என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கருணாநிதிக்கு உடல் நலக்குறைவு - தி.மு.க. பிரமுகர்கள் மாரடைப்பால் மரணம்
Byமாலை மலர்31 July 2018 5:13 AM GMT (Updated: 31 July 2018 5:13 AM GMT)
கருணாநிதிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ள அதிர்ச்சியில் ஓய்வு பெற்ற ஆசிரியர் மற்றும் தி.மு.க. பிரமுகர் மாரடைப்பால் இறந்தனர். #KarunanidhiHealth
கந்தர்வக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே உள்ள கல்லுக்காரன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 80). நாதஸ்வர கலைஞரான இவர், தி.மு.க. கிளைச்செயலாளராகவும் இருந்து வந்தார்.
இந்த நிலையில் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அதிர்ச்சி அடைந்த கணேசன் மிகுந்த மனவேதனையில் இருந்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு, டி.வி.யில் கருணாநிதி உடல்நிலை பற்றி ஒளிபரப்பான செய்திகளை பார்த்து கொண்டு இருந்த கணேசனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அவரது உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
மற்றொரு சம்பவம்...
இதே போல் பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம் கிராமம் 7-வது வார்டை சேர்ந்தவர் நல்லுசாமி (60). ஓய்வுபெற்ற ஆசிரியரான இவர் தி.மு.க. தொண்டரும் ஆவார்.
இவரும் நேற்று முன்தினம் இரவு கருணாநிதிக்கு உடல் நலக்குறைவு பற்றிய செய்தியை டி.வி.யில் பார்த்து கொண்டிருந்தபோது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். மரணமடைந்த 2 பேரின் உடலுக்கும் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். #KarunanidhiHealth
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே உள்ள கல்லுக்காரன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 80). நாதஸ்வர கலைஞரான இவர், தி.மு.க. கிளைச்செயலாளராகவும் இருந்து வந்தார்.
இந்த நிலையில் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அதிர்ச்சி அடைந்த கணேசன் மிகுந்த மனவேதனையில் இருந்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு, டி.வி.யில் கருணாநிதி உடல்நிலை பற்றி ஒளிபரப்பான செய்திகளை பார்த்து கொண்டு இருந்த கணேசனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அவரது உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
மற்றொரு சம்பவம்...
இதே போல் பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம் கிராமம் 7-வது வார்டை சேர்ந்தவர் நல்லுசாமி (60). ஓய்வுபெற்ற ஆசிரியரான இவர் தி.மு.க. தொண்டரும் ஆவார்.
இவரும் நேற்று முன்தினம் இரவு கருணாநிதிக்கு உடல் நலக்குறைவு பற்றிய செய்தியை டி.வி.யில் பார்த்து கொண்டிருந்தபோது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். மரணமடைந்த 2 பேரின் உடலுக்கும் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். #KarunanidhiHealth
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X