என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
திருப்பூர் அருகே டேங்கர் லாரி- கார் மோதல்: 2 பேர் பலி
Byமாலை மலர்1 Feb 2017 9:48 AM IST (Updated: 1 Feb 2017 9:48 AM IST)
திருப்பூர் அருகே இன்று அதிகாலை டேங்கர் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் 2 பேர் உடல் நசுங்கி பலியாயினர்.
திருப்பூர்:
கோவை பீளமேடு பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 40).
இவரது உறவினர் வீட்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று மாலை கரூரில் நடந்தது. இதற்காக சண்முகம் நேற்று தனது காரில் கரூரூக்கு சென்றார். காரை டிரைவர் ஆனந்த் (40) என்பவர் ஓட்டினார்.
பின்னர் நள்ளிரவில் காரில் கோவைக்கு இருவரும் திரும்பி கொண்டிருந்தனர்.
இன்று அதிகாலை 5 மணியளவில் கார், திருப்பூரை அடுத்த அவினாசி பாளையம் பெட்ரோல் பங்க் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது பெட்ரோல் பங்க்கில் இருந்து ஒரு டேங்கர் லாரி ரோட்டுக்கு வந்து கொண்டிருந்தது.
இதில் திடீரென டேங்கர் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதி கொண்டன. இதில் காரின் இடிபாடுகளுக்கிடையே சிக்கி சண்முகம், ஆனந்த் ஆகியோர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் அவினாசிபாளையம் போலீசார் விரைந்து வந்து பலியான 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
கோவை பீளமேடு பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 40).
இவரது உறவினர் வீட்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று மாலை கரூரில் நடந்தது. இதற்காக சண்முகம் நேற்று தனது காரில் கரூரூக்கு சென்றார். காரை டிரைவர் ஆனந்த் (40) என்பவர் ஓட்டினார்.
பின்னர் நள்ளிரவில் காரில் கோவைக்கு இருவரும் திரும்பி கொண்டிருந்தனர்.
இன்று அதிகாலை 5 மணியளவில் கார், திருப்பூரை அடுத்த அவினாசி பாளையம் பெட்ரோல் பங்க் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது பெட்ரோல் பங்க்கில் இருந்து ஒரு டேங்கர் லாரி ரோட்டுக்கு வந்து கொண்டிருந்தது.
இதில் திடீரென டேங்கர் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதி கொண்டன. இதில் காரின் இடிபாடுகளுக்கிடையே சிக்கி சண்முகம், ஆனந்த் ஆகியோர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் அவினாசிபாளையம் போலீசார் விரைந்து வந்து பலியான 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X