search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    121 பெண்கள் பங்கேற்கும் 36 மணி நேர யோகா கின்னஸ் சாதனை நிகழ்ச்சி - நாராயணசாமி தொடங்கி வைத்தார்
    X

    121 பெண்கள் பங்கேற்கும் 36 மணி நேர யோகா கின்னஸ் சாதனை நிகழ்ச்சி - நாராயணசாமி தொடங்கி வைத்தார்

    புதுவை இந்திராகாந்தி உள் விளையாட்டரங்கில் 121 பெண்கள் பங்கேற்கும் 36 மணி நேர தொடர் யோகா நிகழ்ச்சியை முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார். #yoga #yogaday
    புதுச்சேரி:

    காஞ்சிபுரத்தை தலைமை அலுவலகமாக கொண்டு இயங்கும் மஹாயோகம் அமைப்பின் சார்பில் சர்வதேச யோகா தினத்தையொட்டி கின்னஸ் சாதனை நிகழ்ச்சி புதுவையில் நடந்து வருகிறது.

    புதுவை இந்திராகாந்தி உள் விளையாட்டரங்கில் 121 பெண்கள் பங்கேற்கும் 36 மணி நேர தொடர் யோகா கின்னஸ் சாதனை நிகழ்ச்சியின் தொடக்க விழா இன்று காலை நடந்தது.



    விழாவுக்கு மகாமகரிஷி அறக்கட்டளை விஜயானந்தன் தலைமை வகித்தார். ரமேஷ்ரிஷி வரவேற்றார். முதல்-அமைச்சர் நாராயணசாமி யோகா நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அமைச்சர்கள் மல்லாடிகிருஷ்ணாராவ், கமலகண்ணன், அன்பழகன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. வைத்தியநாதன், சுவிஸ் நாட்டு கம்பன் கழக தலைவர் சரவணபவ ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    யோகாவில் 18 வயது முதல் 72 வயதுவரை உடைய பெண்கள் பங்கேற்று உணவு, உறக்கமின்றி யோகா செய்கின்றனர். இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய யோகா சாதனை நிகழ்ச்சி நாளை இரவு 7 மணி வரை தொடர்ந்து நடக்கிறது. நிறைவு விழாவில் கவர்னர் கிரண்பேடி பங்கேற்கிறார். #yoga #yogaday

    Next Story
    ×