search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னையில் 10 ஆயிரம் பேர் நாய்கடி தாக்குதலில் பாதிப்பு
    X

    சென்னையில் 10 ஆயிரம் பேர் நாய்கடி தாக்குதலில் பாதிப்பு

    • குழந்தைகள், நடந்து செல்லும் சிறுவர்களை தெரு நாய்கள் கடித்து பெரும் ஆபத்தை ஏற்படுத்தி வருகின்றன.
    • 2 லட்சத்திற்கும் அதிகமான நாய்கள் இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    பரந்து விரிந்து வரும் சென்னை பெருநகரத்தின் பகுதிகளில் சுமார் ஒரு கோடி பேர் வசிக்கிறார்கள். 200 வார்டுகள் இருந்தாலும் புதிதாக விரிவாக்கம் அடைந்துள்ள பகுதிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வார்டுகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

    நாளுக்கு நாள் அதிகரித்து வரும். மக்கள் பெருக்கத்தின் மூலம் விரிவடைந்து வரும் சென்னை மாநகராட்சியில் தெரு நாய்கடி தொல்லை என்பது தீராத பிரச்சனையாக இருந்து வருகிறது. தெருக்களில் ஓடி விளையாடும் குழந்தைகள், நடந்து செல்லும் சிறுவர்களை தெரு நாய்கள் கடித்து பெரும் ஆபத்தை ஏற்படுத்தி வருகின்றன.

    பூங்காக்களில் வாக்கிங் செல்பவர்கள் தங்களது வளர்ப்பு நாய்களை கொண்டு செல்லும் போது அது பொது மக்கள் மீது திடீரென பாய்ந்து கடித்து விடுவதால் பூங்காக்களில் நடைபயிற்சி செல்பவர்களும் பயத்துடன் தான் செல்கிறார்கள்.

    வீட்டின் வெளியே விளையாடும் போதும், அருகில் உள்ள கடைகளுக்கு சென்று திரும்பும் போதும் குழந்தைகளை தெரு நாய்கள் விரட்டி சென்று கடிக்கின்றன. தொடர்ந்து தெரு நாய்களின் தாக்குதல் எல்லை மீறி போகிறது. தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் குறைந்தபாடில்லை.

    கடந்த 6 மாதங்களில 10 ஆயிரம் நாய்கடி வழக்குகள் பதிவாகி இருப்பதாக தகவல் தெரிய வந்துள்ளது. பொது மக்களிடம் இருந்து புகார்கள் குறைந்தாலும் சமீப காலமாக நாய் தொல்லைகள் அதிகரித்து வருகின்றன. நாய்களின் இனப்பெருக்கததை கட்டுப்படுத்த கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. எல்லா மண்டலங்களிலும் வாகனங்களில் ஊழியர்கள் தினமும் சென்று நாய்களை பிடிக்கின்றனர். ஆனாலும் தெரு நாய்களின் ஆக்ரோஷம் குறையவில்லை. சென்னையில் நாய்கடி சம்பவம் அதிகரித்து வருவதால் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து பெற்றோர்கள் கவலை அடைந்துள்ளனர்.


    தெரு நாய் தாக்குதலின் ஒவ்வொரு சம்பவத்திற்கு பிறகும் அந்த பகுதியில் உள்ள குழந்தைகள் அருகில் உள்ள பூங்காக்கள் மற்றும் தெருக்களில் விளையாட அனுமதிப்பது இல்லை.

    சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை நாய்கடி வழக்குகள் பதிவாகிறது. ஆனாலும் புகார் அளிக்கப்பட்ட சம்பவங்கள் மிக குறைவு. வடசென்னை பகுதியில் நாய்கடி சம்பவம் அதிகளவில் நடந்தாலும் பதிவு செய்யப்படாத வழக்குகள் பல உள்ளன.

    நாய் பிடிக்கும் வாகனங்களை பார்த்தது இல்லை. கடந்த சில ஆண்டுகளாக தெருநாய்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது. ஆனால் தடுப்பூசி இயக்கமோ, கிருமி நீக்கம் செய்வதற்கான முயற்சியோ இல்லை என தண்டையார்பேட்டை பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

    வட சென்னையில் தெரு நாய்கள் காது வெட்டும் மற்றும் தோல் அலர்ஜியுடன் சுற்றித்திரிவதை காண முடிகிறது. இது மற்ற தெரு நாய்களுக்கு பரவக்கூடும். இது ரேபிஸ் நோய் பாதிப்பை உண்டாக்கும் என்று சமூக ஆர்வலர் ஒருவர் கூறினார்.

    இதுகுறித்து மாநகராட்சி கால்நடை அதிகாரி கமால் உசேன் கூறியதாவது:-

    கடந்த 3 ஆண்டுகளில் ஒவ்வொரு அண்டும் சுமார் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் நாய்கடி வழக்குகள் பதிவாகியுள்ளன. நாய் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிகைகள் எடுக்கப்பட்டுள்ளன.

    2018-ம் ஆண்டில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் படி 58 ஆயிரம் தெரு நாய்கள் இருப்ப தெரிய வந்தது. இப்போது 2 லட்சத்திற்கும் அதிகமான நாய்கள் இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×