என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
விளையாட்டு
X
2030 யூத் ஒலிம்பிக் நடத்த இந்தியா ஆர்வம்
Byமாலை மலர்9 Sep 2024 11:07 AM GMT
- இந்த தொடர் இதுவரை சிங்கப்பூர், சீனா, அர்ஜெண்டினா ஆகிய நாடுகளில் நடைபெற்றுள்ளன.
- 5ஆவது யூத் ஒலிம்பிக் தொடர் 2030 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது.
உலக அளவில் 15 வயது முதல் 17 வயது வரையிலான இளைஞர்களுக்கான விளையாட்டு நிகழ்வாக யூத் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த 2010 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த தொடர் இதுவரை சிங்கப்பூர், சீனா, அர்ஜெண்டினா ஆகிய நாடுகளில் நடைபெற்றுள்ளன.
இந்த தொடரின் 4 ஆவது எடிஷன் வருகிற 2026 ஆம் ஆண்டு செனகலில் நடைபெற உள்ளது. இந்த தொடர் அக்டோபர் 31 ஆம் தேதி துவங்கி நவம்பர் 13 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதைத் தொடர்ந்து 5ஆவது யூத் ஒலிம்பிக் தொடர் 2030 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது.
2030 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் யூத் ஒலிம்பிக் தொடரை நடத்துவதற்கு இந்தியா ஏலம் கேட்க உள்ளதாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். 2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் முன், 2030 யூத் ஒலிம்பிக் போட்டி தொடரை நடத்த இந்தியா ஏலம் கேட்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X