search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒகேனக்கல்லில் 18-வது நாளாக குளிக்க - பரிசல் இயக்க தடை
    X

    ஒகேனக்கல்லில் 18-வது நாளாக குளிக்க - பரிசல் இயக்க தடை

    ஒகேனக்கல் பகுதிகளில் மெயினருவி, சினிபால்ஸ், காவிரி ஆற்றங்கரையோரம் ஆகிய பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசலில் செல்லவும் இன்று 18-வது நாளாக தடை விதிக்கப்பட்டு உள்ளது. #Hogenakkal
    ஒகேனக்கல்:

    கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் தென்மேற்கு பருவ மழை பெய்தது. இதனால் அங்குள்ள அணைகள் நிரம்பி உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    இந்த நீர் கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது. மெயினருவி, சினிபால்ஸ், ஐந்தருவி ஆகிய பகுதிகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டது. கர்நாடக மாநிலத்தில் மழை குறைந்ததால் அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு தற்போது குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நேற்று 70 ஆயிரம் கனஅடியாக வந்து கொண்டிருந்த நீர்வரத்து இன்று சற்று சரிந்து 50 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. நீர்வரத்து குறைந்த போதிலும் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    நீர்வரத்து அதிகமாக இருப்பதால் ஒகேனக்கல் பகுதிகளில் மெயினருவி, சினிபால்ஸ், காவிரி ஆற்றங்கரையோரம் ஆகிய பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசலில் செல்லவும் இன்று 18-வது நாளாக தடை விதிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து கர்நாடக மாநில அணைகளில் இருந்து வரும் தண்ணீரின் அளவை பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். #Hogenakkal

    Next Story
    ×