search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்டெர்லைட் ஆலையை உடனே மூட வேண்டும்- பிரேமலதா
    X

    ஸ்டெர்லைட் ஆலையை உடனே மூட வேண்டும்- பிரேமலதா

    ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும் என்று தூத்துக்குடியில் தே.மு.தி.க. மாநில மகளிரணி தலைவி பிரேமலதா கூறினார். #SterliteProtest
    தூத்துக்குடி:

    தே.மு.தி.க. மாநில மகளிரணி தலைவி பிரேமலதா இன்று தூத்துக்குடி வந்தார். தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்ற அவர் அங்கு துப்பாக்கி சூட்டினால் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும் என நாங்கள் கோரிக்கை விடுத்துவருகிறோம். தற்போது அறவழியில் போராடிய பொதுமக்கள் மீது போலீசார் காட்டு மிராண்டிதனமாக துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது அவருடன் மாவட்ட செயலாளர் ஆறுமுகநயினார், ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் உடன் இருந்தனர். #SterliteProtest
    Next Story
    ×