என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து ‘வாட்ஸ்அப்பில்’ அவதூறு தகவல் பரப்பிய வாலிபர் கைது
Byமாலை மலர்2 Jun 2018 7:38 AM GMT (Updated: 2 Jun 2018 7:38 AM GMT)
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து ‘வாட்ஸ்அப்பில்‘ அவதூறு தகவல் பரப்பிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். #EdappadiPalanisamy
தம்மம்பட்டி:
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து ‘வாட்ஸ்அப்பில்‘ அவதூறு தகவல் பரப்பிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
சேலம் மாவட்டம் தம்மம்பட்டி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து ‘வாட்ஸ்அப்பில்‘ அவதூறு தகவல் பரவியது. அவர் குறித்து டி.வி.யில் முக்கிய செய்தி வெளியிடுவது போன்று, கிராபிக்ஸ் செய்து தகவலை பரப்பி விட்டு இருந்தனர்.
இதைப்பார்த்த அந்த பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சேலம் மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைத்தலைவர் குமரன் தம்மம்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும் ஆத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) சூர்யமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்றது. இதில் முதலமைச்சர் குறித்து அவதூறு தகவல் பரப்பியவர் தம்மம்பட்டியை சேர்ந்த நடேசன் மகன் விஜயகுமார் (வயது 28) என்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து நேற்று இரவு போலீசார் விஜயகுமாரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து வாட்ஸ்அப்பில் அவதூறு தகவல் பரப்பியதை ஒப்புக்கொண்டார். தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். #EdappadiPalanisamy
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து ‘வாட்ஸ்அப்பில்‘ அவதூறு தகவல் பரப்பிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
சேலம் மாவட்டம் தம்மம்பட்டி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து ‘வாட்ஸ்அப்பில்‘ அவதூறு தகவல் பரவியது. அவர் குறித்து டி.வி.யில் முக்கிய செய்தி வெளியிடுவது போன்று, கிராபிக்ஸ் செய்து தகவலை பரப்பி விட்டு இருந்தனர்.
இதைப்பார்த்த அந்த பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சேலம் மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைத்தலைவர் குமரன் தம்மம்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும் ஆத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) சூர்யமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்றது. இதில் முதலமைச்சர் குறித்து அவதூறு தகவல் பரப்பியவர் தம்மம்பட்டியை சேர்ந்த நடேசன் மகன் விஜயகுமார் (வயது 28) என்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து நேற்று இரவு போலீசார் விஜயகுமாரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து வாட்ஸ்அப்பில் அவதூறு தகவல் பரப்பியதை ஒப்புக்கொண்டார். தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். #EdappadiPalanisamy
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X