search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    விளாத்திகுளம் அருகே கடலில் மூழ்கி 2 பெண்கள் உயிரிழப்பு
    X

    விளாத்திகுளம் அருகே கடலில் மூழ்கி 2 பெண்கள் உயிரிழப்பு

    • நேற்று பவுர்ணமி என்பதால் இன்றும் கடல் அலையின் சீற்றம் அதிகமாக இருந்துள்ளது.
    • அனிதா, சுவேதா, முருகலட்சுமி, ஆகிய 3 பெண்களும் காப்பாற்றப்பட்டனர்.

    விளாத்திகுளம்:

    மதுரை ஜி.ஆர். நகரை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் பவுர்ணமியை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் அருகே உள்ள பெரியசாமிபுரத்தில் குலதெய்வம் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக வந்தனர்.

    குலதெய்வத்தை தரிசனம் செய்து விட்டு இன்று காலை 6 மணி அளவில் பெரியசாமிபுரம் கடற்கரைக்கு குளிப்ப தற்காக 20 பேர் சென்றுள்ளனர். இதில் பெரும்பாலும் பெண்களாக இருந்தனர்.

    நேற்று பவுர்ணமி என்பதால் இன்றும் கடல் அலையின் சீற்றம் அதிகமாக இருந்துள்ளது. அந்த நேரத்தில் 20 பேரும் குளிப்பதற்காக சென்றுள்ளனர்.

    அதிகமான காற்றுடன் கடல் சீற்றம் அதிகமாக இருந்த நிலையில் கடலில் குளித்த மதுரை ஜி.ஆர். நகரை சேர்ந்த இலக்கியா (வயது 21), கன்னியம்மாள் (50), முருக லட்சுமி (38), ஸ்வேதா (22), அனிதா (29) ஆகிய 5 பெண்களும் கடல் அலையில் சிக்கி உள்ளே இழுத்துச் செல்லப்பட்டனர்.

    அப்போது அவர்களுடன் குளித்துக் கொண்டிருந்தவர்கள் அவர்களை காப்பாற்ற முயன்றனர். இதில் இலக்கியா, கன்னியம்மாள் ஆகிய இருவரும் அலையில் சிக்கி மூச்சுத்திணறி உயிரிழந்தனர். அனிதா, சுவேதா, முருகலட்சுமி, ஆகிய 3 பெண்களும் காப்பாற்றப்பட்டனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேம்பார் போலீசார் அவர்களுக்கு வேம்பார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி செய்து மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .

    பவுர்ணமியை முன்னிட்டு குலதெய்வம் வழிபாடு செய்வதற்காக வந்த பெண்கள் குளிக்கும்போது கடல் சீற்றத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இது தொடர்பாக வேம்பார் கடலோர காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×