search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    மத்திய அரசை கண்டித்து காஞ்சீபுரத்தில் இன்று காங்கிரஸ் பொதுக்கூட்டம்: திருநாவுக்கரசர் பங்கேற்பு
    X

    மத்திய அரசை கண்டித்து காஞ்சீபுரத்தில் இன்று காங்கிரஸ் பொதுக்கூட்டம்: திருநாவுக்கரசர் பங்கேற்பு

    காஞ்சீபுரம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் சார்பில் மோடி அரசின் பண மதிப்பின் நீக்கத்தை கண்டித்து கண்டன பொதுக் கூட்டம் காஞ்சீபுரம், காந்தி வீதி, பெரியார் தூண் அருகில் இன்று மாலை 4 மணிக்கு நடக்கிறது.

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், பண மதிப்பு நீக்க எதிர்ப்பு குழுவின் தலைவருமான பெ.விஸ்வநாதன் தலைமை தாங்குகிறார். மாவட்ட தலைவர் ஆர்.சுந்தரமூர்த்தி பி.வி.குப்பன், ஜி.வி.மதியழகன், ஏ.வி.நாகராஜ், எஸ்.எல்.என்.எஸ்.விஜய குமார் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசர் சிறப்புரை ஆற்றுகிறார். அகில இந்திய செய்தி தொடர்பாளர் குஷ்பு சுந்தர், ஊடகத்துறை தலைவர் ஏ.கோபண்ணா, மண்டல ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் அய்யா, மாநில பொதுச்செயலாளர் எல்.சிரஞ்சீவி மற்றும் காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    Next Story
    ×