search icon
என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    • பிரெஞ்சு ஓபன் டென்னிசின் நான்காவது சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.
    • இதில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா வென்றார்.

    பாரீஸ்:

    நான்கு வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டி ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இதில் இரண்டாவதாக நடைபெறும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இன்று நடைபெற்ற 4-வது சுற்று ஆட்டத்தில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, அமெரிக்க வீராங்கனை ஸ்லோனி ஸ்டீபன்சுடன் மோதினார்.

    இதில் சபலென்கா 7-6, 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    காலிறுதியில் உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினாவை சந்திக்கிறார்.

    • 4-வது சுற்று ஆட்டத்தில் செர்பியாவின் ஜோகோவிச், பெரு வீரர் ஜுவான் பாப்லோ வெரிலாசுடன் மோதினார்.
    • இதில் ஜோகோவிச் 6-3, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் பாப்லோவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

    பாரிஸ்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் திருவிழா பாரீசில் நடைபெற்று வருகிறது.

    இதில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 4-வது சுற்று ஆட்டத்தில் நட்சத்திர ஆட்டக்காரர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பெரு வீரர் ஜுவான் பாப்லோ வெரிலாசுடன் மோதினார்.

    தொடக்கம் முதல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோகோவிச் 6-3, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் பாப்லோவை வீழ்த்தி, காலிறுதிக்கு முன்னேறினார்.

    • உடல்நலக் குறைவால் கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து விலகினார் ரிபாகினா.
    • இதையடுத்து, சோரிப்ஸ் தோர்மோ நான்காவது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    பாரிஸ்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் திருவிழா பாரீஸ் நகரில் நடந்து வருகிறது.

    இதில் உலகின் 4-ம் நிலை வீராங்கனையும், விம்பிள்டன் சாம்பியனுமான கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, ஸ்பெயினின் சாரா சோரிப்ஸ் தோர்மோவுடன் மோத இருந்தார்.

    வைரஸ் காய்ச்சல், தலைவலியால் பாதிக்கப்பட்ட ரிபாகினா நேற்று முன்தினம் இரவு சரியாக தூங்கவில்லை. எனவே உடல்நலம் காரணமாக கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து ரிபாகினா விலகினார்.

    இதையடுத்து, சோரிப்ஸ் தோர்மோ நான்காவது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    • ரூத் வெற்றிக்காக இரண்டரை மணி நேரம் போராட வேண்டியிருந்தது
    • நிஷியோகா மூன்றரை மணி நேரம் போராடி வெற்றி பெற்றார்

    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸில் இன்று 3-வது சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஒரு போட்டியில் சீனாவில் ஜாங்- நார்வேயின் ரூத் பலப்பரீட்சை நடத்தினார்கள். சுமார் 2 மணி நேரம் 35 நிமிடங்கள் நடைபெற்ற இந்த போட்டியில் ரூத் 4-6, 6-4, 6-1, 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

    மற்றொரு ஆட்டத்தில் ஜப்பான் வீரர் நிஷியோகா பிரேசில் வீரர் வைல்டை எதிர்கொண்டார். இந்த ஆட்டம் 3 மணி நேரம் 38 நிமிடங்கள் நீடித்தது. இதில் நிஷியோகா 3-6, 7(10)-6(8), 2-6, 6-4, 6-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் 6-ம் நிலை வீராங்கனை ரூனே, சொரிபெஸ் டொர்மோ ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறினர்

    • அல்காரஸ் கார்பியா (ஸ்பெயின்) 3-வது சுற்று ஆட்டத்தில் கனடாவை சேர்ந்த 26-ம் நிலை வீரரான டெனிஸ் ஷபவாலோவை எதிர் கொண்டார்.
    • பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது வரிசையில் உள்ள ஷபலென்கா (ரஷியா), மெர்டன்ஸ் (பெல்ஜியம்), கவிட்டோலினா (உக்ரைன்) ஆகியோர் 3-வது சுற்றில் வெற்றி பெற்றனர்.

    பாரீஸ்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

    உலக தரவரிசையில் முதல் இடத்தில் இருப்பவரான அல்காரஸ் கார்பியா (ஸ்பெயின்) 3-வது சுற்று ஆட்டத்தில் கனடாவை சேர்ந்த 26-ம் நிலை வீரரான டெனிஸ் ஷபவாலோவை எதிர் கொண்டார்.

