search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒரத்தநாடு அருகே நண்பர் மனைவியை ஆபாச படமெடுத்து மிரட்டிய வக்கீல்
    X

    ஒரத்தநாடு அருகே நண்பர் மனைவியை ஆபாச படமெடுத்து மிரட்டிய வக்கீல்

    நண்பரின் மனைவியிடம் நெருங்கி பழகி அதனை ஆபாச வீடியோ எடுத்து பணம் கேட்டு வக்கீல் மிரட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஒரத்தநாடு:

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே பாப்பாநாடு பகுதி வடக்கு கோட்டையை சேர்ந்தவர் சேகர்(பெயர் மாற்றப்பட்டுள்ளது). அதே பகுதி வெள்ளூரை சேர்ந்தவர் தேவி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இருவரும் காதலித்து திருமணம் செய்துள்ளனர். தேவி பி.எஸ்.சி பே‌ஷன் டெக்னாலஜி படித்தவர்.

    இருவரது காதல் திருமணத்துக்கு சேகரின் நண்பரும், வக்கீலுமான அன்பரசன் என்பவர் உதவியுள்ளார். அன்பரசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். இன்னும் திருமணமாகவில்லை.

    இந்நிலையில் திருமணம் ஆன சில மாதங்களிலேயே சேகர் வேலை தேடி லண்டன் சென்று விட்டாராம்.

    இந்த நிலையில் கணவர் வெளிநாடு சென்றதால் தேவி வெள்ளூரில் உள்ள தனது வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். வக்கீல் அன்பரசன் அவ்வப்போது தேவியிடம் போனில் பேசி வந்ததால் இருவரும் நெருக்கமாகினர்.

    பின்னர் தேவியை சென்னைக்கு வரவழைத்த அன்பரசன் அங்கு ஒரு அழகு நிலையத்தில் வேலை வாங்கி தந்ததோடு அவரை பல்வேறு இடங்களுக்கும் அழைத்து சென்றுள்ளார். இதில் இருவரும் நெருங்கிப் பழகி வந்துள்ளனர். இதையடுத்து சென்னையிலேயே தேவிக்கு தனியாக அழகு நிலையம் அமைத்து கொடுத்த அன்பரசன் தனது கட்டுப்பாட்டில் தேவியை கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

    மேலும் புதுச்சேரி, திருப்பதி போன்ற இடங்களுக்கு தேவியை அழைத்து சென்று நெருக்கமாக இருந்தபோது தேவிக்கு தெரியாமல் அதனை செல்போனில் படம் எடுத்து வைத்துக்கொண்டாராம். ஒரு கட்டத்தில் தனக்கு பணம் தேவை என்று கூறி தேவியிடம் அடிக்கடி பணம் வாங்கி வந்ததாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் தன்னிடம் நெருக்கமாக இருந்ததை அன்பரசன் படம் எடுத்து வைத்துள்ளதை அறிந்த தேவி பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

    இதனால் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தேவி தனது சொந்த ஊரான வெள்ளூருக்கு வந்து தனது குடும்பத்தாரிடம் கூறி அழுதுள்ளார். பின்னர் அன்பரசன் கடந்த மாதம் 12-ந்தேதி வெள்ளூருக்கு வந்து நான் உனக்கு செலவு செய்த பணம் ரூ.2½ லட்சத்தை திருப்பி கொடு. இல்லை என்றால் இந்த ஆபாச படம் மற்றும் வீடியோவை உனது கணவருக்கும், இணைய தளத்திலும் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.

    அப்போது அங்கிருந்த தேவியின் உறவினர்கள் அன்பரசனிடம் இருந்த 2 செல்போன்களையும் பறித்து அதில் இருந்த சிம் கார்டுகளை எடுத்துக் கொண்டனராம். இதையடுத்து பாப்பாநாடு போலீசில் அன்பரசன் புகார் கொடுத்தார். இதேபோல் தேவியும் பாப்பாநாடு போலீசில் தன்னை ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டுவதாக புகார் கொடுத்தார்.

    ஆனால் புகாரின்பேரில் போலீசார் நடவடிக்கை எடுக்காததால் இதுபற்றி அவர் தஞ்சை டி.ஐ.ஜி, எஸ்.பி., ஆகியோரிடம் புகார் கொடுத்தார். இதனால் போலீசார் தேவியின் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது அன்பரசனிடம் நெருக்கமாக இருந்ததை தேவிக்கு தெரியாமல் ஆபாச வீடியோ எடுத்து இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் அதனை செல்போனில் மட்டுமல்லாது தனது லேப்-டாப்பிலும் பதிவு செய்து வைத்திருப்பது தெரியவந்தது.

    இந்நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தன்னை தேடி வருவதை தெரிந்து கொண்ட அன்பரசன் தலைமறைவாகி விட்டார். போலீசார் அவரை தொடர்ந்து தேடி வருகின்றனர். #tamilnews
    Next Story
    ×