search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சசிதரன்
    X
    சசிதரன்

    மனைவி கொடுமையால் தற்கொலை செய்கிறோம்- பெண் அதிகாரியின் மகன் வாட்ஸ் அப்பில் உருக்கமான பேச்சு

    மனைவி கொடுமையால் தற்கொலை செய்யப்போகிறோம் என்று குடும்பத்துடன் மாயமான மாநகராட்சி பெண் அதிகாரியின் மகன் வாட்ஸ்அப்பில் உருக்கமாக பேசியுள்ளார்.
    சேலம்:

    சேலத்தில் குடும்பத்துடன் மாயமான மாநகராட்சி பெண் அதிகாரி ரங்கநாயகியின் மகன் சசிதரன் வாட்ஸ் அப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், அவர் உருக்கமாக பேசியதாவது:-

    இன்னொரு வி‌ஷயம் நான் சொல்ல விரும்புகிறேன். எங்களை இப்படி இந்த நிலைமைக்கு கொண்டு வந்து ஆளாக்கின என்னுடைய மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் காவல்துறை ஆணையாளருக்கு கேட்டுக்கொள்கிறேன்.

    என் நண்பர்கள், உறவினர்கள், என்னடா இப்படி பண்ணி விட்டாயே என நினைக்கிறவங்களுக்கு வேறு வழியில்ல. அதனால் தான் நான் இப்படி பண்ணினேன். எங்க 3 பேராலையும் வழக்குப் போட்டு கொண்டு இருக்கவும் முடியாது. அதனால் தான் நாங்க இந்த முடிவு எடுத்தோம். எல்லொருமே எங்களை மன்னிச்சுடுங்க..

    நான் ஓசூரில் தங்கியிருக்கும் வாடகை வீட்டின் உரிமையாளர், பக்கத்தில இருக்கிறவங்க எல்லோருக்குமே நாங்க ரொம்ப சிரமம் கொடுத்துட்டோம். வீட்டின் முன்பு வந்து மனைவி குடும்பத்தினர் கத்துனதுல எல்லோருடைய மானம், மரியாதை போச்சு. அவர்களுடைய குடும்பத்துக்குள்ளேயே நிறைய பிரச்சனை வந்திருச்சு. இனிமேல இந்த மாதிரி நடக்காது எங்களால... இதனால் தான் நாங்கள் இந்த முடிவுக்கு வந்தோம்.

    ஒசூரில் எங்க வீட்டின் உரிமையாளருக்கும் கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கும். ஆகவே அவர்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கிறேன். முடிந்த அளவுக்கு கொஞ்சம் எல்லாம் நர்மல் ஆவதற்கு நண்பர்கள், உறவினர்களுக்கு உதவி பண்ணுங்க. நான் போனதற்கு அப்புறம்.

    மற்றபடி வேறு ஒன்னும் மில்ல. ஐ மிஸ் யூ லார்டு. எவ்வளவு சந்தோசமாக இருக்கனும் ஆசைப்பட்டமோ எல்லாமோ முடிஞ்சு. அந்த ஒரு பெண்ணுனால. அந்த ஒரு குடும்பத்தினால. எங்க குடும்பம் முடிஞ்சு.

    இவ்வளவு அசிங்க, அசிங்கமா அவர்கள் பேசி அதுக்க அப்புறம் வந்து உயிர் வாழ்வதை விட போயிடலாம். அதனால் தான் இந்த முடிவை எடுத்தோம். எல்லோரும் எங்களை மன்னிச்சுடுங்க...

    இவ்வாறு அவர் உருக்கமாக பேசினார்.

    அவர் பேசும்போது, கண்களில் இருந்து கண்ணீர் வந்தது. இதனால் வாட்ஸ்-அப்பில் பேசியபடி பெண் அதிகாரி குடும்பத்தினர் ஏதும் தவறான முடிவு எடுத்தார்களா? அல்லது எங்கிருக்கிறார்கள் என்பது மர்மமாக உள்ளது.

    இச்சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews
    Next Story
    ×