search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீட்டில் சிறை வைக்கப்பட்ட காதலியை கடத்த முயன்ற காதலன் கைது
    X

    வீட்டில் சிறை வைக்கப்பட்ட காதலியை கடத்த முயன்ற காதலன் கைது

    எடப்பாடி அருகே வீட்டில் சிறை வைக்கப்பட்ட காதலியை நண்பர்களுடன் கடத்த முயன்ற காதலன் உள்பட 7 பேரை கைது செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.
    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் இளம்பிள்ளையை அடுத்த காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் தமிழரசன் (25).

    இவர் கொங்கணாபுரம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த மாணவியின் பெற்றோர் அவரை கல்லூரிக்கு அனுப்பாமல் வீட்டில் சிறை வைத்தனர்.

    இது குறித்து அந்த மாணவி தமிழரசனுக்கு செல்போனில் தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த தமிழரசன் அந்த மாணவியை வீடு புகுந்து கடத்தி சென்று திருமணம் செய்ய திட்டமிட்டார்.

    அதன்படி தமிழரசன் கல்லூரி மாணவர்கள் உள்பட 6 பேருடன் நேற்று அந்த மாணவியின் வீட்டிற்குள் அதிரடியாக புகுந்தார். பின்னர் அங்கிருந்த மாணவியை அந்த கும்பல் கடத்தி செல்ல முயன்றது. அதனை தடுத்த மாணவியின் தந்தையை தாக்கி விட்டு தப்பியோட முயன்றனர்.

    மாணவியின் தந்தை எழுப்பிய கூக்குரலை கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு ஓடி வந்தனர். பின்னர் 7 பேரையும் சுற்றி வளைத்து பிடித்த அவர்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    அவர்கள் மீது கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்த போலீசார் 7 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews
    Next Story
    ×