search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பளுகல் அருகே சிறுமிக்கு செக்ஸ் தொந்தரவு- முதியவர் மீது போஸ்கோ வழக்கு
    X

    பளுகல் அருகே சிறுமிக்கு செக்ஸ் தொந்தரவு- முதியவர் மீது போஸ்கோ வழக்கு

    பளுகல் அருகே சிறுமியை தோட்டத்திற்கு அழைத்துச் சென்று செக்ஸ் தொல்லை கொடுத்து முதியவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    நாகர்கோவில்:

    பளுகலை அடுத்த ஆலம்பாறை பகுதியைச் சேர்ந்தவர் ஜாண்சன்(வயது77). தொழிலாளி. இவர் கடந்த 28-ந்தேதி அதே பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவரை அருகே உள்ள தோட்டத்திற்கு அழைத்துச் சென்று செக்ஸ் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அந்த சிறுமி சத்தம் போட்டுள்ளார். மேலும் இந்த சம்பவத்தை வெளியில் சொல்ல கூடாது என ஜாண்சன் சிறுமியை மிரட்டில் உள்ளார். சிறுமியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் வருவதை பார்த்ததும் முதியவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    மேலும் சம்பவம் குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறும்போது, தான் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த போது முதியவர் அந்த பகுதியில் உள்ள தோட்டத்திற்கு வருமாறு கூறினார். அங்கு தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாகவும், இதனை வெளியில் சொல்ல கூடாது என மிரட்டினார். இவ்வாறு இந்த சிறுமி கூறி அழுதார். இது குறித்து மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் வனிதா, சப்-இன்ஸ்பெக்டர் பிரேமா ஆகியோர் முதியவர் ஜாண்சன் மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர். போலீசார் வழக்குபதிவு செய்ததையடுத்து முதியவர் ஜாண்சன் தலைமறைவாகி விட்டார். தலைமறைவாகி உள்ள ஜாண்சனை போலீசார் தேடி வருகின்றனர்.
    Next Story
    ×