search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    பாரதீய ஜனதாவை வீழ்த்த காங்கிரஸ் கட்சியால் மட்டுமே முடியும்: திருநாவுக்கரசர் பேச்சு
    X

    பாரதீய ஜனதாவை வீழ்த்த காங்கிரஸ் கட்சியால் மட்டுமே முடியும்: திருநாவுக்கரசர் பேச்சு

    பா. ஜனதாவை விழ்த்த காங்கிரஸ் கட்சியால் மட்டுமே முடியும், வருங்காலத்தில் ராகுல்காந்தி தான் பிரதமர் என்று திருநாவுக்கரசர் பேசினார்.
    பள்ளிபானையம்:

    நாமக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் பள்ளிபாளையத்தில் மாவட்ட தலைவர் பி.டி. தனகோபால் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழகத்தில் கடந்த 52 ஆண்டுகள் ஆட்சியில்  இல்லா விட்டாலும் காங்கிரஸ் கட்சி உயிர்ரோட்டமாக உள்ளது. தமிழகத்தில் பதிவு பெற்ற கட்சிகளாக 65 உள்ளது. இதில் 2-வது பெரிய கட்சி காங்கிரஸ் தான், மூன்றாவது அணி, நான்காவது அணிக்கு வாய்ப்பு இல்லை.

    பாரதீய ஜனதாவை விழ்த்த காங்கிரஸ் கட்சியால் மட்டுமே முடியும், இந்தியாவில் மாற்றத்தை காங்கிரஸ் கட்சியால் மட்டுமே தரமுடியும். வருங்காலத்தில் ராகுல்காந்தி தான் பிரதமர். 

    இவ்வாறு திருநாவுக்கரசர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் பொன்னுசாமி, மாவட்ட இளைஞர்அணி தலைவர் சதிஷ்குமார், பள்ளிபாளையம் நகர தலைவர் வசந்தா பழனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில்  வட்டார தலைவர் ஜலில் நன்றி கூறினார்.
    Next Story
    ×