    இதில் அல்காரஸ் 6-1 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.அவர் 4-வது சுற்று ஆட்டத்தில் 17-வது வரிசையில் உள்ள லாரன்சோ முசட்டியை (இத்தாலி) சந்திக்கிறார்.

    5-ம் நிலையில் உள்ள சிட்சிபாஸ் (கிரீஸ்) 6-2, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் அர்ஜென்டினாவை சேர்ந்த டியாகோ ஸ்வார்ட்ஸ் மேனை வீழ்த்தினார்.

    மற்ற ஆட்டங்களில் 22 கிராண்ட்சிலாம் பட்டம் வென்றவரும், 3-வது வரிசையில் உள்ளவருமான ஜோகோவிச் (செர்பியா), செபாஸ்டியன் ஆப்னர் (ஆஸ்திரியா) ஆகியோர் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது வரிசையில் உள்ள ஷபலென்கா (ரஷியா), மெர்டன்ஸ் (பெல்ஜியம்), கவிட்டோலினா (உக்ரைன்) ஆகியோர் 3-வது சுற்றில் வெற்றி பெற்றனர்.

    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-ம் சுற்று ஆட்டம் ஒன்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ்- ஸ்லோவோக் கியாவின் அலெக்ஸ் மோல்கன் மோதினர்.
    • கனடா வீராங்கனை பியான்கா ஆண்ட்ரிஸ்ரு 6-1, 6-4 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் எம்மா நவரோவை வீழ்த்தினார்.

    பாரீஸ்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பாரீஸ் நகரில் நடந்து வருகிறது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-ம் சுற்று ஆட்டம் ஒன்றில் 22-ம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ்- ஸ்லோவோக் கியாவின் அலெக்ஸ் மோல்கன் மோதினர்.

    இதில் ஸ்வெரேவ் 6-4, 6-2, 6-1 என்ற கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். அவர் அடுத்த சுற்றில் அமெரிக்க வீரர் பிரான்சிஸ் தியாபோவுடன் மோதுகிறார்.

    அதுபோல டெய்லர் பிரிட்ஸ் (அமெரிக்கா), பிரான்சிஸ்கோ செருண்டோலோ (அர்ஜெண்டினா), மார்கோஸ் ஜிரோன் (அமெரிக்கா) நிக்கோலஸ் ஜாரி (சிலி) ஆகியோரும் 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-ம் சுற்று ஆட்டம் ஒன்றில் அமெரிக்காவின் கோகோ காப் 6-2, 6-3 என்ற நேர்செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் ஜூலியா கிராபரை வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    கனடா வீராங்கனை பியான்கா ஆண்ட்ரிஸ்ரு 6-1, 6-4 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் எம்மா நவரோவை வீழ்த்தினார். மற்றொரு ஆட்டத்தில் துனிசியா வீராங்கனை ஒன்ஸ் ஜபீர் 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் பிரான்சின் ஓசியன் டோடினை தோற்கடித்து 3-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிசின் இரண்டாவது சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.
    • இதில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா வென்றார்.

    பாரீஸ்:

    நான்கு வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டி ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இதில் இரண்டாவதாக நடைபெறும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    2வது சுற்று ஆட்டத்தில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா, செக் சக நாட்டு வீராங்கனை லிண்டா நோஸ்காவுடன் மோதினார்.

    இதில் ரிபாகினா 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் லியூவுடன் மோதினார். இதில் 6-4, 6-0 என்ற செட்

    கணக்கில் வென்று ஸ்வியாடெக் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • அனா பிளின்கோவா (ரஷியா) 4-6, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் கார்சியாவை வீழ்த்தினார்.
    • ஷபலென்கா (பெலாரஸ்), எமர்டன்ஸ் (பெல்ஜியம்) உள்ளிட்ட வீராங்கனைகள் 2-வது சுற்றில் வெற்றி பெற்றனர்.

    பாரீஸ்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் 5-வது வரிசையில் உள்ள கரோலின் கார்சியா (பிரான்ஸ்) 2-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார். அனா பிளின்கோவா (ரஷியா) 4-6, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் கார்சியாவை வீழ்த்தினார். 

