என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பொது இடங்களில் குப்பைகளை கொட்டினால் ரூ.25 ஆயிரம் வரை அபராதம்
Byமாலை மலர்23 Jun 2018 3:30 AM GMT (Updated: 23 Jun 2018 3:30 AM GMT)
நகரின் பொது இடங்களில் குப்பைகளை கொட்டினால் ரூ.25 ஆயிரம் வரை அபராத தொகை விதிக்கப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை:
உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கடந்த ஆண்டு சட்டசபையில் பேசும்போது, சுத்தத்தை பேணி பாதுகாக்கும் வகையில் பொது இடத்தில் குப்பைகள் மற்றும் கழிவுநீர் கொட்டி அசுத்தப்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
இதையடுத்து பொது சுகாதார சட்டத்தின் கீழ், பொது இடங்களில் குப்பை மற்றும் கழிவுகளை வீசுபவர்களுக்கு விதிக்கப்பட்டு வந்த அபராத தொகை உயர்த்தப்பட்டது.
இதற்கான கொள்கை குறிப்புகளும் உருவாக்கப்பட்டன. இந்த நிலையில் பொது இடங்களில் குப்பைகள் மற்றும் கழிவுகளை வீசுபவர்களுக்கு கண்டிப்புடன் அபராதம் விதிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதன்படி, தெருக்களில் குடியிருப்புவாசிகள், வியாபாரிகள் குப்பை கொட்டினால் ரூ.1,000, வணிக வளாக உரிமையாளர் குப்பை வீசினால் ரூ.2 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட உள்ளது.
இதேபோல பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள் குப்பைகளை வீசினால் ரூ.25 ஆயிரம், சாலையோர வியாபாரிகள் குப்பை போட்டால் ரூ.100, சாலையோரங்களில் சிறுநீர் கழித்தால் ரூ.100 என அபராத தொகை விதிக்கப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
நகரின் தூய்மையை கருத்தில் கொண்டு இதனை தீவிரமாக செயல்படுத்த முடிவு செய்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். #tamilnews
உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கடந்த ஆண்டு சட்டசபையில் பேசும்போது, சுத்தத்தை பேணி பாதுகாக்கும் வகையில் பொது இடத்தில் குப்பைகள் மற்றும் கழிவுநீர் கொட்டி அசுத்தப்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
இதையடுத்து பொது சுகாதார சட்டத்தின் கீழ், பொது இடங்களில் குப்பை மற்றும் கழிவுகளை வீசுபவர்களுக்கு விதிக்கப்பட்டு வந்த அபராத தொகை உயர்த்தப்பட்டது.
இதற்கான கொள்கை குறிப்புகளும் உருவாக்கப்பட்டன. இந்த நிலையில் பொது இடங்களில் குப்பைகள் மற்றும் கழிவுகளை வீசுபவர்களுக்கு கண்டிப்புடன் அபராதம் விதிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதன்படி, தெருக்களில் குடியிருப்புவாசிகள், வியாபாரிகள் குப்பை கொட்டினால் ரூ.1,000, வணிக வளாக உரிமையாளர் குப்பை வீசினால் ரூ.2 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட உள்ளது.
இதேபோல பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள் குப்பைகளை வீசினால் ரூ.25 ஆயிரம், சாலையோர வியாபாரிகள் குப்பை போட்டால் ரூ.100, சாலையோரங்களில் சிறுநீர் கழித்தால் ரூ.100 என அபராத தொகை விதிக்கப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
நகரின் தூய்மையை கருத்தில் கொண்டு இதனை தீவிரமாக செயல்படுத்த முடிவு செய்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X