search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பட்ஜெட்டிற்கு அனுமதி பெற நாராயணசாமி டெல்லி பயணம்
    X

    பட்ஜெட்டிற்கு அனுமதி பெற நாராயணசாமி டெல்லி பயணம்

    பட்ஜெட்டிற்கு அனுமதி பெற நாராயணசாமி இன்று காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லிக்கு சென்றார்.
    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் ஆண்டுதோறும் மார்ச்சில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

    கடந்த சில ஆண்டாக பட்ஜெட் மார்ச் மாதம் தாக்கல் செய்யப்படாமல் அரசின் 4 மாத செலவினங்களுக்கு மட்டும் முன் அனுமதி பெறப்படுகிறது. பின்னர் ஜூன், ஜூலை மாதத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

    அதன்படி இந்த ஆண்டும் மார்ச் 26-ந்தேதி 4 மாத செலவினங்களுக்கு அனுமதி பெறப்பட்டது. இதைத்தொடர்ந்து கவர்னர் தலைமையில் மாநில திட்டக்குழு கூடியது. இந்த கூட்டத்தில் ரூ.7 ஆயிரத்து 530 கோடி பட்ஜெட் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது. பட்ஜெட்டிற்கு அனுமதி பெற மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கோப்பு அனுப்பப்பட்டது. ஆனால் இதுவரை அனுமதி கிடைக்கவில்லை.

    இந்த அனுமதி கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் கடந்த திங்கள்கிழமை சட்டசபை கூடியது. 2 நாட்களாக கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது உறுப்பினர்கள் விவாதம் நடத்தினர். ஆனால் பட்ஜெட்டிற்கு மத்திய அரசிடம் இருந்து ஒப்புதல் கிடைக்கவில்லை. இதனால் வேறு வழியின்றி சட்டசபை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

    தற்போது பட்ஜெட்டிற்கு அனுமதி பெற நாராயணசாமி டெல்லி சென்றுள்ளார். இன்று காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லிக்கு சென்றார். அங்கு மத்திய உள்துறை மந்திரி, நிதி மந்திரியை சந்திக்கிறார். உரிய விளக்கம் அளித்து பட்ஜெட்டிற்கான ஒப்புதல் பெற்றுவருவார் என தெரிகிறது. இதன்பிறகே மீண்டும் சட்டமன்றம் கூடும்.

    Next Story
    ×