search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செஞ்சி அருகே ஸ்டவ் வெடித்து தாய்-குழந்தை உயிரிழப்பு
    X

    செஞ்சி அருகே ஸ்டவ் வெடித்து தாய்-குழந்தை உயிரிழப்பு

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மண்எண்ணெய் ஸ்டவ் வெடித்து தீப்பிடித்ததில் தாய் மற்றும் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தனர். #StoveBursts
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள  பெருங்காப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரேகா. இவர் இன்று காலை மண்எண்ணெய் ஸ்டவ் அடுப்பில் சமையல் செய்துகொண்டிருந்தார். அப்போது ஸ்டவ் திடீரென வெடித்துச் சிதறி தீப்பிடித்தது. ரேகாவும், அவரது 10 மாத ஆண் குழந்தை நவீனும் நெருப்பில் சிக்கிக்கொண்டனர். இதில் பலத்த தீக்கயம் அடைந்த தாயும், குழந்தையும் சிறிது நேரத்தில் துடிதுடித்து இறந்தனர்.



    இந்த விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். #StoveBursts
    Next Story
    ×