என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
மோட்டார் சைக்கிள் விபத்தில் மூளைச்சாவு அடைந்த 3-ம் வகுப்பு மாணவனின் உடல் உறுப்புகள் தானம்
Byமாலை மலர்25 Jan 2017 5:06 PM IST (Updated: 25 Jan 2017 5:06 PM IST)
மயிலத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் மூளைச்சாவு அடைந்த 3-ம் வகுப்பு மாணவனின் உடல் உறுப்புகளான இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் ஆகியவை தானமாக வழங்கப்பட்டது.
மயிலம்:
விழுப்புரம் மாவட்டம் மயிலம் புதுக்காலனியை சேர்ந்தவர் பாலு. இவரது மகன் ஆகாஷ்(வயது 8). மயிலத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான்.
கடந்த 18-ந்தேதி காலை ஆகாஷ் வீட்டிலிருந்து பள்ளிக்கு நடந்து சென்றான். பள்ளி அருகே ரோட்டை கடந்தபோது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் அவன் மீது மோதியது. இதில் ஆகாஷ் படுகாயம் அடைந்தான்.
உடனடியாக அவனை புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ஆகாசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு ஆகாசுக்கு மூளைச்சாவு ஏற்பட்டது.
இதையடுத்து ஆகாசின் தாயாரிடம் நீங்கள் விரும்பினால் உங்கள் மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்யலாம் என்று டாக்டர்கள் கூறினர். அதற்கு ஆகாசின் தாயார் சம்மதம் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து ஆகாசின் இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் ஆகியவை தானமாக பெறப்பட்டது.
ஆகாசின் தந்தை பாலு கடந்த 45 நாட்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தார். தற்போது ஆகாசும் விபத்தில் சிக்கி மூளைசாவு அடைந்ததால் உறவினர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் மயிலம் புதுக்காலனியை சேர்ந்தவர் பாலு. இவரது மகன் ஆகாஷ்(வயது 8). மயிலத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான்.
கடந்த 18-ந்தேதி காலை ஆகாஷ் வீட்டிலிருந்து பள்ளிக்கு நடந்து சென்றான். பள்ளி அருகே ரோட்டை கடந்தபோது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் அவன் மீது மோதியது. இதில் ஆகாஷ் படுகாயம் அடைந்தான்.
உடனடியாக அவனை புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ஆகாசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு ஆகாசுக்கு மூளைச்சாவு ஏற்பட்டது.
இதையடுத்து ஆகாசின் தாயாரிடம் நீங்கள் விரும்பினால் உங்கள் மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்யலாம் என்று டாக்டர்கள் கூறினர். அதற்கு ஆகாசின் தாயார் சம்மதம் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து ஆகாசின் இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் ஆகியவை தானமாக பெறப்பட்டது.
ஆகாசின் தந்தை பாலு கடந்த 45 நாட்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தார். தற்போது ஆகாசும் விபத்தில் சிக்கி மூளைசாவு அடைந்ததால் உறவினர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X