search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் பில் கலெக்டர் கைது
    X

    ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் பில் கலெக்டர் கைது

    கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் பில் கலெக்டரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

    கோவை:

    கோவை மாநகராட்சியில் 5 மண்டலங்கள் உள்ளது. இதில் வடக்கு மண்டல அலுவலகம் பால சுந்தரம் ரோட்டில் செயல்பட்டு வருகிறது.

    இங்கு பில் கலெக்டராக மாலா என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் மாநகராட்சியில் வேலை முடித்து கொடுக்க ஒருவரிடம் ரூ. 50 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்த நபர் இது குறித்து கோவை லஞ்ச ஒழிப்பில் போலீசில் புகார் செய்தார்.

    அந்த நபரிடம் இன்று மதியம் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயன பவுடர் தடவிய பணத்தை கொடுத்து அனுப்பினர். அதனை அவர் பில் கலெக்டர் மாலாவிடம் கொடுத்த போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கனக சபாபதி, ஆறுமுகம் மற்றும் போலீசார் மாலாவை கையும், களவுமாக கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை தொடர்ந்து அலுவலகத்துக்குள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அதேபோல் அலுவலகத்தை விட்டு செல்ல யாரையும் அனுமதிக்கவில்லை.

    லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அதிரடி சோதனையால் மாநகராட்சி வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×