search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமேசுவரத்தில் கண்டெடுக்கப்பட்ட வெடிபொருட்கள் சிவகங்கை குடோனுக்கு மாற்றம்
    X

    ராமேசுவரத்தில் கண்டெடுக்கப்பட்ட வெடிபொருட்கள் சிவகங்கை குடோனுக்கு மாற்றம்

    ராமேசுவரத்தில் கண்டெடுக்கப்பட்ட வெடி பொருட்கள் சிவகங்கையில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான ஆயுதகிடங்கில் மாற்றம் செய்யப்படும். #Rameswarambullets

    ராமேசுவரம்:

    ராமேசுவரம் அருகே உள்ள தங்கச்சிமடம் அந்தோணியார்புரத்தில் எடிசன் என்பவரது வீட்டின் பின்புறத்தில் தோண்டிய போது ஆயுதக்குவியல் கண்டெடுக்கப்பட்டது. இதில் சக்திவாய்ந்த வெடி குண்டுகள், கண்ணி வெடி, தோட்டாக்கள் ஆகியவை இருந்தன.

    இதனை திருவாடானை மாஜிஸ்திரேட் பாலமுருகன் ஆய்வு செய்தார். அப்போது வெடிபொருட்களின் தன்மை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு சென்னை வெடி மருந்து கட்டுப்பாட்டு துறைக்கு உத்தரவிட்டார்.

    இதையடுத்து வெடி மருந்து நிபுணர்கள் கடந்த வாரம் ராமேசுவரத்திற்கு வந்தனர். அவர்கள் 2 முறை வெடிபொருட்களை ஆய்வு செய்தனர். அப்போது ஆய்வுக்காக மாதிரிகளை சென்னைக்கு கொண்டு சென்றனர்.

    கண்டெடுக்கப்பட்ட வெடிமருந்துகள் அதே இடத்தில் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் உள்ள வெடிமருந்துகளை உடனே அப்புறப்படுத்த வேண்டும் என தொடர்ந்து அந்த பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் வெடி மருந்துகளை ஆய்வு செய்த சென்னை வெடிபொருட்கள் நிபுணர்கள் திருவாடானை கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தனர்.

    அதில், தங்கச்சிமடத்தில் கண்டெடுக்கப்பட்ட வெடி மருந்துகளின் மாதிரி தடயவியல் சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அந்த அறிக்கை கிடைத்த பின்னர் தான் வெடிபொருட்களை அழிப்பது குறித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய முடியும். எனவே அதுவரை வெடி பொருட்களை பாதுகாப்பான இடத்தில் வைக்கலாம் என கூறப்பட்டு உள்ளது.

    இந்த அறிக்கை அடிப்படையில் வெடிபொருட்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்ல மாஜிஸ்திரேட் அனுமதி அளிப்பார் என தெரிகிறது.

    அதன்பின்னர் வெடி பொருட்கள் சிவகங்கையில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான ஆயுதகிடங்கில் பாதுகாக்கப்படும். இறுதி அறிக்கை வந்தபின்னர் அவை அழிக்கப்படும் என்று ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம் பிரகாஷ் மீனா தெரிவித்துள்ளார். #Rameswarambullets

    Next Story
    ×