search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    neeraj chopra
    X

    ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் வென்றார் நீரஜ் சோப்ரா

    • இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
    • டோக்கியோ ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று இருந்தார்.

    ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. 206 நாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இந்த விளையாட்டு திருவிழா இறுதிகட்டத்தை எட்டியது. இதில் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.

    இதில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரத்திற்கு வீசி சாதனை படைத்ததோடு, தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். அவரை தொடர்ந்து இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, 89.45 தூரத்திற்கு வீசி 2-வது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

    இது ஒலிம்பிக்கில் இந்தியா வென்ற ஐந்தாவது பதக்கம் ஆகும். முன்னதாக இந்தியா நான்கு வெண்கல பதக்கங்களை வென்று இருந்தது. ஈட்டி எறிதலை பொருத்தவரை பாகிஸ்தான், இந்தியாவை தொடர்ந்து கிரெனெடா நாட்டைச் சேர்ந்த ஆண்டர்சன் பீட்டர்ஸ் 88.54 தூரத்திற்கு வீசி 3-வது இடத்தைப் பிடித்தார்.

    முன்னதாக நீரஜ் சோப்ரா டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் 87.58 மீட்டர் தூரம் வீசி தங்கம் வென்றிருந்தார். தற்போது அவர் தனது சாதனையை முறியடித்த நிலையிலும், தங்க பதக்கத்தை நூலிழையில் தவறவிட்டுள்ளார்.

    Next Story
    ×