search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    பாரா ஒலிம்பிக் பேட்மிண்டன்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் நிதேஷ்
    X

    பாரா ஒலிம்பிக் பேட்மிண்டன்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் நிதேஷ்

    • பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி இதுவரை 5 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
    • பேட்மிண்டனில் இந்தியாவின் நிதேஷ குமார் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    பாரீஸ்:

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.

    பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி 1 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 5 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

    இதற்கிடையே, பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் நிதேஷ் குமார் ஜப்பான் வீரரை 21-16, 21-12 என வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    Next Story
    ×