search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒகேனக்கல்லில் இருந்து திருப்பி அனுப்பப்படும் சுற்றுலா பயணிகள்
    X

    ஒகேனக்கல்லில் இருந்து திருப்பி அனுப்பப்படும் சுற்றுலா பயணிகள்

    ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அங்கு வரும் வடமாநில சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் போலீசார் உதவியுடன் திருப்பி அனுப்பி வருகிறார்கள்.
    ஒகேனக்கல்:

    ஒகேனக்கல்லுக்கு இன்று நீர்வரத்து 1 லட்சத்து 10 ஆயிரம் கனஅடியாக உள்ளது. மெயின் அருவி, ஐவர் பாணி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

    இன்று 10-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ள நீர் செல்கிறது. இதை கவனிக்காமல் ஆந்திரா மற்றும் வடமாநில சுற்றுலா பயணிகள் கார், வேன்-பஸ்களில் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வருகிறார்கள்.

    அவர்களை ஒகேனக்கல் வனத்துறை சோதனை சாவடி அருகே வருவாய் மற்றும் வனத்துறையினர் போலீசார் உதவியுடன் திருப்பி அனுப்பி வருகிறார்கள்.

    அவர்கள் காவிரி ஆற்றில் செல்லும் வெள்ளத்தை பார்த்து விட்டு செல்பி எடுத்து திரும்பி செல்கிறார்கள்.

    Next Story
    ×