என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
மத்திய அரசை எதிர்த்து போராட மு.க.ஸ்டாலின் தயங்குகிறார் - தம்பிதுரை
Byமாலை மலர்12 Sep 2018 4:08 AM GMT (Updated: 12 Sep 2018 4:08 AM GMT)
மத்திய அரசை எதிர்த்து போராட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தயங்குகிறார் என்று பாராளுமன்ற துணைசபாநாயகர் தம்பிதுரை கூறினார். #Thambidurai #MKStalin
மணப்பாறை:
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களிடம் குறை களை கேட்டறிந்தார். அப்போது அணியாப்பூரில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பாரத ரத்னா வேண்டுமா? பாரத் பந்த் வேண்டுமா? என்றால் பாரத ரத்னா கலைஞருக்கு தேவைப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு தான் குறைக்க வேண்டும். ஜி.எஸ்.டி. வந்த பின் மாநில அரசு நிதிப்பற்றாக்குறையால் தத்தளித்துக்கொண்டிருக்கின்றது.
ராஜஸ்தான், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பெட்ரோல் விலை குறைக்கப்பட்டிருக்கிறது என்றால் தேர்தல் காரணமாக குறைக்கப்பட்டிருக்கலாம். அவர்களுக்கு மத்திய அரசு நிதி அளிக்கும். ஆனால் தமிழகத்திற்கு மத்திய அரசு தர வேண்டி நிதியை தராமல் வஞ்சித்து வருகிறது. இந்தநிலையில் பெட்ரோல்-டீசல் விலையை குறைத்தால் கடும் நிதி நெருக்கடியை சந்திக்க வேண்டிய நிலை வரும் என்பதால் விலை குறைக்க வாய்ப்பில்லை. இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க. கண்டிப்பாக வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார். #Thambidurai #MKStalin
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களிடம் குறை களை கேட்டறிந்தார். அப்போது அணியாப்பூரில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பேரறிவாளர், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையை பொறுத்தவரை அரசின் முடிவை ஆளுனர் செயல்படுத்துவார் என்ற நம்பிக்கை உள்ளது. பெட்ரோல்-டீசல் விலை உயர்வை எதிர்த்து காங்கிரஸ் நடத்திய பாரத் பந்தில் தி.மு.க. பங்கேற்றும் பிசுபிசுத்து போனது. காரணம் மத்திய அரசை எதிர்த்து போராட மு.க.ஸ்டாலின் தயங்குகிறார்.
பாரத ரத்னா வேண்டுமா? பாரத் பந்த் வேண்டுமா? என்றால் பாரத ரத்னா கலைஞருக்கு தேவைப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு தான் குறைக்க வேண்டும். ஜி.எஸ்.டி. வந்த பின் மாநில அரசு நிதிப்பற்றாக்குறையால் தத்தளித்துக்கொண்டிருக்கின்றது.
ராஜஸ்தான், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பெட்ரோல் விலை குறைக்கப்பட்டிருக்கிறது என்றால் தேர்தல் காரணமாக குறைக்கப்பட்டிருக்கலாம். அவர்களுக்கு மத்திய அரசு நிதி அளிக்கும். ஆனால் தமிழகத்திற்கு மத்திய அரசு தர வேண்டி நிதியை தராமல் வஞ்சித்து வருகிறது. இந்தநிலையில் பெட்ரோல்-டீசல் விலையை குறைத்தால் கடும் நிதி நெருக்கடியை சந்திக்க வேண்டிய நிலை வரும் என்பதால் விலை குறைக்க வாய்ப்பில்லை. இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க. கண்டிப்பாக வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார். #Thambidurai #MKStalin
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X