search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    பாரீஸ் ஒலிம்பிக்: டேபிள் டென்னிஸ் ஆண்கள் பிரிவில் இந்தியா ஏமாற்றம்
    X

    பாரீஸ் ஒலிம்பிக்: டேபிள் டென்னிஸ் ஆண்கள் பிரிவில் இந்தியா ஏமாற்றம்

    • இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி 3 சுற்றிலும் தோல்வி அடைந்தது.
    • ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    இந்தியா சார்பில் துப்பாக்கிச் சுடுதலில் தனிநபர் பிரிவில் மனு பாக்கர், ஸ்வப்னில் குசாலே ஆகியோர் வெண்கலம் வென்றனர். கலப்பு இரட்டையர் பிரிவில் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்றது.

    இந்நிலையில், டேபிள் டென்னிஸ் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய ஆண்கள் ஜோடி, சீன ஜோடியுடன் மோதியது.

    இதில் தொடக்கம் முதலே இந்திய ஜோடி தோல்வி அடைந்தது. 2-வது சுற்று மற்றும் 3-வது சுற்றிலும் இந்தியா தோற்றது.

    இதையடுத்து சீனா இந்தியாவை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது.

    ஈட்டி எறிதல் மற்றும் மல்யுத்தம் ஆகியவற்றில் இந்திய அணி அடுத்தடுத்த சுற்றுகளுக்கு முன்னேறியது.

    Next Story
    ×