search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கேயம் அருகே ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம் - அழகான ஆண் குழந்தை பிறந்தது
    X

    காங்கேயம் அருகே ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம் - அழகான ஆண் குழந்தை பிறந்தது

    காங்கேயம் அருகே மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஆம்புலன்சில் பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    காங்கேயம்:

    காங்கேயம் தாலுகா பூசாரிவலசைச் சேர்ந்தவர் அருண்குமார் (வயது 25). இவருடைய மனைவி வெண்ணிலா (21) கர்ப்பிணியான இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதுகுறித்து உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்ததை தொடர்ந்து நேற்றுகாலை காங்கேயத்தில் இருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் கர்ப்பிணி வெண்ணிலாவை ஏற்றிக்கொண்டு வெள்ளகோவில் அரசு மருத்துவமனைக்கு சென்றது.

    மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஆம்புலன்சில் அந்த பெண்ணுக்கு பிரசவம் ஆனது. அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். மருத்துவ உதவியாளர் சுந்தரமகாலிங்கம், ஆம்புலன்ஸ் டிரைவர் பிரபாகரன் ஆகியோர் பிரசவத்திற்கு உதவி செய்தனர். அதைத்தொடர்ந்து தாயும், சேயும் வெள்ளகோவில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
    Next Story
    ×