search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒகேனக்கல்லில் நீர்வரத்து 22 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
    X

    ஒகேனக்கல்லில் நீர்வரத்து 22 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

    ஒகேனக்கல்லுக்கு நேற்று காலை 17 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று சற்று உயர்ந்து 22 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. #Hogenakkal #Cauvery
    ஒகேனக்கல்:

    கர்நாடக மாநிலத்தில் கனமழை காரணமாக அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பின. அதில் இருந்து உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. தற்போது அணைகளில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் கர்நாடக-தமிழக எல்லை பகுதியான பிலிக்குண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து சரிந்தது நேற்று 17 ஆயிரம் கனஅடியாக குறைந்து வந்தது.

    நேற்று மதியம் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால் கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு சற்று அதிகரித்தது. நேற்று காலை ஒகேனக்கல்லுக்கு 17 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று சற்று உயர்ந்து 22 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

    இன்று விடுமுறை நாள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். நேற்று முதல் ஒகேனக்கல்லில் கோத்திக்கல்பாறை என்ற இடத்தில் பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளதால் சுற்றுலா பயணிகள் பரிசலில் சென்று மகிழ்ந்தனர். ஒகேனக்கல்லில் தொடர்ந்து 48-வது நாளாக மெயினருவில் குளிக்க தடைவிதிக்கப்பட்டு உள்ளது.  #Hogenakkal #Cauvery
    Next Story
    ×