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    Next Story
    ×