    அனா பிளின்கோவா

    அனா பிளின்கோவா

    ஷபலென்கா (பெலாரஸ்), எமர்டன்ஸ் (பெல்ஜியம்) உள்ளிட்ட வீராங்கனைகள் 2-வது சுற்றில் வெற்றி பெற்றனர்.

    ஆடவர் ஒற்றையர் பிரிவில் 7-வது வரிசையில் உள்ள ஆந்த்ரே ரூப்லெவ் (ரஷியா), முதல் நிலை வீரரான அல்காரஸ் கார்பியா (ஸ்பெயின்) ஆகியோர் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிசின் இரண்டாவது சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.
    • இதில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா வென்றார்.

    பாரீஸ்:

    நான்கு வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டி ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இதில் இரண்டாவதாக நடைபெறும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    2வது சுற்று ஆட்டத்தில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, சக நாட்டு வீராங்கனை ஷிமனோவிச்சுடன் மோதினார்.

    இதில் சபலென்கா 7-5, 6-2 என்ற செட் கணக்கில் வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் 2-வது சுற்றில் செர்பிய வீரர் ஜோகோவிச் ஹங்கேரி வீரருடன் மோதினார்.
    • இதில் உலகின் நம்பர் 1 வீரரான ஜோகோவிச் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    பாரீஸ்:

    கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. களிமண் தரை போட்டியான இதில் 2-வது சுற்று ஆட்டங்கள் நடந்தன.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் உலகின் நம்பர் 1 வீரரான செர்பியாவின் ஜோகோவிச், ஹங்கேரி வீரர் மார்ட்டன் பியூசோவிக்சுடன் மோதினார்.

    முதல் செட்டை 7-6 என கைப்பற்றிய ஜோகோவிச் இரண்டாவது செட்டை 6-0 எனவும், மூன்றாவது செட்டை 6-3 என வென்று அடுத்த சுற்றையும் உறுதி செய்தார்.

    மற்றொரு ஆட்டத்தில் ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், ஜப்பான் வீரர் டாரோ டேனியலுடன் மோதினார். இதில் முதல் செட்டை அல்காரஸ் 6-1 என வென்றார். 2வது செட்டை டேனியல் 6-3 என வென்றார். இதையடுத்து அல்காரஸ் 3-வது மற்றும் 4-வது செட்டை 6-1, 6-2 என வென்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிசில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் வென்றார்.
    • உலகின் 8-ம் நிலை வீராங்கனையான கிரீஸ் நாட்டின் மரியா சக்காரி அதிர்ச்சிகரமாக தோல்வி அடைந்தார்.

    பாரீஸ்:

    நான்கு வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டி ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இதில் இரண்டாவதாக நடைபெறும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    முதல் சுற்று ஆட்டத்தில் கஜகஸ்தான் வீராங்கனை எலீனா ரிபாகினா, செக் வீராங்கனை பிரெண்டாவுடன் மோதினார். இதில் ரிபாகினா 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், ஸ்பெயின் வீராங்கனை கிறிஸ்டினாவுடன் மோதினார். இதில் ஸ்வியாடெக் 6-4, 6-0 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் ரஷிய வீரர் மெத்வதேவ் பிரேசில் வீரருடன் மோதினார்.
    • இதில் உலகின் நம்பர் 2 வீரரான மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    பாரீஸ்:

    கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. களிமண் தரை போட்டியான இதில் இன்றும் முதல் சுற்று ஆட்டங்கள் நடந்தன.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் உலகின் நம்பர் 2 வீரரான ரஷியாவின் டேனில் மெத்வதேவ், 172-ம் நிலை வீரரான பிரேசிலின் தியாகோ செபோத் வைல்டுடன் மோதினார்.

    முதல் செட்டை தியாகோ 7-6 என கைப்பற்றினார். இரண்டாவது மற்றும் மூன்றாவது செட்டை மெத்வதேவ் 7-6, 6-2 என வென்று பதிலடி கொடுத்தார்.

    இதையடுத்து சுதாரித்துக் கொண்ட தியாகோ 4 மற்றும் 5வது செட்டை 6-3, 6-4 என வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    சுமார் 4 மணி 15 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் உலகின் நம்பர் 2 வீரரான மெத்வதேவ் முதல் சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறினார்.

    ×