என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு (Tamil Nadu)
செஸ் ஒலிம்பியாட்போட்டி நடைபெறும் அரங்கத்தில் வீரர்களை பரிசோதிக்க 20 டிஜிட்டல் ஸ்கேனர்கள்
- மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28-ந்தேதி தொடங்குகிறது.
- வெடிகுண்டு பரிசோதனை போலீஸ் குழுவினர் அமைத்து வருகிறார்கள்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் 'செஸ் ஒலிம்பியாட்' போட்டி வருகிற 28-ந்தேதி தொடங்குகிறது. இதையொட்டி தற்போது வெளி நாட்டு செஸ் வீரர்கள் சென்னை வரத்துவங்கி விட்டனர்.
இவர்கள் இ.சி.ஆர், ஓ.எம்.ஆர் பகுதிகளில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஓட்டல்களில் ஓய்வெடுத்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இன்று போலந்து, கஜகஸ்தான், உகாண்டா, கேமன்தீவு, கோஸ்டாரிகா, புல்கர்யா, சர்பியா, எஸ்டோனியா, ஐஸ்லாந்து, கோமோரோஸ் தீவு, உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு வீரர்கள் சென்னை வந்துள்ளனர்.
வருகிற 28-ந்தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் தொடக்க விழாவில் வீரர்கள் அனைவரும் கலந்து கொள்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் பூஞ்சேரி 'போர் பாய்ண்ட்ஸ்' அரங்கத்தில் அமைக்கப் பட்டுள்ள இரண்டு விளையாட்டு அரங்கத்திற்கும் வீரர்களை அழைத்து வரும் பஸ் வசதி, செல்லும் இடத்தை காட்டும் கருவி, குளிர் அளவு, முதலுதவி பெட்டி, ஆங்கிலம் பேசத்தெரிந்த டிரைவர்கள் நியமனம், அதன் வேகம், பாதுகாப்பு, நிறுத்தும் இடம், இறங்கும் இடம் உள்ளிட்ட பகுதிகளை போக்குவரத்து உயர் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர்.
மேலும் விளையாட்டு போட்டி நடைபெறும் இடத்துக்கு வரும் வீரர்களை தொடாமல் பரிசோதனைகளை மேற்கொள்ள 20 டிஜிட்டல் ஸ்கேனர்கள் அங்கு அமைக்கப்பட்டு உள்ளன. இதனை வெடிகுண்டு பரிசோதனை போலீஸ் குழுவினர் அமைத்து வருகிறார்கள்.
மேலும் வெளிநாட்டு வீரர்களை அழைத்து வரும் பஸ்சை அரங்கத்தின் பரிசோதனை நுழைவு வாயிலில் நிறுத்தி சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டது.
செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் இடம் முழுவதும் தற்போது போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்